எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி
நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்திருக்கிறேன்! சுஜா வருணி
அண்மையில் வெளியாகியுள்ள 'பென்சில்' படத்தில் ஜீ.வி. பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர் சுஜா வருணி.
இவருக்கு வசீகரமுகமும் நடிப்புத்திறனும் இருந்தும் இன்னும் ராமனின் கால் பட அகலிகை கல்லாகக் காத்திருந்தது போல நல்ல வாய்ப்புக்காக பொறுமையாகக் காத்திருக்கிறார்.
சுஜா வருணி இது பற்றிக் கூறும் போது " எனக்குப் புலம்பும் எண்ணமும் இல்லை.ஆதங்கமும் இல்லை. மற்றவர் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படும் குணமும் எனக்கு இல்லை.
நான் இப்போது நல்ல ஃபார்முக்கு வந்து இருக்கிறேன். வருகிற வாய்ப்புக்கு முழு அர்ப்பணிப்பு தர நான் தயாராக இருக்கிறேன். 'பென்சில்' படத்தில் நான் கதாநாயகி இல்லை என்றாலும் படம் முழுக்க வருவேன். கதையில் சஸ்பென்ஸ் முடிச்சில் என் கேரக்டர் இருக்கும். அதைப் பார்த்த பலரும் என்னிடம் அன்புடன் விசாரித்துப் பேசுகிறார்கள்.
என் சமூக வலைதளங்களில் தினமும் 200 பேராவது என் இன்பாக்ஸில் வந்து கருத்து சொல்கின்றனர். உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
நண்பர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் உறவினர்களும் பாராட்டுகின்றனர்.'' என்கிறார்.
இப்போது சுஜா நடித்து வரும் படங்கள் பற்றி என்ன கூறுகிறார்?
"அருண் விஜய்யுடன் 'வாடீல்' சசிகுமாரின் 'கிடாரி' மற்றும் 'சதுரம்-2' படங்களில் நடித்து வருகிறேன்.
'பென்சில்' படம் பார்த்து இரண்டு புதிய படவாய்ப்புகள் வந்திருக்கின்றன.
இதில் எல்லாமே பெயர் சொல்லும்படி, அடையாளம் கிடைக்கும்படியான கேரக்டர்கள் தான். ஆனால் அது பற்றி எதுவுமே வெளியில் சொல்லக் கூடாது என்று ஒப்பந்தமே போட்டுள்ளார்கள். என்னால் ஒரே கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கும் போரடிக்கும். பார்ப்பவர்களுக்கும் போரடிக்கும், திகட்டும்.
ஹாரர் படங்களில், சைக்கோத்தனமான கேரக்டர்களில், மனநிலை பிறழ்ந்த கேரக்டர்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். நெகடிவ் ரோல்களில் கூட நடிக்க நான் தயார்." என்றவரிடம் அப்படி யென்றால் கதாநாயகியாக நடிக்க ஆசை, ஆர்வம் இல்லையா? எனக் கேட்ட போது,
"கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மறுக்க நான் முட்டாள் அல்ல. அதே நேரம் போஸ்டரில் படம் போட்டால் மட்டுமே லீடு ரோல் என்பது அல்ல. என்னிடம் சுஜா நீ ஏன் லீடுரோல் எடுக்கக் கூடாது என்கிற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. படத்தில் முக்கியமாக சஸ்பென்ஸாக இருப்பதும் கூட 'லீடு ரோல்' என ஏற்க வேண்டியதுதான்.
சினிமா இப்போது மாறியிருக்கிறது. இப்போது கதாநாயகியை மையப்படுத்திய படங்களை விட குணச்சித்திரங்களை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன. படத்தை 'லீடு' செய்பவை இப்போது இப்படிப்பட்டவைதான் அப்படிப்பட்ட குணச்சித்திரமாகவும் நடிக்க ஆசை.''
அவ்வப்போது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறேன். அடுத்த படியேற ஆசை. அது மட்டுமல்ல பெயர் சொல்லும் கேரக்டர் செய்யவும் தயார்.'' என்கிறார்.
சுஜாவின் இளமை, தோற்றம், நடிப்புக்கு ஏன் இன்னமும் தடை தாண்டி சிரமத்துடன் போராடி ஓடும் நிலை உள்ளது ?
"சினிமாவில் சில விஷயங்கள் எனக்குப் புரிவதில்லை. எனக்குச் சரியான வழிகாட்டல் இல்லை. வழிகாட்ட எடுத்துச் சொல்ல சரியான ஆட்கள் இல்லை. சினிமாவில் எங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. அடுத்ததாக, நேரம் என்று ஒன்று வர வேண்டும். அது முக்கியம். அடுத்து திறமையும் வேண்டும்.
