எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்டு 479 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், 89 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 9 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் கடந்த 16.8.2017 அன்று கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வழியோர குடியிருப்புகளுக்கென நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்டு 479 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5.58 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நத்தம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரை கொண்டு 20 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தைச் சார்ந்த 53 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சிக்கு அம்ரூத் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 59 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 2 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காங்கேயம் நகராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சென்னை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 69 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய சிறப்புத் தங்குமிடம், சென்னை, திருவல்லிக்கேணி, மீர்சாகிப்பேட்டையில் உள்ள நகர்ப்புர சமூக சுகாதார மையத்திற்கு 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதல்தளம் என மொத்தம் 89 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டங்களை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்.
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தேனி மாவட்டம், தென்கரை பேரூராட்சியில் 9 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், அம்மாவின் அரசு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் பயில 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டது. அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்பு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை ஆணைகளை பெற்ற 11 மாணவ, மாணவியர் முதல்வரை சந்தித்து, தங்களது மருத்துவ கனவை நனவாக்கியமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது தமிழக முதல்வர் அம்மாணாக்கர்களுக்கு மருத்துவருக்கான கோட்டுகள் மற்றும் ஸ்டெதஸ்கோப்புகளை வழங்கி, வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி. சம்பத், டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: 475 வெளிநாட்டினர் கைது
06 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வார ராசிபலன்
06 Sep 2025 -
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் படிக்கும்பொழுது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
06 Sep 2025சென்னை : பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்