எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.15 - தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல் துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகாரிகள் வந்துள்ளது. இதை பரிசீலித்து வருகிறோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது பற்றி விபரம் வருமாறு:-
சென்னையில் தேர்தல் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தினார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் பிரவீன்குமார், வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மாலையில் தேர்தல் ஆணையர்கள் சகிதமாக குரேஷி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காலையில் தமிழகம் வந்தோம். தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக 9 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக தங்கள் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் எங்களிடம் தெரிவித்தார்கள்.
சில நாட்களாக வாகன சோதனை மூலம் முறைகேடாக கொண்டு செல்லும் பணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சியினரும் திருப்தி தெரிவித்தார்கள்.
மேலும் இந்த நடவடிக்கையா தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின கீழ் அளிக்கப்படும் கூலித்தொகையுடன் ஓட்டுக்கு முறைகேடாக பணம் கொடுப்பதாக புகார் வந்துல்ளது. அதை கவனமாக பரிசீலித்து வருகிறோம்.
பணப்பட்டுவாடா செய்வது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் கட்டமாக ஆணையர்கள், காவல்துறை தலைவர்கள், இணை ஆணையர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்து தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் , காவல் துறை தலைவர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
இந்த ஆலோசனையில் தேர்தல் நடைமுறைகள் சம்மந்தமாக கண்காணிப்பது வாக்களர்களுக்கு பணம் தருவதை தடுப்பது, போன்றவற்றை சம்மந்தமாக வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. வீடுவீடாக வாக்கு சீட்டு கொடுக்கும் பொழுது வாக்காளர்களுக்கு பணம் தருவது நடைபெறுகிறது என்ற புகார் வந்துள்ளது. அதை தடுப்பதற்காகன முயற்சி எடுக்கப்படும்.
பிரச்சார நேரத்தை 10 மணியிலிருந்து 11 மணியாக மாற்றுவது என்பது எங்கள் கையில் இல்லை. 10 மணி வரை பிரச்சாரம் என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. அதை நாங்கள் மாற்ற முடியாது.
பதற்றமான வாக்குச்சாவடிகளாக 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளை இனம்கண்டு உள்ளோம். தேர்தல் விதிமுறை மீறல் சம்மந்தமாக வாக்காளர்களிடமிருந்து வரும் புகார்களை கவனத்தில் கொள்கிறோம். இந்த விஷயத்தில் பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் எங்களுக்கு உற்ற நண்பன். நீங்கள்தான் அத்தகைய விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் வரை இடைபட்ட 1 மாத காலத்திற்கு வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மத்திய துணை ராணுவப்படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும், பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.
மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் வெளியேயும், உட்புறமும் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் மனுத்தாக்கல் முடிந்து வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்து கணக்குகளும் கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் தனியாக தேர்தல் செலவுக்கு என்று தனியாக வங்கிக்கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக பரிவர்த்தனை முகவர்களை நியமித்துக் கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குபதிவு நடத்துவதற்கு காரணம் மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் தேர்தல் வன்முறைகள் நடைபெறுவதில்லை. கடந்த காலங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய வரலாறுகள் எதுவும் இல்லை. அமைதியான வாக்குப்பதிவு நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்கள் உள்ளதுபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவம் தமிழகத்தில் இல்லை.
மேலும், கடந்த சில கூட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஒரே நாளில் தேர்தல் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. சில இடங்களில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளது. அது சம்மந்தமாக பரிசீலித்து வருகிறோம். தனியாக விசாரணை நடத்துவோம்.
