எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து பரிசளிப்பு விழாவில் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ இந்த வெற்றியைப் பரிசாகக் கருதுகிறேன். நமது ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்கிறோம். வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம், அதைப் பெற முடிந்தது. நான் எப்போதும் செய்ய வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயம் என்னவென்றால் இறுதிவரை களத்தில் நின்று பேட் செய்வது. இது ஒரு சரியான தருணம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்” என்றார்.
_________________________________________________________________________________________________
இந்திய வீராங்கனைக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இதில் நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான கஜகஸ்தானின் நாசிம் கிஜாய்பேவுடன் மோதினார்.
இதில் 4-1 என்ற கணக்கில் மீனாட்சி வெற்றிப் பெற்று தங்க பதக்கம் வென்று அசத்தினார். இந்த தொடரில் இந்திய தரப்பில் வீரர்கள் யாரும் பதக்கம் வெல்லாத நிலையில் வீராங்கனைகள் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை அறுவடை செய்து தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
_________________________________________________________________________________________________
பாக். தோல்வி குறித்து அக்ரம்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 63 பந்துகளில் ரன்கள் எடுக்காததே தங்களுடைய தோல்விக்கு காரணமானதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, குல்தீப் பந்து வீசும் விதத்தை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. அது பற்றி நான் போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சியில் கிரேட் பேட்ஸ்மேன் கவாஸ்கரிடம் பேசினேன். அப்போது குல்தீப்பின் முன்னங்கையை படிக்காத வரை உங்களால் அவர் எம்மாதிரியான பந்துகளை வீசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாது என கவாஸ்கர் தெரிவித்தார். அவர் சொன்னதே நடந்தது.
குல்தீப்புக்கு எதிராக ஒவ்வொரு 2வது பந்திலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் அடித்தார்கள். அப்படியானால் நீங்கள் அவருக்கு எதிராக எதையுமே படிக்கவில்லை என்று அர்த்தம். பாகிஸ்தான் தங்களுடைய ஆட்டத்தில் 63 டாட் பந்துகளை விளையாடியது. அப்படியானால் 10 ஓவருக்கு மேல் அவர்கள் டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளனர். அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பாராட்டுக்கள். ஹசன் நவாஸ், உங்களுடைய கேப்டன் ஹாரிஸ் ஆகிய அனைவருமே திறமையான வீரர்கள். ஆனால் நீங்கள் சூழ்நிலையைப் படித்து உங்களுடைய பவுலரை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும். ஆனால் அவர்கள் அனைவருமே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக மட்டுமே விளையாட முயற்சித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
_________________________________________________________________________________________________
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எதிர்ப்பு
இந்திய அணியின் செயலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய போட்டியில் (அதாவது நேற்று முன்தினம் ) விளையாட்டு அறம் இல்லாமல் போனது மிகவும் ஏமாற்றத்துக்குரியது. விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது. இனி வரும் காலங்களில் வெற்றிகள் அனைத்து அணிகளாலும் கண்ணியத்துடன் கொண்டாடப்படும் என்று நம்புவோம்” என பதிவிட்டுள்ளார்.
_________________________________________________________________________________________________
இந்தியாவுக்கு எதிராக பாக்., புகார்
கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது. இந்திய அணியின் இந்த செயலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவின் அந்த செயலுக்கு எதிராக ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது. இது பற்றி போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராப்ட் அவர்களிடம் பாகிஸ்தான் கொடுத்துள்ள புகாரில், அவர்களுடைய செயல் விளையாட்டின் உணர்வுக்கு எதிரானது. அவர்களுடைய செயலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்திலேயே எங்கள் கேப்டன் சல்மான் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
சக்தி திருமகன் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா
15 Sep 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன்னனோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
பிளாக்மெயில் திரைவிமர்சனம்
15 Sep 2025மருந்து கடை சப்ளையராக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் செய்யாத குற்றத்திற்காக தன் கடை உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
-
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார் ராகுல் காந்தி
15 Sep 2025பஞ்சாப் : பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினா
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை 6-வது லீக்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை 6-வது லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
சென்னையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக்கோரி காவல்துறையிடம் மனு
15 Sep 2025சென்னை, சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
-
முதல்முறையாக ராமதாஸ் மகள் பா.ம.க. கூட்டத்தில் பேச்சு
15 Sep 2025கிருஷ்ணகிரி : முதல்முறையாக டாக்டர் ராமதாசின் மகள் பா.ம.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
-
வரி - தடைகளை விதிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது : அதிபர் ட்ரம்புக்கு சீனா பதிலடி
15 Sep 2025பீஜிங் : வரி-தடைகளை விதிப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று ட்ரம்புக்கு சீனா கூறியுள்ளது.