முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2025      தமிழகம்
Gold 2024-04-06

Source: provided

திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க  4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி, திண்டுக்கல் மாவட்டத்தில் நகைகளை விற்பனை செய்துவிட்டு, 10 கிலோ தங்கத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த கார் திருச்சி சமயபுரம் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்துள்ளனர். 

பின்னர் அவர்கள் காரில் இருந்த வியாபாரி உள்பட 3 பேர் மீது மிளகாய் பொடியை தூவி, அவர்களிடம் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வியாபாரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து