எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனை வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாததால் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அவர்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஒரிசா, மேற்கு வங்கம், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்று(நேற்று) 3 முகாம்களுக்கு சென்று பார்வையிட்டேன்.
வெளிமாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 336 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் 3 ஆயிரத்து 409 பேர் பணிபுரிகிறார்கள். உணவு கூடங்களில் 7 ஆயிரத்து 871 பேர் பணிபுரிகிறார்கள். பண்ணைகளில் 4 ஆயிரத்து 953 பேர் பணிபுரிகிறார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 569 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். நம்முடைய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் 7 ஆயிரத்து 198 பேர் பணிபுரிகிறார்கள் என்று முதல்வர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் எந்த தடையும் இல்லை. வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் வரவேண்டி உள்ளது. பல மாநிலங்களில் ஒவ்வொரு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர எந்த தடையும் கூடாது என பிரதமர் கூறியிருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று நோய் மிகப்பெரிய கொடிய தொற்று நோய். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எந்தெந்த நாட்டில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை பார்க்கிறோம். இந்த நோயின் வீரியம் புரியாமல் சிலர் விளையாட்டு தனமாக வெளியே வாகனங்களில் சுற்றுகிறார்கள். நோயின் தாக்கம் எப்படி என்பதை உணர வேண்டும். இந்த நோய்க்கு மருந்து இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் உலுக்கி வரும் நோய் இது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அனைவரும் இந்த தடை உத்தரவை கடைப்பிடிப்பார்கள் என்று பொறுமையாக இருந்தோம். இந்த தடை உத்தரவு என்பது அனைவரையும் பாதுகாக்கத்தான். எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கு ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். ஒவ்வொரு உயிரும் முக்கியம். அரசின் நோக்கம் இந்த நோயை தடுப்பது தான். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.எனவே தான் தொற்று நோய் பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடைகளுக்கு தினசரி போக வேண்டாம். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி வெளியே செல்ல தேவை இல்லை. எனவே இதனை கடைப்பிடிப்பது மக்களின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. எனவே சட்டம் தனது கடமையை செய்யும். அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. எனவே மக்கள் இதற்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் 144 தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர வேறு வழி இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களுக்கு அரசு விலையின்றி 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணை போன்றவைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –17-01-2026
17 Jan 2026 -
இதுவரை வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Jan 2026சென்னை, தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Jan 2026பரமக்குடி, பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் : அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 Jan 2026சென்னை, கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எ
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத பொருட்களை பிப்ரவரி மாதமும் சேர்த்து வழங்க கோரிக்கை
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத ரேஷன் பொருட்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அந்த பொருட்களை பிப்ரவரி மாதம் சேர்த்து வழங்க பொதுமக்கள் கோரிக்
-
யு.பி.ஐ. மூலம் இ.பி.எப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்
17 Jan 2026சென்னை, யு.பி.ஐ. மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: போட்டியை நேரில் கண்டுகளித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Jan 2026அலங்காநல்லூர், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேற்று நேரில் கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்
-
தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு 6,453.54 கோடி ரூபாய் பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
17 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து வெளியிட்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்
17 Jan 2026சென்னை, தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
-
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர்: எம்.ஜி.ஆருக்கு விஜய் புகழாரம்
17 Jan 2026சென்னை, மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் என்று த.வெ.க. தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மராட்டியத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி: மும்பையில் ‘தாக்கரே’வின் ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
17 Jan 2026மும்பை, மராட்டியத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேலும் அங்கு பா.ஜ.க.
-
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விழா கோலாகலம் சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
17 Jan 2026சென்னை, காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
-
மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
17 Jan 2026சென்னை, மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க.
-
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jan 2026அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.
-
மேற்கு வங்கம் -அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2026கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சே
-
வாழ்க்கையை ஏழைகளுக்கு அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
17 Jan 2026புதுடெல்லி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர் என்றும் பிரதம
-
சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் படுகொலை
17 Jan 2026ராய்ப்பூர், சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
-
அடுத்த 2 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு
17 Jan 2026சென்னை, அடுத்த இரு நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தைவிட்டு விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி: பிரதமர் மோடி
17 Jan 2026கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சிக்கு பா.ஜ.க. வந்தால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
ஆஸி., ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
17 Jan 2026மெல்போர்ன், ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது.
-
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா? இந்தூரில் இன்று இறுதிப்போட்டி
17 Jan 2026சென்னை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று இந்தூரில் இறுதிப்போட்டி நடக்கிறது.
-
யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச அணி கேப்டன்கள்
17 Jan 2026புலவாயோ, இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளத
-
வார ராசிபலன்
17 Jan 2026


