எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு (2020–21) 10 ஆயிரத்து 276 போலீசார் நியமனம் செய்யப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–
பொருளாதார வளர்ச்சியையும், மக்கள் நல்வாழ்வினையும் பேணுவதற்காக, சட்டம் ஒழுங்கை திறம்படக் கையாள்வது முக்கியமானதாகும். மாநிலக் காவல் படை தனது பணிகளை திறம்பட மேற்கொள்வதை உறுதி செய்ய, போதுமான காவலர்கள், தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை காவல் துறை பெறுவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, தற்போது 1.13 லட்சம் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2019–20 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, மொத்தம் 10,242 காவல் துறைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2020–21ம் ஆண்டில், மேலும், 10,276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண்காணிக்கும் கணினி வலையமைப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த அமைப்பு முறை, 54.84 கோடி ரூபாய் செலவில் மேலும் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், இணையப் பாதுகாப்பை அதிகரிக்கவும், 28.97 கோடி ரூபாய் செலவில் இணையதள குற்றத் தடுப்புக் காவல் பிரிவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளுக்காக 431 கோடி ரூபாயும், காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 100 கோடி ரூபாயும் உட்பட, மொத்தமாக 8,876.57 கோடி ரூபாய் காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் பிற பேரிடர் நிவாரணப் பணிகளில் துரித தீர்வு அளிக்க வேண்டியதன் அத்தியாவசியத்தை உணர்ந்து, தேவையான இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை அவ்வப்போது அரசு தொடங்கி வந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் எண்ணிக்கை இப்பொழுது 346 ஆக உள்ளது. 2019-20 ம் ஆண்டில் 18.22 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை நவீன முறையில் தடுக்கும் மற்றும் மீட்புப் பணிகளில் உதவும் 104 மீட்டர் தீயணைப்பு ஏணிகள் உட்பட நவீன தீயணைப்பு மீட்புக் கருவிகள் வாங்குவதற்காக 13.67 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக்குழு தேசியப் பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்தில், தீயணைப்புப் பணிகள் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்திற்காக 1,000 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு முன்மொழிவுகளை அனுப்பும். 2020-21 ம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 405.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகள், மனிதநேயத்திற்கும், சீர்திருத்த அணுகுமுறைக்கும் நற்பெயர் பெற்றவை. சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிறைவாசிகள் சிறைத் தொழிற்கூடங்களில் ஈட்டும் ஊதியத்தில் அவர்களின் பராமரிப்புக்காகப் பிடித்தம் செய்யும் தொகை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டு, ஊதியத்தில் அவர்களின் பங்கு 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும். ஒரு புதிய தொடக்க முயற்சியாக, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்காக, புழல், வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சிறைகளின் வெளி வளாகங்களிலும், புதுக்கோட்டையிலுள்ள பார்ஸ்டல் பள்ளியிலும் 5 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வரும் நிதியாண்டில், மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். 2020 - 21ம் ஆண்டில், சிறைத் துறைக்கு 392.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது, 2020-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய நிலைக்கத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றாகும். 2018-ம் ஆண்டில், சிறப்பான சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விருதை, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது. 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38.87 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது அணுக வசதியாக அமைந்துள்ள 80 அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்பில் தமிழ்நாட்டின் ஆக்கத்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், தவிர்க்கக் கூடிய உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை குறைப்பதற்கும், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கத்தினை அரசு உருவாக்கும். இந்த இயக்கம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, ‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவதற்காக, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இத்திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்துகளை பொறியியல் சார்ந்த தீர்வு நடவடிக்கைகள் மூலம் சரி செய்தல், ஓட்டுநர் கல்வி, சட்ட அமலாக்கம், விபத்திற்குப் பிந்தைய உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்.
நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து, சாலைப் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு 500 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். சாலை வடிவமைப்பில் சாலைப் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடங்கியிருப்பதை உறுதி செய்வதற்கு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பிற்கான தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.