Idhayam Matrimony

தென்காசி முதியோர் காப்பக விவகாரம்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

தென்காசி, தென்காசி முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்தது. 

தென்காசியில் சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களில் 3 பேர் பெண்கள். ஒருவர் ஆண் ஆவார்.

இந்த விவகாரத்தில், முதியோர் காப்பக நிர்வாகி ராஜேந்திரன், சாம்பவர்வடகரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் கடந்த 17-ந்தேதி பலியானார். இதனால், முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்தது. இந்த சூழலில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் மற்றும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து