எம்.பி.க்களில் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு 2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்திய விஷயத்தில் எங்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தேர்தலில் இந்த விவகாரம் பெரிதாக எதிரொலிக்காது. இந்த தேர்தலில் அமைதியான தேர்தலை நடத்த வழிமுறைகளை, வழிகாட்டுதல்களை, பின்பற்ற அனைத்துக் கட்சிகளும் உரிதி அளித்துள்ளனர். பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் விதிமுறைகளை மீறியது சம்மந்தமாக ஆணையம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் அழகிரி தான் தேர்தல் தேர்தல் விதிமுறைகளளை மீறியது சம்மந்தமாக வருத்தம் தெரிவித்து இனி வருங்காலங்களில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவேன் என்று உறுதி மொழி கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை உயர் அதிகாரிகள் செயல்படுவதாக (காவல்துறை தலைவர் லத்திகா சரண், உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி சாபர்சேட், மாநில உளவுப்பிரிவு கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்து ) அ.தி.மு.க. சார்பில் புகார்கள் வந்துள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி செய்தியாளர்களிடம் கூறினார்.
பேட்டியின்போது தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் அதிகாரி அமுதா, கூடுதல் ஆணையர்கள் பிரவீன்குமார், வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தால் பரபரப்பு
07 Jan 2026திண்டுக்கல், முதல்வர் ஸ்டாலின் சென்ற கார் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான புதிய தகவல்
07 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க.வுக்கு 17 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
07 Jan 2026தமிழகத்தில் ஜன. 9-ம் தேதி முதல் 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026 -
அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் 2 23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு
07 Jan 2026சென்னை, தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன
-
என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: வெனிசுலா நாடாளுமன்றத்தில் மதுரோ மகன் உருக்கமான பேச்சு
07 Jan 2026காரக்கா, அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவர
-
அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: டாக்டர் ராமதாஸ் முக்கிய தகவல்
07 Jan 2026சென்னை, இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
-
துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: ட்ரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்
07 Jan 2026நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
-
அதிகமான வரிவிதிப்பால் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
07 Jan 2026வாஷிங்டன், நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு மக்களின் எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
07 Jan 2026சென்னை, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
திண்டுக்கல் மாவட்டத்திற்கு எட்டு புதிய அறிவிப்புகள்
07 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்துக்கான 8 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
-
வரும் 2026 தேர்தல் நமது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் சவால்: தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லயில் உள்ளவர்களா..? திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
07 Jan 2026சென்னை, 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா?
-
பாக்.கிற்கு ரகசிய தகவல்களை அளித்த இந்திய சிறுவன் கைது
07 Jan 2026சண்டிகார், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
-
நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்
07 Jan 2026சென்னை, சென்னையில் நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டது.
-
இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி
07 Jan 2026சென்னை, இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ஜன. 28-ம் தேதி பிரதமர் தமிழ்நாடு வருகிறார்...? கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்
07 Jan 2026சென்னை, வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகயுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இறுதி செய்ய பா.ஜ.க.
-
கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த விவகாரம்: மாணவிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
07 Jan 2026மதுரை, கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியிருக்க வேண்டும்: செங்கோட்டையன் கருத்து
07 Jan 2026சென்னை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விவகாரம் குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
இ.பி.எஸ்.சுடன் அன்புமணி சந்திப்பு: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க..!
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. இ.பி.எஸ்.
-
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு: இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை
07 Jan 2026புதுடெல்லி, இந்தியா-இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.
-
டி-20 உலக கோப்பை தொடர்: வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்பு
07 Jan 2026லண்டன், இந்தியாவில் வங்கதேச அணி விளையாட இருந்த டி-20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் அதிகரிப்பு...
-
அரசுக்கு எதிரான போராட்டங்கள்: ஈரானில் உயிரிழப்பு 36 ஆக உயர்வு
07 Jan 2026டெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
-
தொலைந்து போன பயண அட்டைகளில் உள்ள தொகையை மாற்ற இயலாது : மெட்ரோ நிர்வாகம் நிர்வாகம்
07 Jan 2026சென்னை, தொலைந்து போன மெட்ரோ பயண அட்டைகளில் தொகையை மாற்ற இயலாது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நியூசி.க்கு எதிரான தொடரில் விளையாடுகிறார் ஷ்ரேயாஸ் : பி.சி.சி.ஐ. வெளியிட்ட முக்கிய தகவல்
07 Jan 2026புதுடெல்லி, பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது.


