முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் 5 நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மார்ச்.29 - லிபியாவில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து 5 முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அஜ்டாபியா, பிரேகா, ராஸ் லனூப், உகைலா, பின் ஜவாத் ஆகிய நகரங்களில் இருந்து அதிபர் கடாபியின் படைகள் விரட்டியடிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

லிபியா ராணுவத்தின் மூத்த தளபதி ஜெனரல் பில்காஸிம் உட்பட ஏராளமான ராணுவ வீரர்களை கிளர்ச்சியாளர்கள் பிணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக அஜ் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அடுத்ததாக கடாபியின் சொந்த ஊரான ஷிர்தேவுக்கு அருகில் உள்ள அல்பைஷர் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர். இது குறித்து விளக்கமளித்துள்ள அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் அமெரிக்க கூட்டு படையினரின் தாக்குதலில் பொதுமக்களின் உயிரிழப்பை தடுக்க சில நகரங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்