எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,கள்ளிக்குடி ஒன்றியத்தின் பல்வேறு கிளைக்கழக கிராமங்களில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,கழகஅம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிடும் வகையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் கே.வெள்ளாகுளம்,மையிட்டான்பட்டி,நல்லமநாயக்கன்பட்டி,ஆவல்சூரன்பட்டி,உன்னிபட்டி,பேய்க்குளம்,சென்னம்பட்டி,ஓடைப்பட்டி,மேலப்பட்டி,சோளம்பட்டி ஆகிய கிளைக் கழகங்களில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்டபட்ட அனைத்து கிளைக்கழக பூத்கமிட்டி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது: இந்திய வரலாற்றிலே ஒரு புரட்சிகரமான சாதனையாக சாமானியர் சரித்திரம் படைத்திட முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலே மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்ற வகையிலே நமது முதல்வர் எடப்பாடியார் உலக முதலீட்டாளர்களையும்,தமிழ் முதலீட்டார்களையும் தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில் மேற்கொண்டுள்ள முயற்சி உலகத்திலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் பாராட்டையும்,நன்மதிப்பையும்,நம்பிக்கையையும் பெற்றுள்ளது.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், 5முறை தி.மு.க ஆட்சியிலிருந்தபோது தங்களால் செய்ய முடியாததை ஒரு சாமானியனாகிய முதல்வர் சாதித்து காட்டியிருக்கிறாரே என்கிற அரசியில் காழ்ப்புணர்ச்சியின் எல்லையில் இன்றைக்கு பல்வேறு கருத்துக்களை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மக்களிடம் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பினை பார்த்து,முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்கிற அந்த நிர்வாகத் திறமை,தமிழகத்தை ஏற்றம் பெறச் செய்திட அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மக்களிடம்மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது.ஆகவே இனி நம்முடை அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்தினால் இதனை வழக்கம் போல் திசை திருப்பி,வழக்கம் போல் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று குட்டையை குழப்பும் வேலையை ஸ்டாலின் துவங்கியிருக்கிறார்.சட்டசபையை நடத்த முடியாது என்று ஸ்டாலின் சொன்னார்.சட்டசபையை முதல்வர் எடப்பாடியார் நடத்திக் காட்டினார்.நிதி நிலையை தாக்கல் செய்ய முடியாது என்றார் ஸடாலின்.ஆனால் முதல்வரும் துணை முதல்வரும் நிதிநிலையை தாக்கல் செய்து சாதித்து காட்டினார்கள்.நிலையான அரசை தர முடியாது என்று அவர் சொன்னார்.ஆனால் முதல்வர் அம்மாவுடைய அரசை நிலையானதாக மாற்றி காட்டினார்.எதையெல்லாம் முடியாது என்று ஸ்டாலின் சொல்கிறாரோ அதையெல்லாம் பதட்டமின்றி லாகவமாக முடியாது என்பதை நம்முடைய முதல்வர் முடித்து காட்டி வருகிறார். சாமானிய முதல்வர்வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவது காலம் காலமாக வரவேற்க கூடிய ஒன்றாக இருக்கிறது.ஆனால் இங்கு மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனங்கள் வைக்கிறார்களே தவிர பிற மாநிலங்களில் இது போன்று நடப்பது கிடையாது.பக்கத்து மாநில முதல்வர்கள் கூட வருடத்திற்கு இருமறை வெளிநாடுகளுக்கு வந்து செல்வதாக அங்கிருப்போர் கூறுகின்றனர்.தமிழ்நாட்டை சேர்ந்த முதல்வர் வெளிநாடுகளுக்கு வரவில்லையே என்கிற ஏக்கம் எங்களுக்கு இருந்தது அதனை போக்கியவர் எடப்பாடியார் என்று அங்குள்ள முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.முதல்வரின் வெளிநாட்டு பயணம் மக்கள் மத்தியிலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதில் எதிர்கட்சித் தலைவர் என்ன குறையை கண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை.
