எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,கள்ளிக்குடி ஒன்றியத்தின் பல்வேறு கிளைக்கழக கிராமங்களில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,கழகஅம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிடும் வகையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் கே.வெள்ளாகுளம்,மையிட்டான்பட்டி,நல்லமநாயக்கன்பட்டி,ஆவல்சூரன்பட்டி,உன்னிபட்டி,பேய்க்குளம்,சென்னம்பட்டி,ஓடைப்பட்டி,மேலப்பட்டி,சோளம்பட்டி ஆகிய கிளைக் கழகங்களில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்டபட்ட அனைத்து கிளைக்கழக பூத்கமிட்டி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது: இந்திய வரலாற்றிலே ஒரு புரட்சிகரமான சாதனையாக சாமானியர் சரித்திரம் படைத்திட முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலே மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்ற வகையிலே நமது முதல்வர் எடப்பாடியார் உலக முதலீட்டாளர்களையும்,தமிழ் முதலீட்டார்களையும் தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில் மேற்கொண்டுள்ள முயற்சி உலகத்திலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் பாராட்டையும்,நன்மதிப்பையும்,நம்பிக்கையையும் பெற்றுள்ளது.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், 5முறை தி.மு.க ஆட்சியிலிருந்தபோது தங்களால் செய்ய முடியாததை ஒரு சாமானியனாகிய முதல்வர் சாதித்து காட்டியிருக்கிறாரே என்கிற அரசியில் காழ்ப்புணர்ச்சியின் எல்லையில் இன்றைக்கு பல்வேறு கருத்துக்களை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மக்களிடம் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பினை பார்த்து,முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்கிற அந்த நிர்வாகத் திறமை,தமிழகத்தை ஏற்றம் பெறச் செய்திட அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மக்களிடம்மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது.ஆகவே இனி நம்முடை அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்தினால் இதனை வழக்கம் போல் திசை திருப்பி,வழக்கம் போல் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று குட்டையை குழப்பும் வேலையை ஸ்டாலின் துவங்கியிருக்கிறார்.சட்டசபையை நடத்த முடியாது என்று ஸ்டாலின் சொன்னார்.சட்டசபையை முதல்வர் எடப்பாடியார் நடத்திக் காட்டினார்.நிதி நிலையை தாக்கல் செய்ய முடியாது என்றார் ஸடாலின்.ஆனால் முதல்வரும் துணை முதல்வரும் நிதிநிலையை தாக்கல் செய்து சாதித்து காட்டினார்கள்.நிலையான அரசை தர முடியாது என்று அவர் சொன்னார்.ஆனால் முதல்வர் அம்மாவுடைய அரசை நிலையானதாக மாற்றி காட்டினார்.எதையெல்லாம் முடியாது என்று ஸ்டாலின் சொல்கிறாரோ அதையெல்லாம் பதட்டமின்றி லாகவமாக முடியாது என்பதை நம்முடைய முதல்வர் முடித்து காட்டி வருகிறார். சாமானிய முதல்வர்வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவது காலம் காலமாக வரவேற்க கூடிய ஒன்றாக இருக்கிறது.ஆனால் இங்கு மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனங்கள் வைக்கிறார்களே தவிர பிற மாநிலங்களில் இது போன்று நடப்பது கிடையாது.பக்கத்து மாநில முதல்வர்கள் கூட வருடத்திற்கு இருமறை வெளிநாடுகளுக்கு வந்து செல்வதாக அங்கிருப்போர் கூறுகின்றனர்.தமிழ்நாட்டை சேர்ந்த முதல்வர் வெளிநாடுகளுக்கு வரவில்லையே என்கிற ஏக்கம் எங்களுக்கு இருந்தது அதனை போக்கியவர் எடப்பாடியார் என்று அங்குள்ள முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.முதல்வரின் வெளிநாட்டு பயணம் மக்கள் மத்தியிலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதில் எதிர்கட்சித் தலைவர் என்ன குறையை கண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை.
