முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையை நிர்மூலமாக்க திட்டமா?: இந்தியாமறுப்பு

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, செப். - 29 - இந்தியாவின் அனைத்து ஏவுகணை சோதனைகளுமே இலங்கையின் முக்கிய நகரங்கள், துறைமுகங்களை குறிவைத்து அழிக்கத்தான் என்று ஒரு இணையதளத்தில் வெளியான செய்தியை இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்நாட்டு பாதுகாப்புக்காக நடத்தப்படும் இந்த சோதனைகள், எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்திய ஏவுகணைகள் இலங்கை தளங்களை குறிவைப்பதாக வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா, இலங்கை இடையே நெருங்கிய உறவு இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்