எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார். ‘கோட் டூர் ஆஃப் இந்தியா’ எனும் திட்டத்தின்படி அர்ஜெண்டீனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, நேற்று (டிச. 13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், லேக் டவுன் திடலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது இளைய மகன் அப்ராம் ஆகியோர் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில், அவர்கள் மூவரும் கைகுலுக்கி உரையாடியதோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த விடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருவரது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகின்றது.
தேனிலவை ரத்து செய்த தம்பதி
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர். அவர் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி பங்கேற்றார். அவரை பார்ப்பதற்காக ஒரு தம்பதி தேனிலவை ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக மெஸ்ஸி ரசிகை கூறியதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. மெஸ்ஸியை பார்ப்பதற்காக எங்களது தேனிலவு திட்டத்தை ரத்து செய்து விட்டோம். நாங்கள் 2010-ம் ஆண்டு முதல் மெஸ்சியின் ஆட்டத்தை கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அவரது கணவரும் இதே தகவலை தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி ‘டி’ பிரிவில் தான்சானியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது புல்புலியா தலைமையிலான அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: முகமது புல்புலியா (கேப்டன்), ஜேஜே பாஸன், டேனியல் போஸ்மேன், கார்னே போத்தா, பால் ஜேம்ஸ், ஏனாதி கிட்ஷினி தெம்பலேத்து, மைக்கேல் க்ரூஸ்காம்ப், அட்னான் லகாடியன், பயண்டா மஜோலா, அர்மான் மனாக், பந்தில் எம்பாதா, லெதாபோ பஹ்லமோலாகா, ஜேசன் ரோல்ஸ், சோனி, ஜோரிச் வான்.
ஏழு படையப்பன் தோனி
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸானது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், எம்.எஸ்.தோனியை ஏழு படையப்பன் என பெயரிட்டு, புகைப்படம் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே.) எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. அதில், ரஜினி துண்டை தோளில் போடுவது போன்று, தோனி துண்டை தோளில் போட்டு இறங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. தோனியின் ராசியான எண் ஏழு. அதனை குறிக்கும் வகையில் ஏழு படையப்பன் என சி.எஸ்.கே. பெயரிட்டு உள்ளது.
அரையிறுதியில் இந்திய அணி
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது. இதில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 7-4, 7-4, 7-2 என்ற நேர்செட்டில் டீகான் ரஸ்செலை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 7-1, 7-6, 7-1 என்ற நேர்செட்டில் வான் நிகெர்க்கை விரட்டியடித்தார். மற்றொரு பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 7-3, 7-4, 7-4 என்ற நேர்செட்டில் ஹாய்லி வார்டை வீழ்த்தினார்.
ஷ்ரேயாஸ் உடன் காதலா?
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசிந்தது. ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வதந்திக்கு மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார். அதில், பிரபலங்களாக இருப்பவர்கள் என்றால் விமர்சனங்களும் வதந்திகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். ஆரம்ப காலங்களில் அவை எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது 'இதுவா?' என்று எளிதாக கடந்து செல்ல கற்றுக்கொண்டேன். தேவையற்ற விமர்சனங்களை நான் கவனிக்கவே மாட்டேன். எந்த வதந்தியும் என் மனநிலையையோ, என் வாழ்க்கையையோ பாதிக்காது" என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
13 Dec 2025மதுரை, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத
-
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
13 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க.
-
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல்-2 பேர் பலி
13 Dec 2025கீவ், உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டிச. 31க்குள் அமல்படுத்தப்படும் டாஸ்மாக் திட்டவட்டம்
13 Dec 2025சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
13 Dec 2025சென்னை, தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
13 Dec 2025திஸ்பூர், பாகிஸ்தானுக்கு ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமான படைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
-
முதியவர்களை குறிவைத்து மோசடி: அமெரிக்காவில் இந்தியருக்கு சிறை
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி செய்த இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
'சால்ட் லேக்' மைதானத்தில் சில நிமிடங்கள் இருந்த மெஸ்சி: கோபத்தில் ரசிகர்கள் கலவரம்
13 Dec 2025அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அமைச்சர் பெரியசாமி பேச்சு
13 Dec 2025திண்டுக்கல், வன்னியர்களுக்கு 13 சதவீரம் இடஓதுக்கீடு வழங்கியது தி.மு.க.தான் என்று அமைச்சர் பெரியசாமி பேசினார்.
-
புதுச்சேரி ரேஷன் கடை விவகாரம்: விஜய் பேசியது குறித்து த.வெ.க. நிர்வாகி விளக்கம்
13 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் த.வெ.க.
-
மதுரையில் வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Dec 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
13 Dec 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் சூர்யவன்ஷி புதிய சாதனை
13 Dec 2025துபாய், இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை இந்தியாவின் இளம் வீரர் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
8 அணிகள்...
-
திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பா.ஜ.க.: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
13 Dec 2025திருவனந்தபுரம், திவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்று தந்த கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
-
டெல்லியில் காற்று மாசுபாடு: மக்களின் உடல்நலம் பாதிப்பு
13 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மெஸ்சி
13 Dec 2025கொல்கத்தா, கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தனது முழுவுருவச்சிலையை மெஸ்சி நேற்று திறந்து வைத்தார்.
-
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி
13 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
-
அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித
-
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்
13 Dec 2025புதுடெல்லி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய


