எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,ஏப்.27 - மதுரை மோசடி மன்னன் பயன்படுத்தி விற்ற 3 வது காரை(ஸ்கார்பியோ) ஓசூரில் போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஆடி, போர்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனருடன் குடியேறியவர் விவேகானந்தன். அங்கு வசித்த நாட்களில் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலும் திருநகர், திருப்பரங்குன்றத்திலும் பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து குடும்பத்துடன் தலைமறைவானார்.
இவர் பயன்படுத்திய சொகுசுகார்களை பல இடங்களில் விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி திருநகர் அருகே உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி காரை வெறும் 3 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி முதலில் 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு காரின் ஆவணங்களை கொடுத்த பின்பு ஒரு லட்சம் தருமாறு கூறிய விவேகானந்தன், தலைமறைவானார். சில தினங்களுக்கு முன்பு அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விவேகானந்தன் பயன்படுத்தி விற்ற போர்டு காரை கம்பத்தில் உள்ள ஹானஸ்ட் ராஜ் என்பவரிடம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் விவேகானந்தன் விற்ற ஸ்கார்பியோ காரை ஓசூரில் நேற்று தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து திருநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விவேகானந்தனிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விவேகானந்தன் மீது புகார் கொடுப்பவர்கள் தினம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு வருகின்றனர். விவேகானந்தனின் மோசடிக்குஉடந்தையாக இருந்த மனைவி மற்றும் மைத்துனர் கெவின் ஆகியோரும் விவேகானந்தனுடன் தலைமறைவாகி விட்டதால் இவர்களுக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த நந்தகோபால் என்பவர் டி.எஸ்.பி பொன்ராமிடம் புகார் கொடுத்தார். அவர் கூறுகையில், திண்டுக்கல் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து மாறுதலாகி தற்போது கோவையில் உள்ள கல்லூரியில் வேலை பார்க்கும் நிகிதா என்பவர் திண்டுக்கல் கலைக் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றிய ஜோசப் என்பவரிடம், தனது அண்ணனுடைய நண்பர் மிகப் பெரிய செல்வந்தர், அரசியல் பெரும் புள்ளிகளுடன் தொடர்பு உடையவர். அவர், அரசு வேலைகளை பலருக்கு வாங்கிகொடுத்து வருகிறார். உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு யாருக்கேனும் அரசு வேலை வேண்டும் என்றால் கேளுங்கள். வாங்கிக் கொடுக்கிறோம் என்றார். அவரது பேச்சை நம்பிய ஜோசப், என்னிடம் கூறினார். நானும் எனது அக்கா மகளின் ஆசிரியர்பணிக்காக ஜோசப் உதவியுடன் நிகிதாவை நாடினேன். அவர் ரூ. 6 லட்சம் பணம் கேட்டார். என்னால் 5 லட்சம் ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிந்தது. இதை நிகிதாவிடம் கூறினேன். அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள அவரது பங்களாவிற்கு வருமாறு கூறினார்.
பிப்ரவரி 17 ம் தேதி ஆலம்பட்டி பங்களாவிற்கு சென்றேன். அங்கு நிகிதாவிடம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், மீதம் ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் வேலையை வாங்கி விட வேண்டும். அதனால் மீதத் தொகையான ஒரு லட்சத்திற்கு ஜோசப் ஜாமீன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிகிதா கூறினார். என்னுடன் வந்த ஜோசப்பும் அதற்கு சம்மதித்தார். அதன் பின்னர் வீட்டிற்குள் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை எடுத்து வந்து நான் கொடுத்தபணத்தை அந்த எந்திரத்தில் எண்ணி சரிபார்த்து எடுத்துச் சென்றார். அப்போது நிகிதாவின் அண்ணன் கவியும் உடனிருந்தார்.
சில நாட்களுக்கு பின்பு நிகிதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி அவர் கொடுத்த பல செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த எண்களை தவிர கோவையை சேர்ந்த வக்கீல் ஒருவரின் செல்போன் எண்களையும் நிகிதா கொடுத்திருந்தார். அதைதொடர்பு கொண்ட போது அவர்களை பற்றி எங்களுக்கு தெரியாது. என்னை தொடர்பு கொண்டால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என கூறினார். ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக எங்களை ஏமாற்றி விட்டனர் என புகார் கூறியுள்ளேன். இவ்வாறு நந்தகோபால் கூறினார்.
ஆலம்பட்டியில் உள்ள பங்களாவை மோசடி மன்னன் விவேகானந்தன் கட்டி அதை ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரிக்கு விற்று விட்டதாகவும், அந்த அதிகாரியின் மகன்தான் கவி என்பதும், விவேகானந்தனின் மோசடிகளுக்கு கவியும் உடந்தையாக இருந்திருக்கலாமோ என்று நந்தகோபாலிடம் பெற்ற பணத்தை கவியும் நிகிதாவும் சுருட்டினரா? அல்லது விவேகானந்தனுக்கு கொடுத்தனரா அல்லது இருவருமே பங்கிட்டு கொண்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.