முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவுப் பொருள் பணவீக்கம் கவலை அளிக்கிறது - பிரணாப்

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 2 - உணவுப் பொருள் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை தொட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம் 10.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதத்தில் முதன்முறையாக உணவுப் பொருள் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கிறது. இதுகுறித்து மத்திய  நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், உணவுப் பொருள் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. உணவுப் பொருட்களின் சப்ளை மிகவும் குறைந்துள்ளது. இந்த சப்ளையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். பணவீக்கம் என்பது எப்போதுமே ஒரு கவலைக்குரிய அம்சம்தான். உணவுப் பொருட்களின் சப்ளையை அதிகரிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். பழங்களின் விலைகள் 21.58 சதவீதமும், காய்கறிகளின் விலைகள் 15.78 சதவீதமும் உயர்ந்துள்ளன. முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலைகள் 12.62 சதவீதம் அதிகரித்துள்ளன. மேலும் பால், தானியங்களின் விலைகள் முறையே  9.22 சதவீதமாகவும், 4.64 சதவீதமாகவும்  உயர்ந்துள்ளன. இந்த தகவல்கள் மத்திய புள்ளி விபரவியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்