இன்றைக்கு எதிர்கட்சி தலைவர் தனக்கென்று ஆலோசனை வழங்;குகிற குழுவை வைத்துக் கொண்டு அதன் சொற்படி தான் இன்றைக்கு செயல்பட்டு வருகிறார்.ஆனால் முதல்வரே தனக்கென்று அப்படியொரு ஆலோசனை குழுவினை வைத்துக் கொள்ளாமல் மக்கள் பணியில் பெற்ற பணியில் கிடைத்த அனுபவத்தை வைத்து செயல்பட்டு வருகிறார்.ஆகவே எதிர்கட்சி தலைவர் 110விதி தொடங்கி எல்லா சாதனைகளுக்கும் அவர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்றால் அது வெற்றி பெற்றுவிட்டது என்றேஅர்த்தம்.முதல்வர் எதிலெல்லாம் வெற்றி பெற்றுவிட்டாரோ அதிலெல்லாம் எதிர்கட்சிதலைவர் வெள்ளை அறிக்கை கேட்பார்.110வது விதி தமிழக மக்களின் தலைவிதியை மாற்றியிருக்கிறது.குடிமராமத்து நீராதாரத்தை உயர்த்தியிருக்கிறது.ஆகவே ஸ்டாலின் வெள்ளையறிக்கை கேட்கும் திட்டங்கள் வெற்றி பெற்றிருக்கிறது,மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது என்று அர்த்தம்.அந்த வெற்றிபெற்றுள்ள திட்டங்களின் வரிசையில் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் இடம் பெற்றிருக்கிறது.இதன் மூலம் அவரது சாதனை உலகின் எட்டாவது அதிசயமாக உலக தமிழர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டங்களில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட சார்பு அணிநிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சிங்கராஜபாண்டியன்,பிரபுசங்கர்,வேல்பாண்டி,வேல்ராமகிருஷ்ணன், கண்ணன்,அன்னக்கொடி,சுகுமார்,செல்வம்,சாமிநாதன்,தாத்தப்பன்,மணி,முருகன்,எஸ்.பி.எஸ்.ராஜா,சிவன்காளை,ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
இன்று தீபாவளி பண்டிகை: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
பயம் உன்னை விடாது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
19 Oct 2025எஸ்.கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பயம் உன்னை விடாது.
-
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 Oct 2025ஆண்டிப்பட்டி : வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய
-
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்
19 Oct 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
-
டீசல் திரை விமர்சனம்
19 Oct 2025ராட்சத குழாய் அமைத்து மக்களை விரட்டும் சதிகார கும்பலிடம் இருந்து மக்களையும் மன்னையும் காக்கும் ஒரு வீரனின் கதைதான் டீசல்.
-
கம்பி கட்ன கதை திரை விமர்சனம்
19 Oct 2025மக்களை ஏமாற்றி வைரத்தை கொள்ளயடிக்க துடிக்கும் ஒரு போலிச் சாமியாரின் கதை தான் கம்பி கட்ன கதை படத்தின் கதை. நாயகன் நட்டி, பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப
-
சித்து நடிக்கும் தி டார்க் ஹெவன்
19 Oct 2025கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தி டார்க் ஹெவன்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
பைசன் திரை விமர்சனம்
19 Oct 2025சர்வதேச கபடி போட்டியில் களம் கண்ட ஒரு சாதாரான கபடி வீரரின் வலி மிகுந்த கடந்து வந்த பாதைதான் பைசன் படக் கதை.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவு
19 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
தொடர் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை நீட்டிப்பு
19 Oct 2025தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
டியூட் திரை விமர்சனம்
19 Oct 2025தொடர் வெற்றிகளை குவித்த நாயனுக்கு சற்று சறுக்கல் கொடுத்துள்ள படம் டியூட். ப்ரதீப் ரங்கநாதன், மமிதா சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனியை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை, எவை?
19 Oct 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் : பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
19 Oct 2025சென்னை : தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 Oct 2025மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
காவிரி கரையோரங்களில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு
19 Oct 2025ஒகேனக்கல் : தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.