எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : இந்திய அளவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து 7வருடம் தமிழகம் தான் முதலிடம் என்றும், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறும் போது தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையே இருக்காது என்றும் கரூர் அருகே நடைபெற்ற உழவன் திருவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கரூரில் நடைபெற்ற உழவன் திருவிழா மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.கரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் கரூர்-வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தில் உழவன் திருவிழா மற்றும் மாநாடு நடந்தது.இந்த மாநாட்டில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் கலந்துகொண்டு விவசாயிகளின் பாராட்டை ஏற்று சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நான் ஒரு விவசாயி என்பதை விட, நாட்டிற்கே சோறு போட்டு, தன் வியர்வையும் ரத்தத்தினையும் கொண்டு உழுது அதன் மூலம், விவசாயம் செய்து மற்றவர் பசியை போக்கும் ஒரு விவசாயியிடம் நான் பாராட்டு பெறும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், தமிழகத்தில் 6 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.300 கோடி மூலதன நிதி வழங்கிய அரசு இந்த அ.தி.மு.க அரசு என்று தெரிவித்தார்..
இங்குள்ள அமைச்சர்கள் ஏற்கனவே புகளூர் பகுதியில் கதவணை வேண்டுமென்கின்ற கோரிக்கை வைத்தனர். தற்போது அந்த திட்டம் சுமார் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த திட்டத்தினை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார். அதே போல, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் 412 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதே போல தான் அத்திக்கடவு அவினாசி திட்டம் நீண்ட காலமாக இருந்த நிலையில் தற்போது நிறைவேறி வருகின்றது. முழுக்க முழுக்க மாநில நிதி பெற்று சுமார் 1700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றார். அதுமட்டுமில்லாமல் நமது அதிமுக அரசு குடிமராமத்து திட்டம் என்கின்ற திட்டம் முழு தீவிரமாக நடைபெற்று கோடை காலங்களில் நீரை சேமித்து விவசாயிகளுக்கும், குடிக்கவும் நீர் கொண்டு வந்துள்ளதாகவும், தமிழகத்தில் சுமார் 14 ஆயிரம் ஏரிகள் பொதுப்பணித்துறை வசம் உள்ளது. 26 ஆயிரம் ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளாட்சி துறையின் வசம் உள்ளது ஆகையால் அதன் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு குடிமராமத்து திட்டம் மூலம் சிறப்பான திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
அதே போல, கோதாவரி, காவிரி திட்டம் நமது லட்சிய திட்டம் அந்த திட்டத்தினை நிச்சயம் நிறைவேற்றியே தீர்வோம். இந்த திட்டம் நிறைவேற்றும் போது, தண்ணீர் பஞ்சம் நிச்சயம் தீரும், ஆகையால் ஆந்திரா , தெலுங்கானா முதலமைச்சரை பார்க்க இரண்டு அமைச்சர்களை நியமித்து உள்ளேன் என்று கூறிய முதல்வர், நிச்சயம் இந்த திட்டத்தினை நிறைவேற்றியே தீர்வேன் என்றார். தற்போது தூர்வாரியதால் தான் கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி செல்கின்றது ஆகையால் தான் கடந்த ஆண்டு 32 லட்சத்து 42 ஆயிரம் மெட்ரிக் டன், கொள்முதல் செய்து வரலாற்று சாதனை பிடித்த வெற்றி என் அரசிற்கு உண்டு என்றார்.
ஒவ்வொரு வருடமும் 28 லட்சம் மெட்ரிக் டன்னிற்கு மேல் நெல் கொள்முதல் செய்யாது., ஆனால் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதே போல, நுண்ணுயிர் பாசன திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,893 கோடி ரூபாய் மானியம் கொடுத்துள்ளதாகவும், 7.47 லட்சம் ஹெக்டர் பாசனம் பெற்றுள்ளதாகவும், இதன் மூலமாக 7 லட்சத்து 13 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயிகள் விவசாயத்தினை குறித்து தெரிந்து கொள்ள, உழவன் செய்தி அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருவதாகவும், தமிழகம் முழுவதும் நீர்மேலாண்மையினை மேம்படுத்த 2 ஓய்வு பெற்ற பொறியாளர்கள் கொண்டு சிறப்பான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறினார். முன்னதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்


