எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.15 - தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல் துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகாரிகள் வந்துள்ளது. இதை பரிசீலித்து வருகிறோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது பற்றி விபரம் வருமாறு:-
சென்னையில் தேர்தல் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தினார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் பிரவீன்குமார், வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மாலையில் தேர்தல் ஆணையர்கள் சகிதமாக குரேஷி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காலையில் தமிழகம் வந்தோம். தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக 9 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக தங்கள் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் எங்களிடம் தெரிவித்தார்கள்.
சில நாட்களாக வாகன சோதனை மூலம் முறைகேடாக கொண்டு செல்லும் பணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சியினரும் திருப்தி தெரிவித்தார்கள்.
மேலும் இந்த நடவடிக்கையா தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின கீழ் அளிக்கப்படும் கூலித்தொகையுடன் ஓட்டுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதாக புகார் வந்துல்ளது. அதை கவனமாக பரிசீலித்து வருகிறோம்.
பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் கட்டமாக ஆணையர்கள், காவல்துறை தலைவர்கள், இணை ஆணையர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்து தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் , காவல் துறை தலைவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
இந்த ஆலோசனையில் தேர்தல் நடைமுறைகள் சம்மந்தமாக கண்காணிப்பது வாக்களர்களுக்கு பணம் தருவதை தடுப்பது, போன்றவற்றை சம்மந்தமாக வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. வீடுவீடாக வாக்கு சீட்டு கொடுக்கும் பொழுது வாக்காளர்களுக்கு பணம் தருவது நடைபெறுகிறது என்ற புகார் வந்துள்ளது. அதை தடுப்பதற்காகன முயற்சி எடுக்கப்படும்.
பிரச்சார நேரத்தை 10 மணியிலிருந்து 11 மணியாக மாற்றுவது என்பது எங்கள் கையில் இல்லை. 10 மணி வரை பிரச்சாரம் என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. அதை நாங்கள் மாற்ற முடியாது.
பதற்றமான வாக்குச்சாவடிகளாக 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளை இனம்கண்டு உள்ளோம். தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக வாக்காளர்களிடமிருந்து வரும் புகார்களை கவனத்தில் கொள்கிறோம். இந்த விஷயத்தில் பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் எங்களுக்கு உற்ற நண்பன். நீங்கள்தான் அத்தகைய விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் வரை இடைபட்ட 1 மாத காலத்திற்கு வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மத்திய துணை ராணுவப்படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும், பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் வெளியேயும், உட்புறமும் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் மனுத்தாக்கல் முடிந்து வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்து கணக்குகளும் கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் தனியாக தேர்தல் செலவுக்கு என்று தனியாக வங்கிக்கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக பரிவர்த்தனை முகவர்களை நியமித்துக் கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குபதிவு நடத்துவதற்கு காரணம் மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் தேர்தல் வன்முறைகள் நடைபெறுவதில்லை. கடந்த காலங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய வரலாறுகள் எதுவும் இல்லை. அமைதியான வாக்குப்பதிவு நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்கள் உள்ளதுபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவம் தமிழகத்தில் இல்லை.
மேலும், கடந்த சில கூட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே நாளில் தேர்தல் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. சில இடங்களில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது. அது சம்மந்தமாக பரிசீலித்து வருகிறோம். தனியாக விசாரணை நடத்துவோம்.
எம்.பி.க்களில் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு 2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்திய விஷயத்தில் எங்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தேர்தலில் இந்த விவகாரம் பெரிதாக எதிரொலிக்காது. இந்த தேர்தலில் அமைதியான தேர்தலை நடத்த வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை, பின்பற்ற அனைத்துக் கட்சிகளும் உரிதி அளித்துள்ளனர். பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் விதிமுறைகளை மீறியது சம்மந்தமாக ஆணையம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் அழகிரி தான் தேர்தல் தேர்தல் விதிமுறைகளளை மீறியது சம்மந்தமாக வருத்தம் தெரிவித்து இனி வருங்காலங்களில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவேன் என்று உறுதி மொழி கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை உயர் அதிகாரிகள் செயல்படுவதாக (காவல்துறை தலைவர் லத்திகா சரண், உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி சாபர்சேட், மாநில உளவுப்பிரிவு கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்து ) அ.தி.மு.க. சார்பில் புகார்கள் வந்துள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களிடம் கூறினார்.
பேட்டியின்போது தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் அதிகாரி அமுதா, கூடுதல் ஆணையர்கள் பிரவீன்குமார், வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா