முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 15-ம் தேதி முதல் நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறைவாசம்

சனிக்கிழமை, 11 மே 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மே. 12 - மறு சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டதால், விதிக்கப்பட்ட கெடு தேதியான மே 15 ம் தேதி சிறைக்குப் போகிறார் சஞ்சய் தத். 

மும்பையில் 1993 ல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதற்காக ஏராளமான துப்பாக்கிகளை கொண்டு வந்தனர். அதில் 2 துப்பாக்கிகளை நடிகர் சஞ்சய்தத் சட்ட விரோதமாக வாங்கினார். மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததும் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதித்து மும்பை தடா கோர்ட்டு உத்தரவிட்டது. ஒன்றரை ஆண்டுகள் எரவாடா சிறையில் இருந்த சஞ்சய்தத் பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 

சுப்ரீம் கோர்ட்டில் தன் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார். அவரது தண்டனையை சுப்ரீம் கோர்ட் 5 ஆண்டுகளாகக் குறைத்தது. தண்டனை ஏற்றுக் கொள்வதாக முதலில் அறிவித்த சஞ்சய் தத், பின்னர் சரணடைய அவகாசம் கேட்டார். நான்கு வார அவகாசம் அளித்தது நீதிமன்றம். பின்னர் இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு சஞ்சய்தத் மீண்டும் மனு செய்தார். அந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் வாதத்துக்குப் பிறகு சஞ்சய்தத் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக சஞ்சய்தத் இனி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற 15 ம் தேதி அவர் சரண் அடைந்ததும், அவர் உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பப்படுவார். மீதமுள்ள தண்டனை காலமான 3.5 ஆண்டுகளை அவர் சிறையில் கழிக்க வேண்டும். 54 வயதாகும் சஞ்சய்தத் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். 250 கோடி ரூபாய்க்கு மேல் அவரை நம்பி முதலீடு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். சிறைக்குப் போகும் முன்பே தனது சினிமா கமிட்மெண்டுகளை பெருமளவு முடித்து விட்டார் சஞ்சய் தத். கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் போலீஸ்கிரி என்ற இந்திப் படமும் அதில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்