எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.8 - கூட்டணி முறிவு விலகல் என்று ஊடல் காட்டிய கருணாநிதி ராஜினாமா நாடகம் நடத்த தி.மு.க. தரப்பு மத்திய மந்திரிகளை ராஜினாமா கடிதத்துடன் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற ஒரு வார்த்தைக்காக தவம் கிடந்த தி.மு.க. தலைவர்களுக்கு அவர்கள் எண்ணப்படியே காங்கிரஸ் பிரணாப்முகர்ஜி மூலம் சிக்னல் காட்டியதும், உடனே செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் தரப்பில் பேசியுள்ளார் என்று சந்தோஷமாக தெரிவித்தனர். காங்கிரஸ் ஒரு படி முன்னேறி உள்ளதால் தங்கள் தரப்பு முன்னேற்றத்தை தெரிவிக்க தங்கள் ராஜினாமா நாடகத்தை ஒரு நாள் ஒத்தி வைத்துள்ளனர்.
ஆரம்பம் முதலே தி.மு.க. காங்கிரஸ் உறவு மேலும் இனித்தாலும் உள்ளுக்குள் வேம்பாக கசந்து கொண்டிருந்தது. கருணாநிதி பூசி மழுப்பி மூடி மறைத்தாலும் அது வெடிக்கவே செய்தது. ஐவர் குழு என்ற ஐவாஷ் குழு அமைத்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியபோது தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காங்கிரஸ் தொடர்ந்து அதை நீடித்து மேலும் மேலும் அதிர்ச்சி கொடுத்தது. கருணாநிதி விலகல் தீர்மானத்தில் சொன்னதுபோல் கருணாநிதியும், கழகமும் எந்த காலத்திலும் சந்திக்காத சோதனையாக அது அமைந்தது.
ஒரு கட்டத்தில் சீட்டு பேரம் என்பதை தாண்டி தனது மகள் கனிமொழி துணைவியார் ராஜாத்தி அம்மாள் மீது சம்மன் பாயாமல் இருக்க காங்கிரசை கருணாநிதி வலியுறுத்த தொடங்கினார். இதை வைத்து விலக கருணாநிதி முடிவெடுத்தார். மறுபுறம் காங்கிரசின் எண்ணம் வேறாக இருந்தது. தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் கேரளா, மேற்கு வங்காளத்தில், பாண்டிச்சேரியில், அஸ்ஸாமில் காங்கிரஸ் ஸ்பெக்ட்ராம் ஊழலில் திளைத்து தி.மு.க.வுடன் கைகோர்த்து வருவது எதிர்க் கட்சிகள் பிரச்சாரத்தில் பிரதானமாக இருக்கும் ஆகவே தமிழ்நாட்டை மட்டும் பார்த்தால் மற்ற மாநிலங்களை கோட்டைவிட வேண்டி இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்டாலும் மற்ற 4 மாநிலங்களில் ஊழல் தி.மு.க.வை கைகழுவி விட்டோம். ராசா மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறி தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க.வுடன் தொகுதி ஒதுக்கீட்டை காரணமாக வைத்து முரண்டு பிடித்தனர். இரு தரப்பிலும் மறைமுகமாக வேறு காரணம் இருந்தாலும் 3 சீட்டுக்காக உடைத்ததாக விலகல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றினார்.
காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. விலகல் நாடகம் நடத்தினாலும், ராஜினாமாவை திங்கட்கிழமை வரை தள்ளி வைத்து காங்கிரஸ் இறங்கி வராதா என்று காத்திருந்தார். பின்பு ராஜினாமா லட்டரை பிரதமருக்கு பேக்ஸ் அனுப்பாமல் அனைவரையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
இடையில் குடும்ப தொலைக்காட்சி முதல் அனைத்து சொந்த தொலைக்காட்சிகளிலும் அறிவாலயம் பக்கம் 5 பேர் கும்பலாக சென்றால் கூட அழைத்து வந்து பாரீர், பாரீர் அரசியல் கட்சிகள் அமைப்புகள் எல்லாம் காங்கிரஸ் வெளியேறியதால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று காட்டிய கூத்தும் நடந்தது.
கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அறிவாலயத்திற்கு வந்து கருணாநிதியை கட்டி பிடித்து ஒப்பாரி வைத்து விட்டு வெளியே வந்து காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் தி.மு.க. பெரும்பலம் பெற்று விட்டதாகவும் தாங்கள் மிகுந்த சந்தோஷமாக உள்ளதாகவும் கூறிக்கொண்டனர்.
இதில் மிகப்பெரிய காமெடி: தி.மு.க. செய்தி தொடர்பாளர்? திராவிடர் கழக தலைவர் வீரமணியின் அறிக்கைதான். உலக தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை சந்தோஷப்படுகின்றனர் என்று கூறி காமெடி பண்ணினார். அப்படியானால் தி.மு.க. காங்கிரஸ் உறவை உலக தமிழர் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை இது நாள் வரை வெறுத்து வந்தார்களா என்று கேட்க தோன்றுகிறது.
திருமாவளவனும் தனது பங்கிற்கு கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க. அணிக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை நினைக்க மறந்து விட்டார்கள். அதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாத புத்தி. தங்கள் குடும்பத்திற்கு பங்கம் வராமலிருக்க கழகத்தை அடகு வைக்க தயங்க மாட்டார் என்பதுதான் அது.
இதுதான் நேற்றைய தினம் டெல்லியில் நடந்தது. இவர்கள் ராஜினாமா லட்டரை கையில் வைத்து கொண்டு கொடுக்காமல் மீடியாக்களை அழைத்து பேசிக்கொண்டு இருந்ததும் காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜி, ஆசாத் ஆகியோர் கருணாநிதியிடம் பேசியதும் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.
``வரும் ஆனா வராது'' என்று வடிவேல் படத்தில் வரும் காமெடி போல் இவர்கள் கூட்டணி கதை மாறிபோனது.
இறுதியில் ராஜினாமாவை எப்படியும் மாலைக்குள் கொடுத்து தானே ஆகவேண்டும் அப்ப முடிவு வரத்தானே போகுது என்று செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
வீரவசனம் பேசுவதும் காலில் விழுவதும் காலை வாருவதும் எங்களுக்கு கை வந்த கலை வீரவசன படலம் முடிந்ததால் தற்போது காலில் விழும் படலம் என்று காங்கிரஸ் இறங்கி வருவதற்கு தோதாக 1 நாள் ராஜினாமா நாடகத்தை தள்ளி வைத்ததாக முடிவில் அறிவித்துள்ளனர். ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் ஒரு நாள் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
இப்பொழுது அடிமட்ட தி.மு.க. தொண்டனின் கேள்வி எல்லாம் தலைவா காங்கிரஸ் வெளியேறியதால் சந்தோஷப்படுவதாக ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து படம் பிடித்து காட்டினீர்களே இப்போது மீண்டும் கூட்டணி வந்தால் தொண்டர்களுக்கு எல்லாம் கவலை உங்களுக்கு மட்டும் சந்தோஷமா என்று கேட்கிறான். அதற்கு தயாராக உடன் பிறப்புக்கு கடிதம் தயார் செய்ய தெரியாதா என்ன. நாளை மீண்டும் கூட்டணி சேர்ந்தால் அடிபொடி அமைச்சர்கள் கருணாநிதியின் ராஜதந்திரம் என்று கூறிக்கொள்வார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.