எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,- இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் உள்பட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மேலும் ரோந்து கப்பலை வைத்து படகுகள் மீது மோதி படகை சேதப்படுத்தி கடலில் தாழ்த்த முயற்ச்சி செய்கின்றனர். மீனவர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்து விடுகின்றனர்.அதுபோல வலைகள் உள்பட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி அச்சம் ஏற்படுத்துவதால் மீனவர்கள் மிகவும் வேதனையோடு கரைதிரும்பி வருகின்றனர். மேலும் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போதெல்லாம் சில மீனவர்களுக்கு பல ஆயிரக்கணக்கான ருபாய் நஷ்டம் ஏற்படுகிறது.இதனால் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தவிக்கும் சூழ்நிலைகள் ஏற்படுகிறது.இதனை யொட்டி ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலை நிறுத்தக்கோரியும், இம்மாதம் 29 ஆம் தேதி இந்தியா வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபட்ஷை சந்தித்து தமிழக மீனவ பிரதிநிதிகள் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகள் ஆகியோர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இரு அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக நேற்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் ராமேசுவரம் கடல் பகுதியில் 720 விசைப்படகுகளுக்கு மேல் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.மேலும் சுமார் 3500 மீனவர்கள மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.அதுபோல மீன்பிடி தொழிலை சார்ந்த தொழிலாளிகள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் 1 கோடி ருபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனால் மீனவர்களின் கோரிக்கையை மத்திய.மாநில அரசுகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ


