எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை என்று துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் பள்ளிக்கரனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த பிறகு முதல்வர் எடப்பாடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு
கேள்வி: 2015-ஆம் ஆண்டில் மழை பெய்திருக்கக்கூடிய இடங்கள் தான் இவை. இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன?
பதில்: 2015-இல் கனமழை பொழிந்தது. ஆனால் அதற்கும் முன்பே கடந்த காலங்களிலும் தண்ணீர் தேங்கித்தான் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் படிப்படியாக தண்ணீரை அகற்றி வருகிறோம். அவ்வாறு ஒவ்வொரு பகுதியிலுமுள்ள தண்ணீரை அகற்றத் தேவையான நிதி ஆதாரம் அரசுக்குத் தேவை. நிதி ஆதாரம் இருந்தால்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை 2015-ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகரம் மற்றும் மாநகரத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலெல்லாம் தண்ணீரை அகற்றக்கூடிய சூழ்நிலையை நீங்களே கண்டிருப்பீர்கள்.
இந்தப் பணிகளை படிப்படியாக நிறைவேற்றிய காரணத்தால்தான் தற்பொழுது குறைவான அளவிலேயே தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனே அனைத்தையும் செய்துவிட முடியாது. அதனைச் செயல்படுத்தத் தேவையான நிதி ஆதாரம் மிக முக்கியம். கடந்த காலங்களில் சென்னை மாநகரில் ஏறத்தாழ 3,000 இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்த நிலை தற்பொழுது படிப்படியாக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காகத்தான் நானே நேரடியாக வந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
கேள்வி: ஒவ்வொரு கனமழைக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. நீர்நிலைகளை ஒட்டியிருக்கக்கூடிய பகுதிகளில் கட்டடம் கட்ட அனுமதி கொடுக்காமல் இருந்தால் இந்தப் பிரச்சனைகள் வந்திருக்காதே?.
பதில்: 2004-ஆம் ஆண்டு ராம் நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 20 சதவிகித வீடுகள் தான் இருந்தன. தற்பொழுது 80 சதவிகிதம் வீடுகள் உள்ளன. இவை தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள் உள்ள பகுதிகள். இந்த இடத்தில் கட்டியதால் தான் இவ்வளவு சிரமம். அவ்வாறு சிரமம் இருந்தாலும், மக்களைக் காக்க வேண்டுமென்பதற்காக இதற்கு ஒரு முழுமையான தீர்வு காண அம்மாவின் அரசு நீண்டகாலத் திட்டமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கேள்வி: பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்பட்டு படகுகள் விடப்படுமென்று அம்மாவின் அரசுதான் அதற்கான நிதி ஒதுக்கியது. அதற்கான வேலைகள் எந்தளவில் உள்ளன?
பதில்: இத்திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துவிட முடியாது படிப்படியாகத்தான் செயல்படுத்த முடியும். முதலில் முக்கியமான பிரச்சனைக்குத்தான் தீர்வு காண வேண்டும். தற்பொழுது 3,000 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நிதி தேவையென்பதால் அதற்கான திட்டங்களை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். மேலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏதும் கைவிடப்படாது.
கேள்வி: அரசிடம் நிதியில்லையா? மத்திய அரசின் நிதி ஆதாரத்தின் மூலமாகவாவது செயல்படுத்த முடியுமா?
பதில்: இந்தியாவிலிருக்கிற எந்த மாநிலத்திலும் நிதி இல்லை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரிதான் உள்ளது. உலகளவிலேயும் கிடையாதென்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். உலக வங்கித் திட்டம் மற்றும் மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கித்தான் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எல்லா மாநிலங்களும் நிதியை வைத்துக் கொண்டு எந்தத் திட்டத்தையும் அறிவிப்பது கிடையாது. அவ்வப்போது ஏற்படுகின்ற பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இருக்கின்ற நிதியை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவேதான் சென்னை மாநகரத்தில் 3,000 இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது, அதற்குண்டான நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக அதைக் குறைத்திருக்கிறோம். வடிகால் வசதி செய்திருக்கிறோம். மேலும் வடிகால் வசதி செய்வதற்கு திட்டமிடப்பட்டு தொடர்ந்து அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறியிருக்கிறீர்களே குழு ஏதும் அமைத்திருக்கிறீர்களா?
பதில்: இன்றைக்குத்தான் நான் நேரில் வந்து பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தால்தான் தாழ்வான பகுதிகளிலிருக்கின்ற தண்ணீரை எப்படி நாம் வெளியேற்றுவது என்பது தெரியும். சம்பந்தபட்ட அதிகாரிகளும் இங்கு வந்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் குழு அதை ஆய்வு செய்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கும்.
