முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோர்ஜிவின் தொகுதியில் ஜூலை 14ல் இடைத்தேர்தல்

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

இடாநகர், ஜூன் 17 - ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் சட்டமன்ற தொகுதியில் வருகிற ஜூலை 14 ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்த டோர்ஜி காண்டு கடந்த சென்ற மாதம் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இதனால் தவாங் மாவட்டம் முக்டோ சட்டமன்ற தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவி காலியானது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 14 ம் தேதி நடைபெறும் என்று அருணாச்சல பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 20 ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 27 ம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 28 ம்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஜூன் 30. ஜூலை 14 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து 18ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்த தொகுதியில் 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை இவர் இந்த தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவற்றில் 3 முறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பீமா காண்டு போட்டியிடுகிறார். இவர் டோர்ஜி காண்டுவின் மூத்த மகனாவார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்