முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானம் தேடுதல் வேட்டையில் மேலும் 2 இந்திய விமானங்கள்

சனிக்கிழமை, 22 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

கோலாலம்பூர், மார்ச் 23 - மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய விமானம் நடுவானில் மாயமானது.

கடந்த 8-ந் தேதி அதி காலை 2:40 மணியளவில் விமான கட்டுபாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த விமானம் மாயமாகி இன்றுடன் 3 வாரம் ஆகிறது. விமானம் தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என கரபதப்பட்டது. எனவே தேர்தல் வேட்டையில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட 25 நாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் தேடியும் உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதற்கிடையே தெற்கு இந்திய பெருங்கடளின் பகுதியில் உடைந்த 2 துண்டுகள் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கை கொள் கண்டுபிடித்தது. ஆங்கு தேடும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. இருந்தும் எந்த தடையமும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் தெடும் வேட்டையில் மேலும் 2 போர் விமானங்களை இந்தியா அனுப்பியுள்ளது. அவை அரக்கோனம் விமான தளத்தில் உள்ள ஏசி-130 ஜெ சூப்பர் ஹெர்குல்ஸ் மற்றும் கடற்படையினர் பி.81 ரக விமானமாகும். இவை சர்வதேச நாடுகளுடன் இணைந்து தேடும் பணியில் உள்ளன.

தேடுதல் பணியில் இந்தியாவின் உதவியை மலேசியா நாடியது. எனவே மாயமான விமானத்தை தேடும் பணிக்கு முழு ஒத்துழைப்பு தர இந்தியா சம்மதித்தது. அதன்படி 6 போர் கப்பல்கள், 5 போர் விமானங்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடலில் செயறகை கொளில் அடையாளம் காட்டப்பட்ட 23 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடியும் இதுலரை எந்த தடையமும் கிடைக்கவில்லை. இருந்தும் அப்பகுதியில் ஆஸ்திரேலியாவின் 2 போர் விமானங்கள், நியூசிலாந்த மற்றும் அமெரிக்காவின் தலா ஒரு போர் விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மேலும் 5 சரக்கு கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

இதற்கிடையே கடந்த 16-ஆம் தேதி எடுக்கப்பட்ட செய்ற்கைகோள் படத்தை ஆதாரமாக வைத்து விமானம் தேடப்பட்டு வருகிறது. தற்போது அப்படம் எடுக்கப்பட்டு 5 நாட்களான நிலையில் புகைபடத்தில் தெரிந்த 2 துண்டுகளும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று ஆஸ்திரேலியா துணைத் பிரதமர் வாரன் டிரஸ் கூறியுள்ளார்.

இருந்தாலும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரேடியோ அதிர் வலைகளை வெளியிடும் மிதவைகள் ஆஸ்திரேலிய விமானத்தில் இருந்து வீசப்பட்டுள்ளன. இதன் மூலம் கடலுக்கு அடியில் ஏதாவது பொருட்கள் மூல்கி இருந்தால் அவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்