முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழிந்த 10 காவலர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.18 - உடல்நலக்குறைவு மற்றும் விபத்து போன்றவற்றால் உயிரிழிந்த 10 காவலர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்..

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த எம்.பாலசுப்பிரமணியம் 18.11.2013 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; 

சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் நிலைய  போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த டி. சேகர் 19.11.2013 அன்று  மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்; 

கன்னியமாகுமரி மாவட்டம், கீரிப்பாறை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ரைமன்ட்  19.11.2013 அன்று காளிகேசம் அருகே ஆற்றில் விழுந்த தனது மகளை காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை 'எப்' நிறுமம் 34_ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஏ. சதிஷ்குமார் 2.11.2013 அன்று மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த எம். கணேசன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 23.11.2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 

நாகப்பட்டினம் மாவட்டம், ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.பிரபாகரன் 23.11.2013 அன்று வெளிப்பாளையம்  அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

மதுரை நகரம், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையத்தில் தீயணைப்போராகப் பணி புரிந்து வந்த கே.சந்திரசேகரன்  23.11.2013 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்; 

சென்னை பெருநகர காவல்,  வண்ணாரப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த எஸ்.எம்.அமானுல்லா 24.11.2013 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்; 

சென்னை பெருநகரக் காவல்,   பாதுகாப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கே.ராஜேந்திரன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 25.11.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்;

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.சரவணன் 25.11.2013 அன்று மாரடைப்பால்  காலமானார்   என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.  

காவல் துறை  சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம், சேகர், ரைமன்ட், கணேசன், அமானுல்லா, ராஜேந்திரன்; தலைமைக் காவலர் சரவணன்; காவலர்கள் சதிஷ்குமார்,  பிரபாகரன் மற்றும் தீயணைப்போர் சந்திரசேகரன்  ஆகியோரின்  அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 மறைந்த தீயணைப்போர் மற்றும் காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.   

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்