முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் அடுத்த போட்டியில் கட்டாயம் விளையாடுவார் : பயிற்சியாளர் ஜெயவர்தனே நம்பிக்கை

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : ரோஹித் சர்மா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

விளையாடவில்லை...

சென்னைக்கு எதிரான 30-வது லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக ரோஹித் சர்மாவும் பாண்டியாவும் கலந்துகொள்ளவில்லை. பொலார்ட், மும்பை அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். இருவருடைய நிலைமை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறியதாவது:

அவகாசம் தேவை... 

ரோஹித் சர்மா வழக்கமான பேட்டிங் மற்றும் ஓட்டம் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இங்கிலாந்திலிருந்து தற்போதுதான் அவர் திரும்பியதால் மீண்டும் விளையாட சிறிது அவகாசம் தேவை என நினைத்தோம். எனவே அடுத்த ஆட்டத்தில் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். 

பிரச்னை இல்லை... 

பாண்டியா பயிற்சி எடுத்துக்கொண்டார். அதில் அவருக்கு லேசாக வலி ஏற்பட்டதால் சில நாள்கள் அவகாசம் அளித்துப் பார்க்கலாம் என முடிவெடுத்தோம். பெரிய அளவில் பிரச்னை இல்லை என்றார். எனினும் பாண்டியா அடுத்த ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் என அறியப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து