எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : இந்திய அளவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து 7வருடம் தமிழகம் தான் முதலிடம் என்றும், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறும் போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையே இருக்காது என்றும் கரூர் அருகே நடைபெற்ற உழவன் திருவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கரூரில் நடைபெற்ற உழவன் திருவிழா மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் கரூர்-வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தில் உழவன் திருவிழா மற்றும் மாநாடு நடந்தது.இந்த மாநாட்டில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் கலந்துகொண்டு விவசாயிகளின் பாராட்டை ஏற்று சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நான் ஒரு விவசாயி என்பதை விட, நாட்டிற்கே சோறு போட்டு, தன் வியர்வையும் ரத்தத்தினையும் கொண்டு உழுது அதன் மூலம், விவசாயம் செய்து மற்றவர் பசியை போக்கும் ஒரு விவசாயியிடம் நான் பாராட்டு பெறும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், தமிழகத்தில் 6 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மூலதன நிதி வழங்கிய அரசு இந்த அ.தி.மு.க அரசு என்று தெரிவித்தார்..
இங்குள்ள அமைச்சர்கள் ஏற்கனவே புகளூர் பகுதியில் கதவணை வேண்டுமென்கின்ற கோரிக்கை வைத்தனர். தற்போது அந்த திட்டம் சுமார் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த திட்டத்தினை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார். அதே போல, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 412 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதே போல தான் அத்திக்கடவு அவினாசி திட்டம் நீண்ட காலமாக இருந்த நிலையில் தற்போது நிறைவேறி வருகின்றது. முழுக்க முழுக்க மாநில நிதி பெற்று சுமார் 1700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றார். அதுமட்டுமில்லாமல் நமது அதிமுக அரசு குடிமராமத்து திட்டம் என்கின்ற திட்டம் முழு தீவிரமாக நடைபெற்று கோடை காலங்களில் நீரை சேமித்து விவசாயிகளுக்கும், குடிக்கவும் நீர் கொண்டு வந்துள்ளதாகவும், தமிழகத்தில் சுமார் 14 ஆயிரம் ஏரிகள் பொதுப்பணித்துறை வசம் உள்ளது. 26 ஆயிரம் ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளாட்சி துறையின் வசம் உள்ளது ஆகையால் அதன் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு குடிமராமத்து திட்டம் மூலம் சிறப்பான திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
அதே போல, கோதாவரி, காவிரி திட்டம் நமது லட்சிய திட்டம் அந்த திட்டத்தினை நிச்சயம் நிறைவேற்றியே தீர்வோம். இந்த திட்டம் நிறைவேற்றும் போது, தண்ணீர் பஞ்சம் நிச்சயம் தீரும், ஆகையால் ஆந்திரா , தெலுங்கானா முதலமைச்சரை பார்க்க இரண்டு அமைச்சர்களை நியமித்து உள்ளேன் என்று கூறிய முதல்வர், நிச்சயம் இந்த திட்டத்தினை நிறைவேற்றியே தீர்வேன் என்றார். தற்போது தூர்வாரியதால் தான் கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்கின்றது ஆகையால் தான் கடந்த ஆண்டு 32 லட்சத்து 42 ஆயிரம் மெட்ரிக் டன், கொள்முதல் செய்து வரலாற்று சாதனை பிடித்த வெற்றி என் அரசிற்கு உண்டு என்றார்.
ஒவ்வொரு வருடமும் 28 லட்சம் மெட்ரிக் டன்னிற்கு மேல் நெல் கொள்முதல் செய்யாது., ஆனால் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதே போல, நுண்ணுயிர் பாசன திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,893 கோடி ரூபாய் மானியம் கொடுத்துள்ளதாகவும், 7.47 லட்சம் ஹெக்டர் பாசனம் பெற்றுள்ளதாகவும், இதன் மூலமாக 7 லட்சத்து 13 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயிகள் விவசாயத்தினை குறித்து தெரிந்து கொள்ள, உழவன் செய்தி அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருவதாகவும், தமிழகம் முழுவதும் நீர்மேலாண்மையினை மேம்படுத்த 2 ஓய்வு பெற்ற பொறியாளர்கள் கொண்டு சிறப்பான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறினார். முன்னதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விழா கோலாகலம் சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
17 Jan 2026சென்னை, காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Jan 2026சென்னை, தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வாழ்க்கையை ஏழைகளுக்கு அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
17 Jan 2026புதுடெல்லி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர் என்றும் பிரதம
-
இதுவரை வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றுமா? இந்தூரில் இன்று இறுதிப்போட்டி
17 Jan 2026சென்னை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று இந்தூரில் இறுதிப்போட்டி நடக்கிறது.
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத பொருட்களை பிப்ரவரி மாதமும் சேர்த்து வழங்க கோரிக்கை
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத ரேஷன் பொருட்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அந்த பொருட்களை பிப்ரவரி மாதம் சேர்த்து வழங்க பொதுமக்கள் கோரிக்
-
ஆஸி., ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
17 Jan 2026மெல்போர்ன், ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (18-ந்தேதி) தொடங்குகிறது.
-
தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு 6,453.54 கோடி ரூபாய் பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
17 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் : அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 Jan 2026சென்னை, கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எ
-
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர்: எம்.ஜி.ஆருக்கு விஜய் புகழாரம்
17 Jan 2026சென்னை, மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் என்று த.வெ.க. தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மராட்டியத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி: மும்பையில் ‘தாக்கரே’வின் ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
17 Jan 2026மும்பை, மராட்டியத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேலும் அங்கு பா.ஜ.க.
-
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: போட்டியை நேரில் கண்டுகளித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Jan 2026அலங்காநல்லூர், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேற்று நேரில் கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்
-
சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து வெளியிட்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்
17 Jan 2026சென்னை, தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி: பிரதமர் மோடி
17 Jan 2026கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சிக்கு பா.ஜ.க. வந்தால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
யு-19 உலகக் கோப்பையில் கைகுலுக்க மறுத்த இந்தியா, வங்கதேச அணி கேப்டன்கள்
17 Jan 2026புலவாயோ, இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் வலுத்துவரும் நிலையில், யு-19 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன்கள் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளத
-
மேற்கு வங்கம் -அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2026கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சே
-
சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் படுகொலை
17 Jan 2026ராய்ப்பூர், சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
-
யு.பி.ஐ. மூலம் இ.பி.எப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்
17 Jan 2026சென்னை, யு.பி.ஐ. மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026