கேள்வி: நிரந்தரத் தீர்வு எட்டுவதற்கு, தோராயமாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
பதில்: இந்தப் பணியை துவங்கியிருக்கிறோம், அந்தப் பணி செய்வதற்கு எவ்வளவு கால அளவு வேண்டுமென்பதை அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள். அந்த கால அளவிற்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும். அனைத்துப் பணிகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதைப் போல இந்தப் பணியும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும்.
கேள்வி: கிருஷ்ணா நதியிலிருந்து அதிகப்படியான நீர் வெளியாகிறது காவேரி ஆற்றிற்கு கொடுக்கக்கூடிய முன்னுரிமையை அதிமுக அரசு பாலாற்றுக்கு கொடுக்கவில்லையென்று வருகின்ற குற்றச்சாட்டு குறித்து...
பதில்: பாலாற்றில் பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருக்கிறது. நான் ஏற்கனவே கூறியதைப் போன்று நிதி ஆதாரம் மிக முக்கியம். இன்றைக்கு, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுப்பதற்குத்தான் அதிமுக அரசு, ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கி, மூன்றாண்டு காலத் திட்டத்தில் பல இடங்களில் தடுப்பணை கட்டி இப்பொழுது தண்ணீர் நிறைந்திருக்கிறது. தற்பொழுதுகூட, பவானிசாகரில் இருக்கின்ற 6 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதற்கென்று நீர் மேலாண்மைப்படுத்துவதற்காக ஓய்வு பெற்ற 2 தலைமைப் பொறியாளர்கள்
3 கண்காணிப்புப் பொறியாளர்கள் என 5 பொறியாளர்களை நியமித்து தமிழ்நாடு முழுவதும் பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாவதை சேமிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்வது, எங்கெங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கணக்கிட்டு அவர்கள் கொடுக்கின்ற அறிக்கையின்படி இப்பொழுது
ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் கட்டிக் கொண்டிருக்கிறோம். ஏறத்தாழ
85, 90 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது, அடுத்து ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு செய்து ஆங்காங்கே தடுப்பணை கட்டுவோம். இதற்கு முன்பு எத்தனை தடுப்பணை கட்டினார்கள்? நான் வந்தபிறகு தானே தடுப்பணையே கட்ட ஆரம்பித்திருக்கிறோம் அதேபோல தூர்வாரியிருக்கிறோம். அதேபோல, பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 14,000 ஏரிகள் மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள 26,000 ஏரிகள் என
40,000 ஏரிகள் இருக்கின்றன. இந்த 40,000 ஏரிகளை ஒரே நேரத்தில் தூர்வாருவது என்பது இயலாத ஒன்று அதற்கு நிதி தேவை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட ஏரிகளை எடுத்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாருகின்ற பணியில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். இப்படி தூர்வாரிய காரணத்தினால்தான் பல ஏரிகள் இன்றைக்கு நிரம்பிக் காட்சியளிக்கின்றன. அதேபோல, படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் எஞ்சிய ஏரிகள் அனைத்திற்கும் வேண்டிய நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாரப்படும்.
கேள்வி: நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் வந்திருக்கிறது. குடிமராமத்துப் பணி சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் சென்னையிலுள்ள நீர்நிலைகளை பாதுகாக்க அரசு என்ன செய்ய இருக்கிறது?
பதில்: சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளைத் தூர்வார வேண்டுமென்பதற்காக ரெவின்யூ மாடலில் டெண்டர் விட்டுள்ளோம். அதில் தண்ணீர் இருந்ததால் எடுக்க முடியவில்லை. நான்கு ஏரிகளுக்கும் டெண்டர் விட்டுவிட்டோம். அதன் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாய் வருகிறது. இப்பொழுது நீர் நிரம்பியிருப்பதால், அந்தப் பணியை மேற்கொள்ளாமல் இருக்கிறோம். பூண்டி ஏரியைப் பொறுத்தவரை, தனிப்பட்ட ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.
கேள்வி : நீர்நிலைகளில் கட்டியிருக்கிற வீடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆக்கிரமிப்புகள் எவ்வளவு.
