முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை வருமானம் ரூ.3 கோடியை தாண்டியது

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், நவ.- 21 - சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறந்த 3-வது நாட்களிலேயே வருமானம் ரூ.3 கோடியை தாண்டியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள  சபரிமலை உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் திருத்தலம்.  இங்கு எழுந்தருளியுள்ள தர்மசாஸ்தாவைக்  காண இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கிளம்பிவிடுகிறார்கள். சிறிதுகாலமாவது விரதம் இருந்து பக்தர்கள் ஐயப்பனை காண செல்வது வழக்கம். ஆனால் இம்முறை முன் எப்போதும் இல்லாத அளவில் கார்த்திகை மாதம் ஆரம்பித்ததில் இருந்தே சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இந்த நீண்ட வரிசை 18 ம் படியில் இருந்து சரங்குத்தி வரை நீள்கிறது. அதேபோல சபரிமலையில் வழங்கப்படும் அரவணை, அப்பம் போன்ற பிரசாத பொருட்களை வாங்குவதற்கும் நீண்ட வரிசை காணப்படுகிறது. அதேபோல  சபரிமலை கோவிலில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வருமானமும் அதிகரித்துள்ளது. நடை திறக்கப்பட்ட 3 நாட்களிலேயே கோவில் வருமானம் 3 கோடியை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago