எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.23 - முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில், கேரள அரசின் அக்கிரமபோக்கை கண்டித்து மதுரையில் ஆக.17-ம் தேதி வைகோ தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது என்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்- ஆட்சிமன்றக்குழு அரசியல் ஆலோசனைக்குழு - அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை கட்சியின் அவைத்தலைவர் திருப்nullர் சு. துரைசாமி தலைமையில் சென்னை, தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மதுரையில் உண்ணாநிலை அறப்போர்!
தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கக் கூடிய ஆபத்தாக, முல்லைப்பெரியாறு பிரச்சினை உருவெடுத்து உள்ளது. பென்னி குக் கட்டிய அணை வலுவாக இருக்கின்றது என்று, ஆண்டுக்கணக்கில் வழக்கு நடைபெற்று, அதில் உச்சnullதிமன்றத்தில் மூன்று nullநீதிபதிகள், தமிழகத்தின் அடிப்படை உரிமையை நிலைநாட்டி, nullநீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும், இதில் கேரள அரசு எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்றும், திட்டவட்டமான தீர்ப்பை, 2006 பிப்ரவரி 27 இல் உச்சநீnullதிமன்றம் தந்து இருந்தது.
அதை எதிர்த்து, கேரளச் சட்டமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கும் கேரள அரசுக்கு உரிமை உண்டு என்றும், இதில் எந்த nullநீதிமன்றமும் தலையிட முடியாது என்றும் நிறைவேற்றிய சட்டம், இந்திய அரசின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பகிரங்கமாக விடுக்கப்பட்டு உள்ள சவால் ஆகும். இந்தப் போக்கை, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமையில், மத்திய அரசு தவறியது. இதுகுறித்துத் தமிழக அரசு உச்சnull நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில், உச்சnull நீதிமன்றமும், கேரள அரசின் விபரீதமான நடவடிக்கையைக் கண்டிக்கவும் இல்லை,ரத்துச் செய்யவும் முன்வரவில்லை.
வழங்கப்பட்ட null நீதியைப் பறித்துக் கொள்ளும் வகையில், ஏற்கனவே உச்ச நீnullதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்களான பிரார் குழுவும், மிட்டல் குழுவும் தந்த அறிக்கைகளை உதாசீனம் செய்து விட்டு, பென்னி குக் கட்டிய அணை வலுவாக உள்ளதா? என்று ஆராயவும், கேரள அரசு உத்தேசிக்கின்ற புதிய அணை பற்றிக் கருத்து அறியவும், ஐந்து nullநீதிபதிகளைக் கொண்ட உச்சnullதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட்ட செய்தியாகும்.
உச்சnullநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பின்படி அமைக்கப்பட்ட குழு, ஆய்வுகள் மேற்கொள்ளும் காலகட்டத்திலேயே, நாங்கள் புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று கேரள அரசு அறிவித்ததோடு, அதற்கு ஐந்து கோடி ரூபாய் முதலீடாக ஒதுக்கியது. தற்போது புதிய அணைக்கான ஆய்வு வேலைகளில் பொறியாளர்களை ஈடுபடுத்தி
வருகிறது. பென்னி குக் அணையை எவ்விதத்திலும் சேதப்படுத்திச் செயல் இழக்கச் செய்வதே கேரள அரசின் உண்மையான திட்டம். உத்தேசிக்கப்படும் அணை பள்ளத்தில் அமையும் என்பதால், கேரளம் விரும்பினாலும்கூட, பின்னாளில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரவே முடியாமல் போய்விடும்.
தெற்குச் சீமையில், ஐந்து மாவட்டங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பாசனத்தை இழப்பதற்கும், மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் குடிதண்ணீருக்கும் வழி இல்லாமல் போய்விடும்.
ஆபத்து வருமுன் காப்பதுதான அறிவு உடைமை ஆகும். எனவே, பென்னி குக் கட்டிய அணையைப் பாதுகாக்கவும், கேரள அரசு புதிய அணையைக் கட்ட விடாமல் தடுக்கவும், உரிய நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டாக
வேண்டும்.
எனவே, தென்பாண்டி மண்டலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தொடர்ந்து போராடி வருகின்ற ம.தி.மு.க, ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று, முல்லைப்பெரியாரில் தமிழக உரிமை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப்போக்கைத் தடுக்கவும், மதுரை மாநகரில், மாபெரும் உண்ணாநிலை அறப் போராட்டத்தை, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடத்துவது என்று, இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது.
இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னுர் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில், இந்திய இராணுவம் தற்போது பயிற்சி அளித்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
ஈழத்தமிழர்கள் படுகொலை; டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைத் தாக்குதல்களில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னமும், இலட்சக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டு
வாடித் தவிக்கின்றனர்.
சிங்களர்கள் நடத்திய அதிர்ச்சி தரும் படுகொலைக் காட்சிகளை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதன் விளைவாக, உலகின் பல நாடுகள் உண்மை நிலையை அறியத்தொடங்கி உள்ளன.
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்கிமூன் அமைத்த மூவர் குழு தந்த அறிக்கையும், சிங்கள அரசு மனிதநேயச் சட்டங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என அனைத்துத் தமிழர்களையும் அழிக்கின்ற திட்டத்தோடு, இனப்படுகொலை நடத்தியதை உறுதி செய்து உள்ளது.
நாஜிகள் செய்த கொடுமைகளைப் போல, ஈழத்தமிழர்களை அழிக்கக் கொடுஞ்செயல் புரிந்த இனக்கொலை யுத்தத்துக்கு, காங்கிர தலைமையிலான இந்திய அரசு ஆயுத உதவி செய்ததுடன், சிங்கள அரசின் போரைப் பின்னால் இருந்து அனைத்து வழிகளிலும்
ஊக்குவித்து இயக்கியது, தமிழர்களுக்கு எதிரான, மன்னிக்க முடியாத துரோகச் செயல் ஆகும்.
இராஜபக்சேயும், அவனது கூட்டாளிகளும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்; ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு, வட்டக்கோட்டைத் தீர்மானத்தின்படி ஒரே தீர்வான, சுதந்திர இறையாண்மை உள்ள தமிடிந ஈழத் திருநாட்டை அமைப்பதற்குப் பொது
வாக்கெடுப்பு நடத்திட வேண்டும்; இலங்கை அரசோடு இந்திய அரசு செய்து கொண்டு உள்ள வணிக, பொருளாதார ஒப்பந்தங்களை ரத்து செடீநுதிட வேண்டும்; இதுவரை அனைத்து நாடுகள் மன்றத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவு தந்து வரும் போக்கை நிறுத்திக்கொண்டு, இனியாவது சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்தக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திடவும், இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவு திரட்டும் நோக்கோடு, பிரச்சினையை மக்கள் மன்றத்துக்குத் தெரிவிக்கவும், இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களையும் வேண்டிக் கொள்ளவும்; தலைநகர் டெல்லியில், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று,
நாடாளுமன்றத்துக்கு எதிரே, பொதுச்செயலாளர் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று, இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
இஸ்ரேலுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுத்த ஈரான்
12 May 2024டெக்ரான் : இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து உள்ளது.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
கனமழை: கர்நாடக மாநிலத்தில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
12 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது.