எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 2 - சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்ட பசுமைப்பண்ணை மலிவு விலைக்ககாய்கறி கடைகளில் 12 நாட்களில் ரூ.50 லட்சம் விற்பனையாகியுள்ளது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள் விலையேற்றத்தை தடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா பண்ணை பசுமை காற்கறிகள் விற்பனை திட்டத்தை கடந்த 20-ந் தேதி தொடங்கி வைத்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் இந்த மலிவு விலை காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் காய்கறிகளை கொள்முதல் செய்து பசுமையாக விற்பனை செய்யப்படுவதால் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
திட்டம் தொடங்கி 10 நாளில் அதாவது 30-ந்தேதி வரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 492 கிலோ காய்கறிகள் (160 மெட்ரிக் டன்) விற்பனையாகி உள்ளது. மொத்தம் 43 லட்சத்து 25 ஆயிரத்து 369 ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது. இந்த இரண்டு நாட்களையும் சேர்த்தால் காய்கறிகள் விற்பனை மதிப்பு ரூ.50 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காய்கறிகள் பொதுமக்கள் தேவைக்கு போதுமான அளவு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் காய்கறிகளை தேர்வு செய்து எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது. ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓட்டன் சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் காமதேனு சுப்ைபர் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காய்கறி கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
மலிவு விலை காய்கறி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இரவு வரை காத்திருந்து காய்கறிகளை வாங்கி செல்வதால் வெளி மார்கெட் காய்கறி கடைகளில் விற்பனை சரிந்தது. இதனால் அவர்கள் மலிவு விலை கடைகளில் விற்கப்படும் விலைக்கே தற்போது விற்பனை செய்கிறார்கள்.
பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றின் விலையை திடீரென குறைத்தனர். தனியார் நடத்தும் காய்கறி கடைகளில் விலை குறைக்கப்பட்டு இருந்தாலும், ஏழை, நடுத்தர மக்கள் அரசின் காய்கறிகடைகளை நாடிச் செல்கிறார்கள்.
காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல் பசுமையாகவும், நீண்டநேரம் காத்து நிற்காமல் உடனே வாங்கிச் செல்ல ஏதுவாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காய்கறிகள் வாங்க வருபவர்கள் பில் போடுவதற்கு ரொம்ப நேரம் காத்து நிற்பதை தவிப்பதற்காக கூடுதலாக பில்லிங் கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன.
காய்கறிக்கடைகளில் தற்போது 29 எலக்ட்ரானிக் பில்மெஷின் உள்ளது. மேலும் 19 மெஷின் வாங்கப்படுகிறது. மழைக்காலத்தில் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்க வசதியாக கூடாரம் அமைக்கப்படுகிறது. ஊழியர்கள் பணியில் சேர்வடையாமல் இருப்பதற்காக மேலும் ஒரு ஷிப்டுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மாலையில் காய்கறிகள் பசுமையாக விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தாமதம் இல்லாமல் காய்கறிகள் கிடைக்க ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி ஆட்டோ பயன்படுத்தவும் முடிவு செய்யப்படுகிறது. லாரிகளில் கோயம்பேட்டுக்கு வரும் காய்கறிகளை ஆட்டோ ஏற்றி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. உருளை கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை வெளிமாநிலங்களில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் இல்லாமல் காய்கறிகள் வாங்கி செல்ல வசதியாக வெளிபுறங்களில் காய்கறிகள் குவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



