எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.27 - மதுரை மோசடி மன்னன் பயன்படுத்தி விற்ற 3 வது காரை(ஸ்கார்பியோ) ஓசூரில் போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஆடி, போர்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனருடன் குடியேறியவர் விவேகானந்தன். அங்கு வசித்த நாட்களில் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் திருநகர், திருப்பரங்குன்றத்திலும் பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவானார்.
இவர் பயன்படுத்திய சொகுசுகார்களை பல இடங்களில் விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி காரை வெறும் 3 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி முதலில் 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு காரின் ஆவணங்களை கொடுத்த பின்பு ஒரு லட்சம் தருமாறு கூறிய விவேகானந்தன், தலைமறைவானார். சில தினங்களுக்கு முன்பு அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விவேகானந்தன் பயன்படுத்தி விற்ற போர்டு காரை கம்பத்தில் உள்ள ஹானஸ்ட் ராஜ் என்பவரிடம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் விவேகானந்தன் விற்ற ஸ்கார்பியோ காரை ஓசூரில் நேற்று தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து திருநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விவேகானந்தனிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவேகானந்தன் மீது புகார் கொடுப்பவர்கள் தினம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு வருகின்றனர். விவேகானந்தனின் மோசடிக்குஉடந்தையாக இருந்த மனைவி மற்றும் மைத்துனர் கெவின் ஆகியோரும் விவேகானந்தனுடன் தலைமறைவாகி விட்டதால் இவர்களுக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த நந்தகோபால் என்பவர் டி.எஸ்.பி பொன்ராமிடம் புகார் கொடுத்தார். அவர் கூறுகையில், திண்டுக்கல் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து மாறுதலாகி தற்போது கோவையில் உள்ள கல்லூரியில் வேலை பார்க்கும் நிகிதா என்பவர் திண்டுக்கல் கலைக் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றிய ஜோசப் என்பவரிடம், தனது அண்ணனுடைய நண்பர் மிகப் பெரிய செல்வந்தர், அரசியல் பெரும் புள்ளிகளுடன் தொடர்பு உடையவர். அவர், அரசு வேலைகளை பலருக்கு வாங்கிகொடுத்து வருகிறார். உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் கேளுங்கள். வாங்கிக் கொடுக்கிறோம் என்றார். அவரது பேச்சை நம்பிய ஜோசப், என்னிடம் கூறினார். நானும் எனது அக்கா மகளின் ஆசிரியர்பணிக்காக ஜோசப் உதவியுடன் நிகிதாவை நாடினேன். அவர் ரூ. 6 லட்சம் பணம் கேட்டார். என்னால் 5 லட்சம் ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்தது. இதை நிகிதாவிடம் கூறினேன். அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள அவரது பங்களாவிற்கு வருமாறு கூறினார்.
பிப்ரவரி 17 ம் தேதி ஆலம்பட்டி பங்களாவிற்கு சென்றேன். அங்கு நிகிதாவிடம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், மீதம் ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் வேலையை வாங்கி விட வேண்டும். அதனால் மீதத் தொகையான ஒரு லட்சத்திற்கு ஜோசப் ஜாமீன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிகிதா கூறினார். என்னுடன் வந்த ஜோசப்பும் அதற்கு சம்மதித்தார். அதன் பின்னர் வீட்டிற்குள் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை எடுத்து வந்து நான் கொடுத்தபணத்தை அந்த எந்திரத்தில் எண்ணி சரிபார்த்து எடுத்துச் சென்றார். அப்போது நிகிதாவின் அண்ணன் கவியும் உடனிருந்தார்.
சில நாட்களுக்கு பின்பு நிகிதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி அவர் கொடுத்த பல செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த எண்களை தவிர கோவையை சேர்ந்த வக்கீல் ஒருவரின் செல்போன் எண்களையும் நிகிதா கொடுத்திருந்தார். அதைதொடர்பு கொண்ட போது அவர்களை பற்றி எங்களுக்கு தெரியாது. என்னை தொடர்பு கொண்டால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என கூறினார். ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக எங்களை ஏமாற்றி விட்டனர் என புகார் கூறியுள்ளேன். இவ்வாறு நந்தகோபால் கூறினார்.
ஆலம்பட்டியில் உள்ள பங்களாவை மோசடி மன்னன் விவேகானந்தன் கட்டி அதை ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரிக்கு விற்று விட்டதாகவும், அந்த அதிகாரியின் மகன்தான் கவி என்பதும், விவேகானந்தனின் மோசடிகளுக்கு கவியும் உடந்தையாக இருந்திருக்கலாமோ என்று நந்தகோபாலிடம் பெற்ற பணத்தை கவியும் நிகிதாவும் சுருட்டினரா? அல்லது விவேகானந்தனுக்கு கொடுத்தனரா அல்லது இருவருமே பங்கிட்டு கொண்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.