எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.31-சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை ஒருநாள் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரு 20 ஓவர் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டியில்இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் முடிந்தது.
அடுத்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட முதலா வது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் போட்டி பாதிக்குமோ என ரசிகர்களிடம் அச்சம் ஏற்பட்டது. ஆனால் இரவில் மழை இல்லை.
நேற்று காலையில் வெயில் அடித்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். மழை காரணமாக ஆடுகளம் மூடிவைக்கப்பட்டு இருந்ததால் சேதம் அடையாமலும் மழை நீnullர் புகாமலும் இருந்தது. ஆனால் ஆடுகளத்தின் வெளிப்பகுதி ஈரமாக இருந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் ஓவர் குறைக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாஉல்ஹக் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
மைதானம் ஈரமாக இருப்பதால் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் . பேட்ஸ்மேன்களுக்கு முதல் 20 ஓவர் கடினமாக இருக்கும் என்று கருதி இந்த முடிவை எடுத்தார். அறிவித்தபடி 10 மணிக்கு போட்டி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், காம்பீர் களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் கேப்டன் கணிப்புபடி மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜுனைத்கான், முகமது இர்பான் அசுரவேகத்தில் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். 3 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 17 ரன்களே எடுத்து இருந்தது. 4வது ஓவரில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. ஜுனைத்கான் பந்தில் ஷேவாக் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து கோலி வந்து காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். ஆடுகளம் மோசமான நிலையில் இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. காம்பீர் 8 ரன்னில் இர்பான் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். தொடர்ந்து கோலி ரன் எடுக்காமலும், யுவராஜ்சிங் 2 ரன்னுடனும் அடுத்தடுத்து கிளீன் போல்டு ஆனார்கள்.
அடுத்து சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். 5.6 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டபோது இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களுடன் பரிதாபமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஜுனைத்கான் அபாரமாக பந்துவீசி ஷேவாக், கோலி, யுவராஜ்சிங் ஆகிய 3 விக்கெட்டுகளையும், முகமது இர்பான், காம்பீர் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றினார்கள். 4 விக்கெட்டுகளுமே கிளீன் போல்டு ஆனது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ரெய்னாவும், ரோகித்சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அப்போது ரோகித் சர்மா 4 ரன்னில் ஜுனைத்கான் பந்தில் அவுட் ஆனார். 5 விக்கெட்டுகளை பறி கொடுத்ததால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் டோனி களம் இறங்கினார். அவர் ரெய்னாவுடன் நிலைத்து நின்று ஆடி அணியை மோசமான சரிவில் இருந்து மீட்டார்.
5 விக்கெட்டுகள் விழுந்தபோது இந்தியா 9.4 ஓவரில் 29 ரன் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு டோனி ரெய்னா ஜோடி ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தி 31வது ஓவரில் 100 ரன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ஸ்கோர் 102 ரன் ஆக இருந்தபோது சுரேஷ் ரெய்னா முகமது ஹபிஸ் பந்தில் போல்டு ஆனார். ரெய்னா 88 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்தார்.
ரெய்னா அவுட் ஆனதும் தமிழக வீரர் அஸ்வின் வந்தார். ஆட்டத்தில் 39வது ஓவரில் டோனி பிரிஹிட் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து அரை சதத்தை தொட்டார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் டோனி பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 113 ரன்களுடனும், அஸ்வின் 31 ரன்களுடனும், களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள்.பாக் வீரர் முகமது ஹபீஸ் ரன் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தார்.பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடினார்கள். 48.1 ஓவரில் பாக் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது., நஷீர் ஜாம்ஷெத் 101 ரன்களும்,யுனுஸ்கான் 58 ரன்களும் எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.