முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      ஆன்மிகம்
Tiruchendur 2024-04-13

மதுரை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில்  தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ல் நடைபெறுகிறது.  கோவில் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறும்,” எனக் கூறப்பட்டது. இதை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் மனுக்களுடன் சேர்த்து ஜூலை 2-ல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர்  சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், “ஜூலை 7ல் நல்ல முகூர்த்த நேரம் என்பது மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தான். தோஷங்கள் இல்லாத இந்த நேரத்தில் நேரத்தில் கும்பிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்க தடை விதிக்க வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “நீதிமன்றம் அமைத்த குழு கும்பாபிஷேக நேரத்தை முடிவு செய்துள்ளது. அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தலாம். கோவில் கும்பாபிஷேகத்தை பொறுத்தவரை கோவில் விதாயகர் குறிக்கும் நேரம் தான் முக்கியம். இனிவரும் காலங்களில் கோவில் விதாயகர் குறிப்பிடும் நேரத்தை எழுத்துப் பூர்வமாக பெற்று அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்,” என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து