எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டிய போபண்ணாவுக்கு ஆதரவாக சானியாவும் கருத்து தெரிவித்துள்ளது முறையற்றது என்று போபண்ணா மற்றும் சானியாவுக்கு இந்திய டென்னிஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தகுதி பெறவில்லை...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிக்கு இந்தியாவிலிருந்து சுமித் நாகல், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அன்கிதா ரெய்னா ஆகியோர் மட்டும் பங்கேற்கின்றனர், ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.தரவரிசையில் பின் தங்கியதால் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரணுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
சுமித் நாகலுக்கு...
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய வீரர் டி மினாருக்கு கொரோனா ஏற்பட்டதால் தரவரிசையில் 127ம் இடத்தில் உள்ள யூகி பாம்ப்ரிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவரும் முழங்கால் ஆபரேஷன் செய்ததால் 144-வது இடத்தில் உள்ள சுமித் நாகலுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடும் குற்றச்சாட்டு...
இந்நிலையில் ரோகன் போபண்ணா தன் டிவிட்டர் பதிவில், “சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு எனக்கும் சுமித் நாகலுக்கும் மறுப்பு தெரிவித்து விட்டது. காயம், உடல்நலமின்மை காரணங்கள் தவிர ஜூன் 22க்குப் பிறகு அணியில் மாற்றம் செய்யமுடியாது என்பதில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தெளிவாக உள்ளது. ஆனால் அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாகக் கூறி வீரர்கள், ஊடகங்கள், அரசு என்று அனைவரையும் தவறாக திசைத்திருப்பியுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
பதக்கம் வெல்லும்...
இதற்கு ஆதரவாக பதிவிட்ட சானியா மிர்சா, “வாட்? இது (போபண்ணா கூறுவது) உண்மையென்றால், இது முட்டாள்தனமானது வெட்கக்கேடானது. இதனால் கலப்பு இரட்டையரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை வேண்டுமென்றே கெடுத்து விட்டனர். திட்டமிட்டப்படி நீங்களும் நானும் கலப்பு இரட்டையரில் ஆடியிருந்தால் நாம் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். உங்கள் பெயரையும் சுமித் பெயரையும் கொடுத்திருப்பதாகத்தான் எங்களுக்குக் கூறப்பட்டது” என்று பதிவிட்டிருந்தார்.
தகுதி பெறவில்லை...
இதனையடுத்து அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு அளித்திருந்த விளக்கத்தில், “ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் பெயர்கள்தான் அனுப்பப்பட்டன. ஆனால் இவர்கள் சர்வதேச டென்னிஸ் விதிகளின் படி தகுதி பெறவில்லை. நம் வீரர்களின் தரவரிசை நேரடியாக தகுதி பெற முடியாமல் இருந்தது, 16ம் தேதி ஜூலையில் ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் பெயர்கள் மாற்று வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் இடம்பெற்றிருந்தனர். சுமித் நாகலுக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் தான் நாங்களும் சாத்தியம் குறித்து நம்பிக்கை கொண்டோம்.
இரட்டையருக்கு...
சுமித் நாகல் தகுதி பெற்றதால் ரோகன் போபன்னாவுடன் இரட்டையர் ஆட தகுதி பெறுவார்களா என்று கேட்டோம். ஆனால் இதற்கு விதிமுறை இடம் கொடுக்காது என்று சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்து விட்டது. இதைச் செய்ய முடிந்தாலும் இருவரும் இரட்டையருக்குத் தகுதி பெற முடியாது என்றனர்.
அறிவு இல்லை...
ரோகன் போபண்ணாவுக்கு விதிமுறைகள் தெரியும், மூத்த வீரர் அவர் கூட விவரம் புரியாமல் இப்படிப் பேசுகிறார். அவருக்கு உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ளும் அறிவு இல்லை. எனவே இப்படி தேவையில்லாத கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
முறையற்றது...
சானியா மிர்சாவின் பதிவு முறையற்றது. போபன்னா உடனான திவிஜ் மற்றும் சுமித் நாகல் தரவரிசை தகுதி பெறுவதற்குப் போதுமானதாக இல்லை, நாங்கள் ஏன் பதக்கம் வெல்லும் வாய்ப்பை விடப்போகிறோம்? எனவே போபண்னா மற்றும் சானியா டிவீட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


