எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, ஆக.- 15 - தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 4பேர் உயிரிழந்தனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தென்மாவட்டங்களில் அதிக தொழில் முதலீடுகள் செய்யப்படும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. மாவட்டத்தில் பெருகிவரும் அனல்மின் நிலையங்கள் போக ஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு, இரால் ஏற்றுமதி நிறுவனங்கள், கெமிக்கல் தொழிற்சாலைகள் என பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.தூத்துக்குடியை பொறுத்தவரை புதியதாக அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களில் தொழிலாளர்கள் சிக்கி பலியாகுவதும், படுகாயம் அடைவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடிரூமதுரை நான்குவழிச்சாலையில் புதூர்பாண்டியாபுரம் அருகே கீழஅரசரடியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்து பாரத் அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை பயன்படுத்தி 210மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் நேற்று வழக்கம்போல மின்சாரம் உற்பத்தி பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் காலை 10.30மணியளவில் அனல்மின் நிலையத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. மின்சார உற்பத்திக்காக நிலக்கரியானது கழிவுகள் அகற்றப்பட்டு அதன்பின்னர் கிரஷர் ஹவுசில் அரைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட் மூலமாக மின்உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் நேற்று கன்வேயர் பெல்டில் நிலக்கரி கொண்டு செல்லும் போது அதிக அழுத்தம் காரணமாக நிலக்கரியில் தீ பற்றியது. காற்று வேகமாக அடித்த காரணத்தினால் தீ மளமளவென்று பரவி நிலக்கரி அரைக்கப்படும் கிரஷர் ஹவுஸ் பகுதி வரை தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்ததைக்கண்ட அனல்மின் நிலையத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். இதில் சிலர் கன்வேயர் பெல்ட்டின் டவரில் ஏறி தீயை அணைத்தனர்.
தீயை அணைக்க போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினால் தீ வேகமாக பரவியதுடன் கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் கன்வேயர் பெல்டின் டவரில் நின்றவர்கள் தீ வெப்பத்தில் சிக்கி தவித்தனர். தீயில் இருந்து உயிர் தப்புவதற்காக மேலிருந்து சிலர் கீழே குதித்தனர். இந்த தீ விபத்தில், அசாம் மாநிலத்தின் குல்காப் மாவட்டத்தை சேர்ந்த குரியாசாகிப் மகன் கூகுக்லி(வயது 19), கோரம்பள்ளம் மாதவன்நாயர் கிழக்குத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் மால்ராஜ்(47), கழுகுமலை இந்திரபிரம்மதேசம் தெருவைச் சேர்ந்த காளிதாஸ் மகன் லவக்குமார்(22), ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த மனோகரன் மகன் சக்தி(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
படுகாயம் அடைந்த சரவணக்குமார்(33), சுடலைமுத்து(35), நாகேந்திரன்(22), சார்லஸ்(31), சுரிையநாராயணன்(21) ஆகியோர் தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட், தூத்துக்குடி மற்றும் ஸ்டெர்லைட் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ்டுபட்டனர். சுமார் 7மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஒரளவிற்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதும் மேலும் தீ பரவாமல் தடுக்க அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரிகள் அனைத்தும் நீருற்றி குளிர்விக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பலகோடி ரூபாயக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கலெக்டர் ஆஷிஷ்குமார் உடனடியாக சம்பவஇடத்திற்கு சென்று பார்வையிட்டு மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி விபத்திற்கான காரணம் குறித்து அறியுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவின்பேரில் கோவில்பட்டி கோட்டாட்சியர் பொன்னியின்செல்வன் தீ விபத்து பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து எஸ்.பி.,ராஜேந்திரன், ஏ.எஸ்.பி., மகேஷ், டி.எஸ்.பி., நாராயணன், தீயணைப்பு தடுப்பு மீட்புபணித்துறை உதவி இயக்குநர் சாகுல்ஹமீது ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பாதுகாப்பு கருதி புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் செல்வம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தெர்மல் அனல்மின்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுறை ஏற்பட்ட தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கன்வேயர் பெல்ட் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நான்கு தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படவிளக்கம்
தூத்துக்குடி தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ பற்றி எரியும் காட்சி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.
-
அமெரிக்காவில் பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு
13 May 2024வாஷிங்டன், அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட ரிச்சர்டு ஸ்லேமேன் மரணம் அடைந்ததாக மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.
-
3 டன் மலர்களை கொண்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்
13 May 2024திருப்பதி, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 3 டன் மலர்களால் உற்சவர்கள் சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.