எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மே.23 - மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதன் மூலம் கடைசியாக நடைபெற்ற நான்கு ஐபிஎல் போட்டிகளிலும், இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றது. ஒட்டுமொத்தமாக, 5-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் இரு முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி 18.9 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மும்பை அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. மும்பை அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த அணியில் வேயன் ஸ்மித், மிச்சல் ஜான்சன், முனப்படேல், பிரக்யான், ஓஜா ஆகியோர் களமிறக்கப்பட்டனர். அதே சமயம் சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக அல்பி மோர்கல் சேர்க்கப்பட்டார்.
ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அதிரடியாக ஆரம்பித்தார் சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸி. இதைத் தொடர்ந்து மேக் ஹஸியும், முரளி விஜயும், அதிரடியாக விளையாடினர்.அணியின் ஸ்கோர் 52 ஆக உயர்ந்தபோது, 23 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். இந்த ஜோடி மும்பை வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் சேர்த்தது. குறிப்பாக மைக் ஹஸி, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர், மளமளவென உயர்ந்தது. மறுபுறம் அதிரடி ஆட்டத்தினால் ரெய்னா 23
பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து வேகம் காட்டிய ரெய்னா, பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய வண்ணம் இருந்தார். இதனால் 16.5 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 150 ஐ கடந்தது. இறுதி வரை மும்பை வீரர்களால் 2-வது விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை.
ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இறுதி வரை ஆட்டம் இழக்காமல் சுரேஷ் ரெய்னா, 42 பந்துகளில் 82 ரன்கள், 95 (சிக்ஸர், 5 பவுண்டரி) ஹசி 58 பந்துகளில் 86ரன்கள் எடுத்தனர். மும்பை அணித் தரப்பில் போலார்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.
193 ரன்களை இலக்காக கொண்டு கள மிறங்கிய மும்பை அணியில் வேயன் ஸ்மித்தும், ஆதித்யா தாரேயும், களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 12 ஆக உயந்தபோது, 7 ரன்கள் எடுத்திருந்த தாரே,மோர்கல், பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். இதனிடையே சிறிது நேரம் மெதுவாக ஆடிய ஸ்மித்
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அதிரடியால் ரசிகர்கள் குதுகலம் அடைந்தனர். அவர் 21 பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து வேகமாக விளையாடிய அவர் 68 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா பந்கு வீச்சில் ஆட்டமிழந்தார்.
28 பந்துகளை சந்தித்த அவர் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளை விளாசினார். ஸ்மித் ஆட்டமிழந்த பிறகு மும்பை அணி வீரர் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர்.போலார்ட் மட்டும் 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 18 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும், இழந்து மும்பை தோற்றது.இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிச் சுற்றில் அடி எடுத்து வைத்தது சூப்பர் கிங்ஸ். எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் மும்பை அணி மீண்டும் பலப்பரீட்சை நடத்தும். சூப்பர் கிங்ஸ் தரப்பில் பிராவோ, ஜடேஜா, ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொகித் சர்மா 2 விக்கெட்டையும் மோர்கல், மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்த சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர் மைக் ஹஸி, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹஸி 86 ரன்கள் எடுத்தார். இதனால் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 732 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், ஆல் ரவுண்டர் பிராவோவும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இந்த ஐபிஎல் ஆட்டத்தில் 28 விக்கெட்டுகளை பிராவோ வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள், அதிக ரன்கள் என இரண்டிலுமே சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.