முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025      இந்தியா
Minnal 2023 06 26

Source: provided

பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பீகாரில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடையே கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களில் 33 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மின்னல் தாக்குதல்களில் அதிகளவில் உயிரிழந்தனர்

இதுகுறித்து பேசிய பீகார் மாநில பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விஜய் குமார் மண்டல், “பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு மின்னல் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின்னல் தாக்குதலால் உயிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் 243 பேர் மின்னல் தாக்குதலால் உயிரிழந்ததாகவும், 2023 ஆண்டு 275 பேர் உயிரிழந்ததாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து