எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,ஏப்.27 - மதுரை மோசடி மன்னன் பயன்படுத்தி விற்ற 3 வது காரை(ஸ்கார்பியோ) ஓசூரில் போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஆடி, போர்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனருடன் குடியேறியவர் விவேகானந்தன். அங்கு வசித்த நாட்களில் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் திருநகர், திருப்பரங்குன்றத்திலும் பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவானார்.
இவர் பயன்படுத்திய சொகுசுகார்களை பல இடங்களில் விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி காரை வெறும் 3 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி முதலில் 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு காரின் ஆவணங்களை கொடுத்த பின்பு ஒரு லட்சம் தருமாறு கூறிய விவேகானந்தன், தலைமறைவானார். சில தினங்களுக்கு முன்பு அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விவேகானந்தன் பயன்படுத்தி விற்ற போர்டு காரை கம்பத்தில் உள்ள ஹானஸ்ட் ராஜ் என்பவரிடம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் விவேகானந்தன் விற்ற ஸ்கார்பியோ காரை ஓசூரில் நேற்று தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து திருநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விவேகானந்தனிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவேகானந்தன் மீது புகார் கொடுப்பவர்கள் தினம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு வருகின்றனர். விவேகானந்தனின் மோசடிக்குஉடந்தையாக இருந்த மனைவி மற்றும் மைத்துனர் கெவின் ஆகியோரும் விவேகானந்தனுடன் தலைமறைவாகி விட்டதால் இவர்களுக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த நந்தகோபால் என்பவர் டி.எஸ்.பி பொன்ராமிடம் புகார் கொடுத்தார். அவர் கூறுகையில், திண்டுக்கல் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து மாறுதலாகி தற்போது கோவையில் உள்ள கல்லூரியில் வேலை பார்க்கும் நிகிதா என்பவர் திண்டுக்கல் கலைக் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றிய ஜோசப் என்பவரிடம், தனது அண்ணனுடைய நண்பர் மிகப் பெரிய செல்வந்தர், அரசியல் பெரும் புள்ளிகளுடன் தொடர்பு உடையவர். அவர், அரசு வேலைகளை பலருக்கு வாங்கிகொடுத்து வருகிறார். உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் கேளுங்கள். வாங்கிக் கொடுக்கிறோம் என்றார். அவரது பேச்சை நம்பிய ஜோசப், என்னிடம் கூறினார். நானும் எனது அக்கா மகளின் ஆசிரியர்பணிக்காக ஜோசப் உதவியுடன் நிகிதாவை நாடினேன். அவர் ரூ. 6 லட்சம் பணம் கேட்டார். என்னால் 5 லட்சம் ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்தது. இதை நிகிதாவிடம் கூறினேன். அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள அவரது பங்களாவிற்கு வருமாறு கூறினார்.
பிப்ரவரி 17 ம் தேதி ஆலம்பட்டி பங்களாவிற்கு சென்றேன். அங்கு நிகிதாவிடம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், மீதம் ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் வேலையை வாங்கி விட வேண்டும். அதனால் மீதத் தொகையான ஒரு லட்சத்திற்கு ஜோசப் ஜாமீன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிகிதா கூறினார். என்னுடன் வந்த ஜோசப்பும் அதற்கு சம்மதித்தார். அதன் பின்னர் வீட்டிற்குள் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை எடுத்து வந்து நான் கொடுத்தபணத்தை அந்த எந்திரத்தில் எண்ணி சரிபார்த்து எடுத்துச் சென்றார். அப்போது நிகிதாவின் அண்ணன் கவியும் உடனிருந்தார்.
சில நாட்களுக்கு பின்பு நிகிதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி அவர் கொடுத்த பல செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த எண்களை தவிர கோவையை சேர்ந்த வக்கீல் ஒருவரின் செல்போன் எண்களையும் நிகிதா கொடுத்திருந்தார். அதைதொடர்பு கொண்ட போது அவர்களை பற்றி எங்களுக்கு தெரியாது. என்னை தொடர்பு கொண்டால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என கூறினார். ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக எங்களை ஏமாற்றி விட்டனர் என புகார் கூறியுள்ளேன். இவ்வாறு நந்தகோபால் கூறினார்.
ஆலம்பட்டியில் உள்ள பங்களாவை மோசடி மன்னன் விவேகானந்தன் கட்டி அதை ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரிக்கு விற்று விட்டதாகவும், அந்த அதிகாரியின் மகன்தான் கவி என்பதும், விவேகானந்தனின் மோசடிகளுக்கு கவியும் உடந்தையாக இருந்திருக்கலாமோ என்று நந்தகோபாலிடம் பெற்ற பணத்தை கவியும் நிகிதாவும் சுருட்டினரா? அல்லது விவேகானந்தனுக்கு கொடுத்தனரா அல்லது இருவருமே பங்கிட்டு கொண்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
22 Oct 2025சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழ்நாடு – புத
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி
22 Oct 2025சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
22 Oct 2025திருவாரூர் : கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
22 Oct 2025திருச்சி : காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Oct 2025சென்னை : அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.