நான் இதுபற்றி வருந்துவதைவிட முயற்சியை, கடின உழைப்பை போடுவோம். அதற்குப் பலன் உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். இப்படியே என் பயணம் இருக்கிறது. முன்னே ஓடுபவரைப் பார்த்து பொறாமைப்பட்டாலும் பின்னே ஓடி வருபவரைப் பார்த்து கவலைப்பட்டாலும் என் ஓட்டத்தை கவனிக்க முடியாது. எனக்கு என் ஓட்டம் முக்கியம். '' என்றவர் தன் ரோல் மாடல் நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் என்கிறார்.
"அவர் இன்று எத்தனை பேருடன் நடித்தாலும் தனித்து தன்னை வெளிப்படுத்தி விடுவார். அவருக்கு தனித்த அடையாளம் கிடைத்திருக்கிறது. பாசிடிவ், நெகடிவ், டான்ஸ், வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் பெயர் வாங்கி விடுவார். இந்த இடம் அவருக்குச் எளிதாக கிடைக்கவில்லை. போராடித்தான் பெற்றிருக்கிறார். அவர்தான் எனக்கு முன் மாதிரி. அவர் இடத்தை பிடிக்க முடியுமோ முடியாதோ அவர் நிழலையாவது பிடிப்பேன்.''
யதார்த்தமும் நம்பிக்கையும் சுஜாவின் பேச்சில் தென்படுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 5 days ago |
-
இந்தியா போர் தொடுத்தால்.... பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்களின் ரகசிய தகவல் வெளியானது
03 May 2025இஸ்லாமாபாத் : இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என வெள்ளிக்கிழமை இரவில் நடந்த பாகிஸ்தான் ராணுவ சிறப்பு உயர்மட்டக்குழு கூட்டத்தில் ராணுவ உயர் கமாண்டோக்கள் த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2025
03 May 2025 -
பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்த தகவல்: இலங்கை சென்ற சென்னை விமானத்தில் திடீர் சோதனை
03 May 2025கொழும்பு, சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
-
தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை
03 May 2025சென்னை, சென்னையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
பா.ஜ.க.வின் அதிகார அத்துமீறலை சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க. எதிர்கொள்ளும்: மா.செ. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
03 May 2025சென்னை, “ஜூன் 1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு
03 May 2025சென்னை : கோடை விடுமுறை எதிரொலியால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
-
போப்பாகவே மாறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் : ஏ.ஐ. புகைப்படத்தால் சர்ச்சை
03 May 2025வாஷிங்டன் : போப்பாகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மாற்றிய டிரம்ப் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
-
இங்கிலாந்து மூதாட்டிக்கு உலகின் அதிக வயதுடைய மனிதர் பட்டம்
03 May 2025இங்கிலாந்து : உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது.
-
இங்கிலாந்து அரச குடும்பத்துடன் சமரசம் செய்ய இளவரசர் ஹாரி விருப்பம்
03 May 2025லண்டன், அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
-
ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்
03 May 2025சென்னை, ‘ரெட்ரோ’ படவிழாவில் தான் பேசியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார்.
-
அணை கட்டினால் அழித்து விடுவோம்: பாக். அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
03 May 2025டெல்லி : சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
-
சுதந்திர போராட்ட தியாகிக்கு வீடு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
03 May 2025சென்னை, சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைக்கு சென்னை உய
-
இந்தியா தாக்கும் அபாயம்: எல்லையோரங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை காலி செய்தது பாகிஸ்தான்
03 May 2025புது டில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இந்தியா எதிர்பாராத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையோர பயங்கரவாத முகாம்களை பாகிஸ்
-
2-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
03 May 2025சென்னை, மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு
03 May 2025சென்னை : பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்களில் பரிமாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 29 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
03 May 2025காஸா : காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
-
சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை
03 May 2025சென்னை : சத்தீஸ்கரில் தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
பாகிஸ்தான் பொருளாதாரத்தை முடக்க இந்தியா புதிய திட்டம்
03 May 2025பஹல்காம் : பாகிஸ்தான் பொருளாதாரத்தை முடக்க இந்திய புதிய திட்டம் தீட்டி உள்ளது.
-
உணவு பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்- எல்லையில் மக்களை எச்சரித்த பாக்.
03 May 2025லாகூர் : பாகிஸ்தான் ராணுவம் உள்ளூர் கிராம மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
03 May 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 3,619 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கோவா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி: ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்
03 May 2025புதுடெல்லி, கோவா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள
-
கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: நாகை மீனவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு
03 May 2025நாகை, மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானின் அனைத்து இறக்குமதிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
03 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
பத்திரிகை சுதந்திர தினம்: பா.ஜ.க. மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
03 May 2025சென்னை, பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக
-
இந்திய துறைமுகங்களில் பாக். கப்பல்களுக்கு தடை
03 May 2025டெல்லி : இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.