எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.29 - மேலூர் தாசில்தார் தாக்கப்பட்ட விவகாரத்தில் தன் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி மு.க.அழகிரி மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது அழகிரிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே ஆளும் கட்சியான திமுக சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கியது. தங்களுக்கு ஒத்துப்போகாத அதிகாரிகளை மிரட்டுவது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என அனைத்து நடவடிக்கைகளிலும் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. எதிர்க்கட்சியினரும், அதிகாரிகளும் மிரட்டப்பட்டதோடு தாக்குதலுக்கும் உள்ளாயினர். மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தாரும், தேர்தல்அலுவலருமான காளிமுத்து மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தேர்தல் பணியை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்தனர். இதற்கிடையே மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆர்டிஓ) சுகுமாறன் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்தார். பின்னர் ஆளும் கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியை அழைத்து தன்னை தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட கலெக்டருமான சகாயம் டார்ச்சர் செய்கிறார், மேலூர் சம்பவத்தில் திமுகவினர் மீது பொய் புகார் கொடுக்க கூறி வற்புறுத்துகிறார் எனவே என்னை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்குமாறு கோரி பேட்டியளித்தார். இதை விசாரித்த தமிழக தேர்தல் ஆணையம் வருவாய் அலுவலர் கூறியது பொய் என தெரிந்து, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தார் காளிமுத்து தேர்தல் அலுவலராகவும் பணியாற்றினார். தேர்தல் அறிவித்ததிலிருந்தே நடுநிலைமையோடு செயல்பட்டார். மேலூர் அருகே திமுகவினர் வாக்களார்களுக்கு பணம் கொடுத்ததை அறிந்து நேரில் சென்று பணத்தை கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதற்கிடையே கடந்த 1 ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய திமுக செயலாளர் ரகுபதி, சிவஞானம் ஆகிய 4 பேரும் அனுமதி பெறாத ஒரு ரகசிய கூட்டத்திற்கு மேலூர் அருகே உள்ள நையித்தான்பட்டிக்கு சென்றனர். இவர்கள் வருவதை தெரிந்து கொண்ட மேலூர் தாசில்தார் காளிமுத்து வீடியோகிராபருடன் நையித்தான்பட்டிக்கு சென்றார். அப்போது அந்த ஊரில் உள்ள வல்லடைக்காரர் கோவிலுக்கு மு.க.அழகிரி சென்றார். அப்போது தீபாராதனை தட்டில் அழகிரி ரூபாய் போடும் போது வீடியோ கிராபர் அதை படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் ஏன் இதையெல்லாம் படம் பிடிக்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது மத்திய அமைச்சர் முன்னிலையிலேயே தாசில்தார் காளிமுத்து தாக்கப்பட்டார். மேலும் வீடியோ கேமராவையும் பறிக்க முயன்றனர். இதை தொடர்ந்து சம்பவம் குறித்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தாசில்தார் காளிமுத்து புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மு.க.அழகிரி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 4 பேரும் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் சம்பந்தப்பட்ட தாசில்தாரே அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று பின்னர் மறுப்பு தெரிவித்திருக்கிற நிலையில் எங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர். மேலூர் தாசில்தார் காளிமுத்துவும் நையித்தான் பட்டியில் என்னை யாரும் தாக்கவில்லை. செருப்புடன் சென்றதால் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே போலீசில் புகார் கொடுத்தேன் என்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே ஒத்தப்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது எனக் கோரி ஒரு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 21 ம்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகாததால் வழக்கை மறுநாளைக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் குமரேசன்ஆஜராகி வாதிடும் போது, மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்குக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார். அழகிரியின் வக்கீல் வெங்கடேசன் வாதிடும் போது, அங்கு சட்டவிரோத செயல் எதுவும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட தாசில்தாரே தன்னை தாக்கவில்லை என்று கூறிய பிறகு இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற தேவையில்லை. எனவே அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த பிஎம். மன்னன், ரகுபதி, சிவஞானம் ஆகியோர் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று மனு செய்திருந்த ஒத்தப்பட்டி கண்ணனின் வழக்கறிஞர் செல்லப்பாண்டி வாதிடும் போது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தாசில்தார் விசாரணை அதிகாரியிடம் இது தொடர்பாக வேறு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. வீடியோ ஆதாரங்களும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் பொய் என்று தாசில்தார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேலும் ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது அந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று வாதிட்டார்.
வக்கீல்களின் வாதத்தை கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தனது தீர்ப்பில் கூறும் போது, எப்ஐஆரும்,(முதல் தகவல் அறிக்கை) சம்பவமும் ஒத்துப்போகிறது. புகார் கொடுத்தவரே அதை மாற்றி கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வழக்கை ரத்து செய்யமுடியாது. இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என்றார். வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் மு.க. அழகிரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு டிஸ்மிஸ் செய்யப்பட்ட விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


