எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 23 - 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாகவும், தேசவிரோத கம்பெனிகளுக்கு 2 ஜி அலைக்கற்றைகளை விற்றதாகவும் ப.சிதம்பரம் மீது சுப்ரமண்யசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமண்யசாமி கூறியதாவது:- ப.சிதம்பரத்திற்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளை வைக்கிறேன். முதல் குற்றச்சாட்டு ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்து 2001-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விலைக்கு விற்றுள்ளார். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது டெலிகாம் மந்திரி ஆக ஆ.ராசா இருந்துள்ளார். 2001-ம் ஆண்டு ஜனவரி அன்று பிரதமருக்கு நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுகிறார். அதில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை விற்பனை சம்பந்தமாக தானும் ராசாவும் பொறுப்பு என்று எழுதி உள்ளார். வர்த்தகம் சம்பந்தமான பிரிவு 7 விதியின்படி நிதிஅமைச்சர் டெலிகாம் அமைச்சருக்குள் ஒற்றுமை வராவிட்டால் கேபினட்டுக்கு முடிவை அனுப்ப வேண்டும் என்று விதி இருந்தது. ஆகவே ப.சிதம்பரம் ராசாவுடன் கூட்டாக சேர்ந்து கேபினட் முடிவுக்கு வராமல் முடிவெடுத்து ஸ்பெக்டரம் உரிமையை விற்றனர். இதனால் நாட்டுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ரியாலிட்டி, ஸ்வான், யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் வாங்கிய உரிமைகளை 3 வருடத்திற்கு விற்ககூடாது என்பதை மீறி விற்றனர். லைசென்சை விற்க முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் கம்பெனியை விற்கலாம் என்று ராசாவுக்கு சிதம்பரம் வழிகாட்டி உள்ளார். இதை வாங்கிய கம்பெனிகள் 3 ஆண்டுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்க முடியாது என்ற நிலையை மாற்றி உடனடியாக பல மடங்கு விலைக்கு விற்று லாபமீட்ட வழி செய்துள்ளார். மூன்றாவதாக நிதிஅமைச்சர் சிதம்பரத்திற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கடிதம் எழுதி உள்ளார். அதில் இரண்டு கம்பெனிகள் தேசத்துரோக பட்டியலில் உள்ளவை எடிசாலட், டெலிநோட் ஆகிய கம்பெனிகள் தான் அவை. தயவு செய்து அவற்றுடன் எந்த வர்த்தக உறவு இருந்தாலும் அவைகளை கேன்சல் செய்து விடுங்கள் உள்ளே விடாதீர்கள். எடிசலாட் பாக் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் இந்திய ப்ராஜக்ட்டின் சி.இ.ஓ. ஷபீப் என்பவர் தாவூத் இப்றாஹிமின் ஆள் உள்துறை அமைச்சகத்தின் பிளாக் லிஸ்ட்டில் உள்ள கம்பெனி இது. இதேபோல் டெலினோ டெலிகாம் மிஷனரி சைனாவை சேர்ந்த நிறுவனம் முக்கியமான சமயத்தில் பாதுகாப்பு துறை கம்ப்யூட்டர் செயல்பாடுகளை செயலிழக்க வைத்து விடமுடியும் என்று எச்சரித்தும் அவைகளுக்கு லைசென்ஸ் வழங்கிய ராசாவுக்கு துணை போனார். இந்த 3 குற்றங்களிலும் சிதம்பரத்திற்கு மிகப்பெரிய தண்டனை காத்துள்ளது. வரும் டிசம்பர் 3-ம் தேதி ராசாவுடன் சேர்ந்து ப.சிதம்பரமும் குற்றவாளி என்ற வாதத்தை கோர்ட்டில் எடுத்து வைப்பேன் என்றார். 2008-ம் ஆண்டு ராசாவும் சிதம்பரமும் 4 முறை மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தித்துள்ளனர். நீராராடியாவிடம் டெலிபோனில் ராசா உரையாடும்போது அதிகபணம் கேட்டு சிதம்பரம் நச்சரிப்பதாக பேசி உள்ளார். அப்போது 2001-ம் ஆண்டு அடிப்படை விலையான 1620 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இது பற்றி சி.பி.ஐ.யும் சார்ஜ்ஷீட்டில் குறிப்பிட்டுள்ளது. இதைபெற்ற டாடா 13 மடங்கும் ஏர்செல் 20 மடங்கும் மற்ற நிறுவனங்கள் பலமடங்கு கூடுதல் விலைவைத்தும் விற்றன. இவை அனைத்தும் நிதிஅமைச்சக ஆவணங்களில் உள்ளது. இவை சி.பி.ஐ. வசமும் உள்ளது. 1976-ல் இந்திராகாந்தி கோர்ட்டில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு எம்.பி.பதவி பறிக்கப்பட்டது போல் சிதம்பரம் தண்டிக்கப்படுவது உறுதி. சிதம்பரத்திற்கு எதிராக 17 வழக்குகள் உள்ளது. 35 ஆயிரம் கோடி ரூபாய் அவர் கணக்கில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது.
இவ்வாறு சுப்ரமண்யசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.