இன்றைக்கு எதிர்கட்சி தலைவர் தனக்கென்று ஆலோசனை வழங்;குகிற குழுவை வைத்துக் கொண்டு அதன் சொற்படி தான் இன்றைக்கு செயல்பட்டு வருகிறார்.ஆனால் முதல்வரே தனக்கென்று அப்படியொரு ஆலோசனை குழுவினை வைத்துக் கொள்ளாமல் மக்கள் பணியில் பெற்ற பணியில் கிடைத்த அனுபவத்தை வைத்து செயல்பட்டு வருகிறார்.ஆகவே எதிர்கட்சி தலைவர் 110விதி தொடங்கி எல்லா சாதனைகளுக்கும் அவர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்றால் அது வெற்றி பெற்றுவிட்டது என்றேஅர்த்தம்.முதல்வர் எதிலெல்லாம் வெற்றி பெற்றுவிட்டாரோ அதிலெல்லாம் எதிர்கட்சிதலைவர் வெள்ளை அறிக்கை கேட்பார்.110வது விதி தமிழக மக்களின் தலைவிதியை மாற்றியிருக்கிறது.குடிமராமத்து நீராதாரத்தை உயர்த்தியிருக்கிறது.ஆகவே ஸ்டாலின் வெள்ளையறிக்கை கேட்கும் திட்டங்கள் வெற்றி பெற்றிருக்கிறது,மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது என்று அர்த்தம்.அந்த வெற்றிபெற்றுள்ள திட்டங்களின் வரிசையில் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் இடம் பெற்றிருக்கிறது.இதன் மூலம் அவரது சாதனை உலகின் எட்டாவது அதிசயமாக உலக தமிழர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டங்களில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட சார்பு அணிநிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சிங்கராஜபாண்டியன்,பிரபுசங்கர்,வேல்பாண்டி,வேல்ராமகிருஷ்ணன், கண்ணன்,அன்னக்கொடி,சுகுமார்,செல்வம்,சாமிநாதன்,தாத்தப்பன்,மணி,முருகன்,எஸ்.பி.எஸ்.ராஜா,சிவன்காளை,ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Jan 2026மதுரை, காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: சட்டசபையில் அமைச்சர் தகவல்
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுக்கு விசில் சின்னம்
22 Jan 2026டெல்லி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
-
234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே த.வெ.க.வுக்கு விசில் சின்னம்: த.வெ.க.வக்கு தேர்தல் ஆணையம் 'செக்'
22 Jan 2026சென்னை, விசில் சின்னம் த.வெ.க.வுக்கு மட்டும் இல்லையா? த.வெ.க.
-
பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று சென்னை - திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
22 Jan 2026சென்னை, பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
இ.பி.எஸ். வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
22 Jan 2026சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார், காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
-
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி தமிழக கவர்னருக்கு இல்லை: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
22 Jan 2026சென்னை, கவர்னர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் கோவி.
-
10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சு
22 Jan 2026நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட முடிவுற வாய்ப்பே இல்லாத பல்வேறு நாடுகளிடையேயான 8 போர்களை 10 மாதங்களில் முடித்துவைத்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால
-
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம்: கடும் அமளியால் கேரளா சட்டமன்றம் ஒத்திவைப்பு
22 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா சட்டமன்றத்தில் நேர்று கடும் அமளி ஏற்பட்டத்தை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Jan 2026சென்னை, இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டுமென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகல்
22 Jan 2026சென்னை, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரனும் எம்.இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
ஆந்திரத்தில் தனியார் பேருந்து லாரி மீது மோதி தீ: 3 பேர் பலி
22 Jan 2026அமராவதி, ஆந்திரம் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெள்ளமெட்டா அருகே தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
22 Jan 2026ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்தது த.மாகா மற்றும் புதிய நீதிக் கட்சி
22 Jan 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டபேரவையில் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வருகிற ஜன. 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க.
-
கடலோர தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
22 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று (ஜன. 23) முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் பயங்கரம்: இரும்பு ஆலையில் வெடி விபத்தில் 6 பேர் பலி
22 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கர் உள்ள இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Jan 2026சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கர்நாடகா சட்டப்பேரவையில் கவர்னர் கெலாட் வெளிநடப்பு: காங். எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையால் பரபரப்பு
22 Jan 2026கர்நாடக, கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் கெலாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; துரதிர்ஷ்டவசமான சோகம்: தலைமை நீதிபதி கருத்து
22 Jan 2026டெல்லி, கரூர் கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமான சோகம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
22 Jan 2026சென்னை, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான்: ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
22 Jan 2026அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழ
-
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்
22 Jan 2026டெல்லி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
-
அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 15,000 கோடி ரூபாய் நஷ்டம்
22 Jan 2026டெல்லி, அகமதாபாத் விபத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய ராசிபலன்
22 Jan 2026


