எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத காரணத்தினால் பா.ம.க.வின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் பா.ம.க. தலைவர் என்ற பெயரிலேயே அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னை நீக்கியதாக ராமதாஸ் அறிவித்துள்ளநிலையில் கடலூரில் நிர்வாகிகளுடன் அன்புமணி தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் டங்ஸ்டன், தாமிரம், நிக்கல், பிளாட்டினம் உள்ளிட்ட 24 வகையான முக்கியக் கனிமங்களையும், தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான அணுக் கனிமங்களையும் தோண்டி எடுப்பதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை என்றும், இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கும்,வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இது தொடர்பாக கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்துள்ள அலுவலகக் குறிப்பாணை இப்போது தான் வெளிவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் உரிமைப் பறிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, எந்தவொரு திட்டத்தையும் ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து கருத்து தெரிவிக்க மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் பறிக்கும் செயலாகும். இதை ஏற்க முடியாது. அண்மையில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்திலும் நான் பங்கேற்று இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் நாடகங்களை சுட்டிக்காட்டிய பிறகு அத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டால் அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்ற அச்சமும் தான்.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி கோரும் மத்திய அரசின் விண்ணப்பத்தின் மீது பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்த கருத்துக்கேட்புக் கூட்டம் பொதுமக்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தை நேற்று வரை தமிழக அரசால் நடத்த முடியவில்லை.
மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணையின்படி டங்ஸ்டன் சுரங்கம், கிள்ளியூர் அணுக்கனிம சுரங்கம் ஆகியவற்றை மக்களின் கருத்துகளையோ, மாநில அரசின் கருத்துகளையோ கேட்காமல் அமைத்து விட முடியும். அணுக்கனிம சுரங்கங்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை அணுக்கதிர்வீச்சு ஆபத்துக்கும், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அதேபோல், பிற சுரங்கங்கள் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும். மக்களைக் காக்க வேண்டிய அரசே இதை செய்யக்கூடாது. எனவே, அணுக்கனிமங்கள் மற்றும் முக்கியக் கனிம சுரங்கங்களை அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை; இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்ற ஆணையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்
11 Sep 2025புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்
11 Sep 2025சென்னை, வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவை போற்றுவோம் என்று அவரது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் த
-
இமானுவேல் சேகரனாருக்கு அன்புமணி ராமதாஸ் புகழாரம்
11 Sep 2025சென்னை: இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்
11 Sep 2025சென்னை, தென் மாவட்டங்களில் சாதி வன்கொடுமைகள் தலை விரித்தாடுவாதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
-
கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 15 ஆயிரம் கைதிகள்..!
11 Sep 2025காத்மாண்டு: கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்
11 Sep 2025சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் மீது சீமான் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
-
அரியலூர் - சென்னை இடையே 3 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
11 Sep 2025அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று
-
பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை வெளியிடு
11 Sep 2025சென்னை: பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
-
தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்: சபரிமலை தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்
11 Sep 2025பெரும்பாவூர்: சபரிமலை அய்யப்ப கோவிலில் தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றிய தேவசம்போர்டுக்கு, கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால்....ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு கல்வித்துறை புதிய உத்தரவு
11 Sep 2025சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
-
ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 25 ஆயிரம் உயர்வு ரூ.81,200 தொட்டு விலை புதிய உச்சம்
11 Sep 2025சென்னை: தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து, இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறது.
-
உலக பெரும் பணக்காரர் பட்டியல்: லாரி எலிசன் முதலிடம்
11 Sep 2025வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய லாரி எலிசன் உள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓசூரில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
11 Sep 2025ஓசூர், முதல்வர் மு.க.
-
செப்.15 முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாய் வரை உயர்வு
11 Sep 2025புதுடெல்லி, காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீட்டுக்கான ஒரு நாள் யு.பி.ஐ. பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது.
-
டெட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
11 Sep 2025சென்னை, டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
இந்தியாவுக்கு வரி: ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்ட ட்ரம்ப்
11 Sep 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கு 100 சதவீதம் வரி விதியுங்கள் விதிக்க ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
11 Sep 2025புதுடெல்லி: சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு அனுமதி
11 Sep 2025பெரம்பலூர்: பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
-
சம்பள உயர்வை எதிர்த்து போராட்டம்:இந்தோனேசியாவில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் அதிரடி நீக்கம்
11 Sep 2025ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சம்பள உயர்வை எதிர்த்து போராட்டத்தில் நிதி மந்திரி உள்பட 5 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.
-
நேபாளத்தின் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ ஆலோசனை
11 Sep 2025காத்மாண்டு: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு
11 Sep 2025வாஷிங்டன்: டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கிருஷ்ணகிரி, எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
11 Sep 2025ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக நிறுவவுள்ள மல்
-
மகாராஷ்டிர கவர்னராக குஜராத் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
11 Sep 2025மும்பை, குஜராத் மாநில கவர்னர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் நாகை, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Sep 2025சென்னை, தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளத
-
சட்டத்தை மதித்து நடப்போம்: த.வெ.க.வினருக்கு விஜய் உத்தரவு
11 Sep 2025சென்னை: விஜயின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு போலீசார் விதித்த நிபந்தனைகள் மதித்து நடப்போம் என்று கூறினார்