பதில்: நாங்கள் நல்லது செய்வதற்காக வந்திருக்கிறோம். அவதிப்படுகின்ற மக்களுக்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்காக அரசு முயற்சி செய்கிறது, அதைப் பாராட்டுங்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வீணாக வெளியில் செல்கிறது என்று முன்னாள் அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குறிப்பிட்டார். நீர் வீணாகப் போகவில்லை, உபரிநீர் வெளியேறுவதற்காக தண்ணீர் திறந்தார்கள். மழை பெய்து 3,000, 4,000 கனஅடி தண்ணீர் வருகின்றபொழுது மரங்களும் அடித்துக் கொண்டு வருகின்றன.
தண்ணீர் திறந்துவிடும்பொழுது அதில் ஒரு கட்டை சிக்கிக் கொண்டது. அந்தக் கட்டை சிக்கியதால்தான் அந்த கசிவு ஏற்பட்டது . அந்தக் கட்டை அகற்றப்பட்டுவிட்ட பின், ஷட்டர் மூடப்பட்டது. இப்பொழுது, வருகின்ற நீரை சேமித்து வைத்து, ஏற்கனவே எவ்வளவு உயரம் நீர் இருந்ததோ, அதே அளவிற்கு தண்ணீர் தேக்கப்பட்டிருக்கிறது. இதில்கூட அரசியல் செய்ய விரும்புகிறார்கள்,
இது வேடிக்கையாக இருக்கிறது. அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி, நீண்டகாலம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார் நீண்டகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். வேண்டுமென்றே ஒரு தவறான செய்தியை அவதூறான செய்தியைச் சொல்லி எப்படியாவது இந்த அரசின் மீது பழி சுமத்த வேண்டும். அந்த நிலை எல்லாம் மாறி, நல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனையைச் சொல்லுங்கள்,
நிச்சயமாக எங்களுடைய அரசு கேட்கும். எங்களுடைய அரசைப் பொறுத்தவரை, ஒரு சொட்டுநீர் கூட வீணாகாமல் இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Jan 2026மதுரை, காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: சட்டசபையில் அமைச்சர் தகவல்
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுக்கு விசில் சின்னம்
22 Jan 2026டெல்லி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
-
234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே த.வெ.க.வுக்கு விசில் சின்னம்: த.வெ.க.வக்கு தேர்தல் ஆணையம் 'செக்'
22 Jan 2026சென்னை, விசில் சின்னம் த.வெ.க.வுக்கு மட்டும் இல்லையா? த.வெ.க.
-
பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று சென்னை - திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
22 Jan 2026சென்னை, பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
இ.பி.எஸ். வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
22 Jan 2026சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார், காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
-
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி தமிழக கவர்னருக்கு இல்லை: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
22 Jan 2026சென்னை, கவர்னர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் கோவி.
-
10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சு
22 Jan 2026நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட முடிவுற வாய்ப்பே இல்லாத பல்வேறு நாடுகளிடையேயான 8 போர்களை 10 மாதங்களில் முடித்துவைத்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால
-
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம்: கடும் அமளியால் கேரளா சட்டமன்றம் ஒத்திவைப்பு
22 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா சட்டமன்றத்தில் நேர்று கடும் அமளி ஏற்பட்டத்தை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Jan 2026சென்னை, இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டுமென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ஆந்திரத்தில் தனியார் பேருந்து லாரி மீது மோதி தீ: 3 பேர் பலி
22 Jan 2026அமராவதி, ஆந்திரம் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெள்ளமெட்டா அருகே தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்
-
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகல்
22 Jan 2026சென்னை, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரனும் எம்.இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
22 Jan 2026ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்தது த.மாகா மற்றும் புதிய நீதிக் கட்சி
22 Jan 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டபேரவையில் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வருகிற ஜன. 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க.
-
கடலோர தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
22 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று (ஜன. 23) முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் பயங்கரம்: இரும்பு ஆலையில் வெடி விபத்தில் 6 பேர் பலி
22 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கர் உள்ள இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Jan 2026சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கர்நாடகா சட்டப்பேரவையில் கவர்னர் கெலாட் வெளிநடப்பு: காங். எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையால் பரபரப்பு
22 Jan 2026கர்நாடக, கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் கெலாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; துரதிர்ஷ்டவசமான சோகம்: தலைமை நீதிபதி கருத்து
22 Jan 2026டெல்லி, கரூர் கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமான சோகம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
22 Jan 2026சென்னை, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான்: ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
22 Jan 2026அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழ
-
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்
22 Jan 2026டெல்லி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
-
அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 15,000 கோடி ரூபாய் நஷ்டம்
22 Jan 2026டெல்லி, அகமதாபாத் விபத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய ராசிபலன்
22 Jan 2026


