எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், டி.எம்.சி. ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவுகளின்படி, குஜராத்தில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பா.ஜ.க.வும், ஆம் ஆத்மி கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
குஜராத்தின் காடி தனித்தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர குமார் 99,742 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 39,452 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 60,290 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்பாய் சாவ்தா இரண்டாம் இடத்தையும், 3090 வாக்குளைப் பெற்று ஆம் ஆத்மி கட்சியின் சாவ்தா ஜகதீஷ்பாய் கன்பத்பாய் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
குஜராத்தின் மற்றொரு தொகுதியான விசாவதாரில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இத்தாலியா கோபால், 75,942 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரைவிட 17,554 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் கிரித் படேல், 58,388 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இத்தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் நிதின் ரன்பாரியா 5501 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷன் அஷூ 24,542 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள பா.ஜ.க. வேட்பாளர் ஜீவன் குப்தா 20,323 வாக்குகள் பெற்றுள்ளார்.
கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் அர்யாதன் சவுகத் 77,737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஸ்வராஜைவிட 11,077 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். ஸ்வராஜ் 66,660 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மோகன் ஜார்ஜ் 8,648 வாக்குகளுடன் 4-ம் இடம் பிடித்துள்ளார். அன்வர் என்ற சுயேட்சை வேட்பாளர் 19,760 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் இடைத்தேர்தலில் டி.எம்.சி வேட்பாளர் அலிஃபா அகமது 1,02,759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 50,049 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் ஆஷிஷ் கோஷ் 52,710 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் கபில் உத்தின் ஷேக் 28,348 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-06-2025.
23 Jun 2025 -
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
23 Jun 2025திருட்டு தொழில் செய்யும் நாயகன் வைபவ் மற்றும் அவரது நண்பர் மணிகண்ட ராஜேஷ், இருவரையும் 2 கோடி பணத்திற்காக தாதா சிஹான் ஹூசைனி துரத்துகிறார்.
-
குபேரா திரை விமர்சனம்
23 Jun 2025அரசின் ஒரு திட்டத்தை அபகரிக்க நினைக்கும் தொழிலதிபர் ஒருவர், ஒரு லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு லஞ்சமாக கொடுத்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சிக்கிறார்.
-
விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ்
23 Jun 2025அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திர
-
டி.என்.ஏ. திரை விமர்சனம்
23 Jun 2025அதர்வா மனைவி நிமிஷா சஜயனுக்கு பிறக்கும் குழந்தை சில நிமிடங்களில் மாற்றப்பட்டு கடத்தப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தை கடத்தப்படவில்லை என்கிறது.
-
கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
23 Jun 2025அமராவதி, கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வால்பாறைக்கு இடைத்தேர்தலா ? தேர்தல் ஆணையம் விளக்கம்
23 Jun 2025சென்னை, வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது சென்னை போலீசார் நடவடிக்கை
23 Jun 2025சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை - நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தாக்குதல் திட்டம் எதிரொலி: அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
23 Jun 2025ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் குட் டே படம்
23 Jun 2025பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் குட் டே.
-
தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான்: அமைச்சர் ரகுபதி பேட்டி
23 Jun 2025புதுக்கோட்டை, தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான். ஒரே இயக்குபவர் தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
23 Jun 2025சென்னை, 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?
23 Jun 2025தெஹ்ரான், ஐ.நா.
-
தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு
23 Jun 2025சென்னை, தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு நிலவியது.
-
தமிழ்நாட்டு "மா" விவசாயிகளுக்கும் இழப்பீடு: இ.பி.எஸ். வலியுறுத்தல்
23 Jun 2025சென்னை : தமிழ்நாட்டு "மா" விவசாயிகளுக்கும் இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு தாக்கல்
23 Jun 2025சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் இடைவிடாது ஒலித்த சைரன்
23 Jun 2025டெல் அவிவ், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன.
-
ஈரானில் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல்: 15 போர் விமானங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
23 Jun 2025டெல் அவிவ் : ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
-
புகையிலை இல்லா இளைஞர் நலன் இயக்கம்: புதுச்சேரிக்கு மத்திய அரசின் விருது
23 Jun 2025புதுச்சேரி, புகையிலை இல்லா இளைஞர் நலன் இயக்கம் 2.0-ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
-
தென்காசி முதியோர் காப்பக விவகாரம்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
23 Jun 2025தென்காசி, தென்காசி முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்தது.
-
ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்யா அறிவிப்பால் மேலும் பதற்றம்
23 Jun 2025மாஸ்கோ : ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு
23 Jun 2025புதுடெல்லி : ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று (ஜூன் 23) உயர்ந்துள்ளது.
-
பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்: விஜய்
23 Jun 2025சென்னை, உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி
23 Jun 2025மாஸ்கோ : இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புதினை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து பேசினார்.
-
ஆபரேஷன் சிந்து: இஸ்ரேலில் இருந்து மேலும் இந்தியர்கள் 160 பேர் மீட்பு
23 Jun 2025ஜெருசலேம், 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை மூலம் இஸ்ரேலில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.