எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 23 - 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாகவும், தேசவிரோத கம்பெனிகளுக்கு 2 ஜி அலைக்கற்றைகளை விற்றதாகவும் ப.சிதம்பரம் மீது சுப்ரமண்யசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமண்யசாமி கூறியதாவது:- ப.சிதம்பரத்திற்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளை வைக்கிறேன். முதல் குற்றச்சாட்டு ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்து 2001-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விலைக்கு விற்றுள்ளார். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது டெலிகாம் மந்திரி ஆக ஆ.ராசா இருந்துள்ளார். 2001-ம் ஆண்டு ஜனவரி அன்று பிரதமருக்கு நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுகிறார். அதில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை விற்பனை சம்பந்தமாக தானும் ராசாவும் பொறுப்பு என்று எழுதி உள்ளார். வர்த்தகம் சம்பந்தமான பிரிவு 7 விதியின்படி நிதிஅமைச்சர் டெலிகாம் அமைச்சருக்குள் ஒற்றுமை வராவிட்டால் கேபினட்டுக்கு முடிவை அனுப்ப வேண்டும் என்று விதி இருந்தது. ஆகவே ப.சிதம்பரம் ராசாவுடன் கூட்டாக சேர்ந்து கேபினட் முடிவுக்கு வராமல் முடிவெடுத்து ஸ்பெக்டரம் உரிமையை விற்றனர். இதனால் நாட்டுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ரியாலிட்டி, ஸ்வான், யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் வாங்கிய உரிமைகளை 3 வருடத்திற்கு விற்ககூடாது என்பதை மீறி விற்றனர். லைசென்சை விற்க முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் கம்பெனியை விற்கலாம் என்று ராசாவுக்கு சிதம்பரம் வழிகாட்டி உள்ளார். இதை வாங்கிய கம்பெனிகள் 3 ஆண்டுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்க முடியாது என்ற நிலையை மாற்றி உடனடியாக பல மடங்கு விலைக்கு விற்று லாபமீட்ட வழி செய்துள்ளார். மூன்றாவதாக நிதிஅமைச்சர் சிதம்பரத்திற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கடிதம் எழுதி உள்ளார். அதில் இரண்டு கம்பெனிகள் தேசத்துரோக பட்டியலில் உள்ளவை எடிசாலட், டெலிநோட் ஆகிய கம்பெனிகள் தான் அவை. தயவு செய்து அவற்றுடன் எந்த வர்த்தக உறவு இருந்தாலும் அவைகளை கேன்சல் செய்து விடுங்கள் உள்ளே விடாதீர்கள். எடிசலாட் பாக் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் இந்திய ப்ராஜக்ட்டின் சி.இ.ஓ. ஷபீப் என்பவர் தாவூத் இப்றாஹிமின் ஆள் உள்துறை அமைச்சகத்தின் பிளாக் லிஸ்ட்டில் உள்ள கம்பெனி இது. இதேபோல் டெலினோ டெலிகாம் மிஷனரி சைனாவை சேர்ந்த நிறுவனம் முக்கியமான சமயத்தில் பாதுகாப்பு துறை கம்ப்யூட்டர் செயல்பாடுகளை செயலிழக்க வைத்து விடமுடியும் என்று எச்சரித்தும் அவைகளுக்கு லைசென்ஸ் வழங்கிய ராசாவுக்கு துணை போனார். இந்த 3 குற்றங்களிலும் சிதம்பரத்திற்கு மிகப்பெரிய தண்டனை காத்துள்ளது. வரும் டிசம்பர் 3-ம் தேதி ராசாவுடன் சேர்ந்து ப.சிதம்பரமும் குற்றவாளி என்ற வாதத்தை கோர்ட்டில் எடுத்து வைப்பேன் என்றார். 2008-ம் ஆண்டு ராசாவும் சிதம்பரமும் 4 முறை மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தித்துள்ளனர். நீராராடியாவிடம் டெலிபோனில் ராசா உரையாடும்போது அதிகபணம் கேட்டு சிதம்பரம் நச்சரிப்பதாக பேசி உள்ளார். அப்போது 2001-ம் ஆண்டு அடிப்படை விலையான 1620 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இது பற்றி சி.பி.ஐ.யும் சார்ஜ்ஷீட்டில் குறிப்பிட்டுள்ளது. இதைபெற்ற டாடா 13 மடங்கும் ஏர்செல் 20 மடங்கும் மற்ற நிறுவனங்கள் பலமடங்கு கூடுதல் விலைவைத்தும் விற்றன. இவை அனைத்தும் நிதிஅமைச்சக ஆவணங்களில் உள்ளது. இவை சி.பி.ஐ. வசமும் உள்ளது. 1976-ல் இந்திராகாந்தி கோர்ட்டில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு எம்.பி.பதவி பறிக்கப்பட்டது போல் சிதம்பரம் தண்டிக்கப்படுவது உறுதி. சிதம்பரத்திற்கு எதிராக 17 வழக்குகள் உள்ளது. 35 ஆயிரம் கோடி ரூபாய் அவர் கணக்கில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது.
இவ்வாறு சுப்ரமண்யசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


