எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, மார்ச்.16 - சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. நேற்று இத்தொகுதியில் தலைவர்கள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வரும் 18 ம் தேதி இத்தொகுதியில் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பசாமி எம்.எல்.ஏ. (முன்னாள் அமைச்சர்) காலமானதையொட்டி அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. 29 ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பிறகு 1 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 3 ம் தேதியன்று வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இத்தொகுதியில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க வேட்பாளராக முத்துச்செல்வியும், தி.மு.க வேட்பாளராக ஜவஹர் சூரியகுமாரும், ம.தி.மு.க வேட்பாளராக சதன் திருமலைகுமாரும், தே.மு.தி.க. வேட்பாளராக முத்துக்குமாரும் ஆக 3 குமார்கள் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மின்னல் வேக பிரச்சாரம் செய்தார். ஒரே நாளில் அவர் 9 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு கருணாநிதியே காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். விரைவில் மின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் முதல்வர் தனது பிரச்சாரத்தின் போது மக்களுக்கு உறுதியளித்தார். சென்ற இடமெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று இத்தொகுதியில் பிரச்சாரம் செய்தார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே இத்தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்த தொகுதியில்தான் உள்ளது. அதனால் 2 ம் இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வைகோ தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் தன் பங்கிற்கு பிரச்சாரம் செய்து வருகிறார். ஆக, இத்தொகுதியில் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
தலைவர்கள் இங்கு முகாமிட்டு அனல் பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டுக் கேட்டு வருகிறார்கள். இந்த உச்சக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு 18 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. கள்ள ஓட்டு, ஓட்டுக்கு பணம் கொடுத்தல் போன்றவற்றை தடுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படியிருந்தும் தி.மு.க.வினர் சில்வர் பாத்திரங்களையும், தி.மு.க. கரை வேட்டிகளையும் வாக்காளர்களுக்கு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. திருமங்கலம் பார்முலாவை இங்கும் அமல்படுத்தலாம் என்று அவர்கள் கணக்குப் போட்டுள்ளனர். ஆனால் இந்த கணக்கை அ.தி.மு.க.வும், தேர்தல் கமிஷனும் முறியடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
09 Jul 2025புதுடில்லி : தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
09 Jul 2025கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளா
-
அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இது அவரின் ஹனிமூன் காலம்: சுப்மன் கில் குறித்து கங்குலி
09 Jul 2025மும்பை : இது அவருடைய ஹனிமூன் காலம்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025