எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.29 - மேலூர் தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரத்தில் தன் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி மு.க.அழகிரி மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது அழகிரிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே ஆளும் கட்சியான திமுக சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கியது. தங்களுக்கு ஒத்துப்போகாத அதிகாரிகளை மிரட்டுவது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என அனைத்து நடவடிக்கைகளிலும் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. எதிர்க்கட்சியினரும், அதிகாரிகளும் மிரட்டப்பட்டதோடு தாக்குதலுக்கும் உள்ளாயினர். மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தாரும், தேர்தல்அலுவலருமான காளிமுத்து மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தேர்தல் பணியை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்தனர். இதற்கிடையே மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆர்டிஓ) சுகுமாறன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்தார். பின்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியை அழைத்து தன்னை தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட கலெக்டருமான சகாயம் டார்ச்சர் செய்கிறார், மேலூர் சம்பவத்தில் திமுகவினர் மீது பொய் புகார் கொடுக்க கூறி வற்புறுத்துகிறார் எனவே என்னை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரி பேட்டியளித்தார். இதை விசாரித்த தமிழக தேர்தல் ஆணையம் வருவாய் அலுவலர் கூறியது பொய் என தெரிந்து, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தார் காளிமுத்து தேர்தல் அலுவலராகவும் பணியாற்றினார். தேர்தல் அறிவித்ததிலிருந்தே நடுநிலைமையோடு செயல்பட்டார். மேலூர் அருகே திமுகவினர் வாக்களார்களுக்கு பணம் கொடுத்ததை அறிந்து நேரில் சென்று பணத்தை கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த 1 ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய திமுக செயலாளர் ரகுபதி, சிவஞானம் ஆகிய 4 பேரும் அனுமதி பெறாத ஒரு ரகசிய கூட்டத்திற்கு மேலூர் அருகே உள்ள நையித்தான்பட்டிக்கு சென்றனர். இவர்கள் வருவதை தெரிந்து கொண்ட மேலூர் தாசில்தார் காளிமுத்து வீடியோகிராபருடன் நையித்தான்பட்டிக்கு சென்றார். அப்போது அந்த ஊரில் உள்ள வல்லடைக்காரர் கோவிலுக்கு மு.க.அழகிரி சென்றார். அப்போது தீபாராதனை தட்டில் அழகிரி ரூபாய் போடும் போது வீடியோ கிராபர் அதை படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் ஏன் இதையெல்லாம் படம் பிடிக்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது மத்திய அமைச்சர் முன்னிலையிலேயே தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்டார். மேலும் வீடியோ கேமராவையும் பறிக்க முயன்றனர். இதை தொடர்ந்து சம்பவம் குறித்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தாசில்தார் காளிமுத்து புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மு.க.அழகிரி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 4 பேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் சம்பந்தப்பட்ட தாசில்தாரே அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பின்னர் மறுப்பு தெரிவித்திருக்கிற நிலையில் எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர். மேலூர் தாசில்தார் காளிமுத்துவும் நையித்தான் பட்டியில் என்னை யாரும் தாக்கவில்லை. செருப்புடன் சென்றதால் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே போலீசில் புகார் கொடுத்தேன் என்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே ஒத்தப்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது எனக் கோரி ஒரு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 21 ம்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகாததால் வழக்கை மறுநாளைக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் குமரேசன்ஆஜராகி வாதிடும் போது, மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்குக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். அழகிரியின் வக்கீல் வெங்கடேசன் வாதிடும் போது, அங்கு சட்டவிரோத செயல் எதுவும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட தாசில்தாரே தன்னை தாக்கவில்லை என்று கூறிய பிறகு இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற தேவையில்லை. எனவே அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த பிஎம். மன்னன், ரகுபதி, சிவஞானம் ஆகியோர் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று மனு செய்திருந்த ஒத்தப்பட்டி கண்ணனின் வழக்கறிஞர் செல்லப்பாண்டி வாதிடும் போது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தாசில்தார் விசாரணை அதிகாரியிடம் இது தொடர்பாக வேறு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. வீடியோ ஆதாரங்களும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் பொய் என்று தாசில்தார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேலும் ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது அந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று வாதிட்டார்.
வக்கீல்களின் வாதத்தை கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தனது தீர்ப்பில் கூறும் போது, எப்ஐஆரும்,(முதல் தகவல் அறிக்கை) சம்பவமும் ஒத்துப்போகிறது. புகார் கொடுத்தவரே அதை மாற்றி கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வழக்கை ரத்து செய்யமுடியாது. இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என்றார். வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் மு.க. அழகிரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.