முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் இன்னும் மாணவன்தான்: நடிகர் கமல் ருசிகர பேச்சு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ. 15 - பள்ளிப் படிப்பை முடிக்காததால் நான் என்னை இன்னும் மாணவனாகவே உணருகின்றேன் என்று நடிகர் கமலஹாசன் கூறினார். பேராசிரியர் ஞானசம்பந்தன் எழுதிய இலக்கிய சாரல், ஜெயிக்கப் போவது நீதான், மேடை பயணங்கள், சந்தித்ததும், சிந்தித்ததும், சிரித்துக் கொண்டே ஜெயிப்போம் என்ற 5 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன் பேசும் போது, 

ஞானசம்பந்தனும், நானும் பல ஆண்டு நண்பர்கள். அவருடன் பல அறிவார்ந்த விஷயங்களை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் ஞானசம்பந்தனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஞானசம்பந்தனின் நகைச்சுவை இயல்பான ஒன்று. அவர் சிறந்த இலக்கியவாதி. ஆனாலும் தன்னுடைய புலமையை, தான் அறிந்த கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக, நகைச்சுவை உணர்வோடு உணர்த்தி விடுவார். இந்த புத்தகங்களிலும் அந்த எளிமை, நகைச்சுவை இருக்கிறது. அதனால் இவை அனைவரையும் சென்றடையும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்