எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒசூர் பிப்.15 - ஓசூர் சூளகிரி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 6 பேர் பலியாயினர்.40 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லகான கொத்தம்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சப்படி கிராம பகுதியில் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி ஆவின் பால்பண்ணைக்கு ஓசூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட பாலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.லாரியை கிருஷ்ணகிரி ஆவின் நகரைச் சேர்ந்த ராஜூ(56) என்பவர் ஓட்டிச் சென்றார். அதே வேளையில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. சப்படி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் சுமார் 1 கி மீ தூரத்திற்கு ஒரே சாலையில் வாகனங்கள் செல்லும் சூழ்நிலை உள்ளது.
சப்படி கிராம பகுதியில் லாரியும்-பஸ்சும் வந்த போது ஒரு வளைவில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. இதில் ஆவின் லாரி டிரைவர் டிரைவர் ராஜூ(56) ஆந்திரா குப்பம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(40), பர்கூரைச் சேர்ந்த சேகர்(50), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தகாசிநாதன்(53)) தேன்கனிக்கோட்டை தேவகானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி(53), ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன்(40),
பெரியாம்பட்டி வெங்கடேஷ்(40),கிருஷ்ணகிரி செக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜா(60),கோ வையை சேர்ந்த பாலசுப்பிரமணி(45), திருப்பத்தூர் மணிகண்டன்(20) ஓசூர் மருதையன்(57), கிருஷ்ணகிரி ஓல்ட் பேட்டையைச் சேர்ந்த பசில்(40), காட்பாடி,ஏழுமலை(49), பெங்களூர் சிவாஜி நகரைச் சேர்ந்த சபி(41), கிருஷ்ணகிரி,விமலா(37), கோவிந்தப்பள்ளி,குப்பம்மாள்(37), திருப்பத்தூர் பெரியசாமி(50), கிருஷ்ணகிரி,செல்வம்(25) ஒரிசா,ஜிஜேந்திரா(24) தேன்கனிக்கோட்டை,தியாகராஜன்(40) தேவகானப்பள்ளி, தேவீரம்மா(60) உள்பட 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர். உடனே அப்பகுதி கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இது குறித்து சூளகிரி போலீசாருக்கும்,108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரவின் பி.நாயர் மற்றும் போலீசாரும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் ஆவின் லாரி டிரைவர் ராஜூ மற்றும் தேவனானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி ஆகியோர் இறந்து போயினர். இதில் 25 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் 19 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், பர்கூரைச் சேர்ந்த சேகர், திருப்பத்தூரைச் சேர்ந்த காசிநதான், ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போயினர்.
விபத்து நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் சில மணி நேரம் போக்குரவத்தும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்தவர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.