எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், மீன்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், மீன்வளத்துறை சார்பில், பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் இழுவலைப் படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக பரவலாக்கும் திட்டத்தின் கீழ், 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மீன்வளக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி மூலம் தமிழகத்தின் மீன் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்று 16.2.2018 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்பல்கலைக்கழகம், மீன்வள அறிவியல் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் தரமான தொழிற் கல்வியை வழங்குதல், மீன்வள அறிவியலில் உள்ள முதன்மையான பிரிவுகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், மீன்வளர்ப்போர், மீனவர், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு மீன்வள இணை தொழிற் கல்வியை வழங்குதல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, ஓரடியம்புலத்தில் 4.78 ஏக்கர் நிலப்பரப்பில் 44,800 சதுர கட்டிட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வரவேற்பறை, வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கணிணி ஆய்வகம், கருத்தரங்கக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடம், நாகப்பட்டினம், வட்டார் நதிக்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 இருக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள கருத்தரங்கக் கூடம், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், அரியமானில் 3.46 ஹெக்டேர் நிலப்பரப்பில், 12,000 சதுரடி பரப்பளவில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்பிடித் தொழில்நுட்பப் பயிற்சி நிலையக் கட்டிடம், செங்கல்பட்டு மாவட்டம், வாணியஞ்சாவடியில், தமிழ்நாடு மீன்வள முதுகலை பட்டமேற்படிப்பு நிலையத்தில் 3 கோடியே 20 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம் என மொத்தம் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
பாக் வளைகுடா மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திட மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பாக் வளைகுடா பகுதியிலுள்ள 2000 இழுவலைப் படகுகளுக்கு பதிலாக புதிதாக ஆழ்கடல் தூண்டில் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் முதல்கட்டமாக, 500 இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றிடும் இத்திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி, மத்திய அரசு பங்குத் தொகையுடன் 286 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு படகின் விலையான 80 லட்சம் ரூபாயில், 50 சதவிகிதம் மத்திய அரசின் மானிய உதவியுடனும், 20 சதவிகிதம் மாநில அரசு நிதியுதவியுடனும், 10 சதவிகிதம் பயனாளியின் பங்களிப்புடனும், மீதமுள்ள 20 சதவிகிதத் தொகை வங்கி கடனுதவி மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக படகு கட்டும் நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் மீனவ பயனாளிகளுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் இதர நிறுவனங்களால் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டம் செயலில் இருந்தாலும், அதற்கான உட்கட்டமைப்பு, ரோந்து கலன்கள், மனித ஆற்றல் போன்றவை போதுமான அளவிற்கு இல்லாத காரணத்தினால், கடலில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மட்டுமின்றி, சட்டத்திற்கு முரணான மீன்பிடிப்பை தடுத்தல், மீன்வள ஆதாரத்தை பாதுகாத்தல், மீன்பிடிப்பை முறைப்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்துவதில் பெரும் தடைகள் உள்ளன. இத்தடைகளை களையும் வகையில், ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 10 காவல்துறை ஆய்வாளர்கள், 8 காவல்துறை சார் ஆய்வாளர்கள், 53 காவலர்கள், 17 காவல்துறை ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 112 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, மீன்வளத்துறைக்கென தனியே கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு புதிதாக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் பணியாற்றும் காவல்துறை அலுவலர்கள் அவர்தம் பதவிக்கான சீருடையுடன், வலது மேற்கையில் இப்பிரிவிற்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை அணிவார்கள்.
அதன்படி, தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட, கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் கொடியை காவல் துணை கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். மேலும், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை வெளியிட்டு, 6 காவலர்களுக்கு குறிவில்லையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
வார ராசிபலன்
10 Jan 2026


