எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்காசி. ஜன.26 - வெடிகுண்டு மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன் என தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், சமத்துவ மக்கள் கட்சியின் மாநில தலைவருமான ஆர்.சரத்குமாருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இதுபற்றி தென்காசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் கடிதம் அனுப்பிய ஆசாமியை வலை வீசி தேடிவருகிறார்கள்.
இந்நிலையில் சரத்குமார் எம்.எல்.ஏ. நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 7 மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நான் வெற்றி பெற்ற பிறகு பலமுறை தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து அதனை நிறைவேற்றி வருகிறேன். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் மக்கள் தங்களின் குறைகளை தெரிவித்து வருகிறார்கள். இதுவரை மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன். இந்நிலையில் யாரோ ஒரு மர்ம ஆசாமி நான் தொகுதிக்கு செல்லவில்லை என்றும், தொகுதி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறியதோடு என்னை மிரட்டுகிற வகையில் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அனுப்ப பட்டுள்ள மிரட்டல் கடிதத்திற்கு என்னுடைய செயல்பாடுகளே பதில் சொல்லிவிடும். இருப்பினும் மிரட்டல் கடிதம் வந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் பத்திரிகை மூலம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியத்தின் அடிப்படையில் எனது விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் விடுமுறை நாட்களை தவிர எல்லா நாட்களும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பொது மக்கள் மூலமாக சுமார் 6 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு பரிந்துரை கடிதத்துடன் துறைவாரியாக அனுப்பப்பட்டு வருகிறது. நான் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறேன். குறிப்பிட்டு சொல்வது என்றால் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ள தென்காசி மேம்பால சர்வீஸ் ரோடு, ஆசாத்நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் சிற்றாற்று பாலம், சுரண்டையில் எனது சொந்த செலவில் தேவர்சிலை அமைக்க ரூபாய் 2 லட்சம் வழங்கியுள்ளேன். சுரண்டை அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை, தென்காசி கல்லூரி மாணவர்களை கொண்டு அரசு மருத்துவமனை சுத்தம் செய்தல், மேலும் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் தென்காசி தொகுதி மக்களுக்கு கிடைக்க பெரும் முயற்சி மேற்கொண்டு செயல்பட்டு வருகிறேன். மேலும் எனது சொந்த செலவிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். விளம்பரம் மூலமோ, அல்லது ஆடம்பரமான விழாக்கள் நடத்தாததால் இந்த பணிகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வரவில்லையோ என நான் சில சமயங்களில் நினைத்தது உண்டு. கடந்த 3 மாத காலமாக உலகத்தரம் வாய்ந்த ஆய்வு நிறுவனத்தின் மூலம் தென்காசி தொகுதியில் ஒரு சிறப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். அதன்படி தென்காசி தொகுதியில் குடிநீர்வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, கல்விமேம்பாடு, விவசாய வளர்ச்சி, என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை முறைப்படி செயல்படுத்தி 5 ஆண்டுகளில் தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக தென்காசி தொகுதியை மாற்றிக்காட்டும் பணியில் நான் முழு மூச்சுடன் பணியாற்றி வருகிறேன். இந்த வெடிகுண்டு மிரட்டல் ஜாலங்கள் எல்லாம் என்னிடம் பலிக்காது எத்தகைய துர்சக்தியையும் மக்கள் பலத்தோடு சந்திக்க தயாராக இருக்கிறேன் இவ்வாறு சரத்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறி அடித்து ஓட்டம்
18 Sep 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் அறுவை சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.