எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.29 - மேலூர் தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரத்தில் தன் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி மு.க.அழகிரி மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது அழகிரிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே ஆளும் கட்சியான திமுக சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கியது. தங்களுக்கு ஒத்துப்போகாத அதிகாரிகளை மிரட்டுவது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என அனைத்து நடவடிக்கைகளிலும் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. எதிர்க்கட்சியினரும், அதிகாரிகளும் மிரட்டப்பட்டதோடு தாக்குதலுக்கும் உள்ளாயினர். மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தாரும், தேர்தல்அலுவலருமான காளிமுத்து மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தேர்தல் பணியை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்தனர். இதற்கிடையே மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆர்டிஓ) சுகுமாறன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்தார். பின்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியை அழைத்து தன்னை தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட கலெக்டருமான சகாயம் டார்ச்சர் செய்கிறார், மேலூர் சம்பவத்தில் திமுகவினர் மீது பொய் புகார் கொடுக்க கூறி வற்புறுத்துகிறார் எனவே என்னை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரி பேட்டியளித்தார். இதை விசாரித்த தமிழக தேர்தல் ஆணையம் வருவாய் அலுவலர் கூறியது பொய் என தெரிந்து, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தார் காளிமுத்து தேர்தல் அலுவலராகவும் பணியாற்றினார். தேர்தல் அறிவித்ததிலிருந்தே நடுநிலைமையோடு செயல்பட்டார். மேலூர் அருகே திமுகவினர் வாக்களார்களுக்கு பணம் கொடுத்ததை அறிந்து நேரில் சென்று பணத்தை கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த 1 ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய திமுக செயலாளர் ரகுபதி, சிவஞானம் ஆகிய 4 பேரும் அனுமதி பெறாத ஒரு ரகசிய கூட்டத்திற்கு மேலூர் அருகே உள்ள நையித்தான்பட்டிக்கு சென்றனர். இவர்கள் வருவதை தெரிந்து கொண்ட மேலூர் தாசில்தார் காளிமுத்து வீடியோகிராபருடன் நையித்தான்பட்டிக்கு சென்றார். அப்போது அந்த ஊரில் உள்ள வல்லடைக்காரர் கோவிலுக்கு மு.க.அழகிரி சென்றார். அப்போது தீபாராதனை தட்டில் அழகிரி ரூபாய் போடும் போது வீடியோ கிராபர் அதை படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் ஏன் இதையெல்லாம் படம் பிடிக்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது மத்திய அமைச்சர் முன்னிலையிலேயே தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்டார். மேலும் வீடியோ கேமராவையும் பறிக்க முயன்றனர். இதை தொடர்ந்து சம்பவம் குறித்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தாசில்தார் காளிமுத்து புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மு.க.அழகிரி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 4 பேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் சம்பந்தப்பட்ட தாசில்தாரே அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பின்னர் மறுப்பு தெரிவித்திருக்கிற நிலையில் எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர். மேலூர் தாசில்தார் காளிமுத்துவும் நையித்தான் பட்டியில் என்னை யாரும் தாக்கவில்லை. செருப்புடன் சென்றதால் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே போலீசில் புகார் கொடுத்தேன் என்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே ஒத்தப்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது எனக் கோரி ஒரு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 21 ம்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகாததால் வழக்கை மறுநாளைக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் குமரேசன்ஆஜராகி வாதிடும் போது, மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்குக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். அழகிரியின் வக்கீல் வெங்கடேசன் வாதிடும் போது, அங்கு சட்டவிரோத செயல் எதுவும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட தாசில்தாரே தன்னை தாக்கவில்லை என்று கூறிய பிறகு இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற தேவையில்லை. எனவே அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த பிஎம். மன்னன், ரகுபதி, சிவஞானம் ஆகியோர் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று மனு செய்திருந்த ஒத்தப்பட்டி கண்ணனின் வழக்கறிஞர் செல்லப்பாண்டி வாதிடும் போது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தாசில்தார் விசாரணை அதிகாரியிடம் இது தொடர்பாக வேறு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. வீடியோ ஆதாரங்களும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் பொய் என்று தாசில்தார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேலும் ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது அந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று வாதிட்டார்.
வக்கீல்களின் வாதத்தை கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தனது தீர்ப்பில் கூறும் போது, எப்ஐஆரும்,(முதல் தகவல் அறிக்கை) சம்பவமும் ஒத்துப்போகிறது. புகார் கொடுத்தவரே அதை மாற்றி கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வழக்கை ரத்து செய்யமுடியாது. இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என்றார். வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் மு.க. அழகிரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் படுகொலை சம்பவத்தில் 12 பேர் கைது
22 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவ
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
கேரளாவில் தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
22 Dec 2025கேரளா, கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
-
10 அம்ச கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
22 Dec 2025சென்னை, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசி., பிரதமர் லக்சன் பேச்சு
22 Dec 2025புதுடெல்லி, இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வா
-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரச்சார வாகனங்கள்
22 Dec 2025சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு தயாராகும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
-
கிரிக்கெட்டையே விட நினைத்தேன்: 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்தார் ரோகித்
22 Dec 2025மும்பை, ஐ.சி.சி.
-
காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு
22 Dec 2025டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.


