எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வு நடந்து வரும் நிலையில், ஈயம் - பித்தளையில் செய்யப்பட்ட கவரிங் நகைகளை அடகு வைத்தும், ஒரே நபர்கள் நூற்றுக்கணக்கில் நகைக்கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 5 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகுதியான பயனாளிகளை கண்டறிய மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் பெற்றவர்களின் விபரங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் நகைக்கடன் பெறுவதில் பலவிதமான மோசடிகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கூட்டுறவு சங்கத்தில் நகைகளை அடகு வைக்காமலேயே வைத்தது போல் கணக்கு காட்டி சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அதன் நிர்வாகக் குழு இயக்குநரான கிருஷ்ணசாமி என்பவர் மட்டும் 10 பொட்டலங்களில் ஈயம், பித்தளையில் செய்த கவரிங் நகைகளை வைத்து 11 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் பெற்றது தெரியவந்துள்ளது.
குமரி மாவட்டம்
எப்படியும் நகைக்கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், அதிகாரிகள் துணையுடன் குமரி மாவட்டம் கீழ்குளத்தில் ஒரே நபர் 5 சவரனுக்கு உட்பட்டு 625 நகைக்கடன்கள் மூலம் ஒன்றேகால் கோடி ரூபாயை நகைக்கடனாக பெற்றிருந்ததும், அதே சங்கத்தில் மற்றொரு நபர் 647 நகைக் கடன்கள் மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடன் பெற்றதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சேலம் மற்றும் தருமபுரி
சேலம் காடையம்பட்டி மற்றும் தருமபுரி பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஒரே நபர் 2.42 கிலோ நகைகளை அடகு வைத்து 72லட்சம் ரூபாய்க்கு 384 நகைக்கடன்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் 614 நகைக்கடன்கள் மூலம் 1கோடியே 63லட்சம் ரூபாய் கடனும், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 641 நகைக் கடன்கள் மூலம் 2கோடி ரூபாய் அளவுக்கும் கடன் பெற்றிருக்கின்றனர். ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தியும் 600-க்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு கடன் திருவண்ணாமலையில் பெறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபருக்கு 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
உசிலம்பட்டி
வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஏழைகளுக்கான அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை பயன்படுத்தி மதுரை மாவட்டம் பாப்பையாபுரம், சுந்தரலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 70லட்சம் ரூபாய்க்கு 300 நகைக்கடன்கள் வழங்கியதும், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2 கிலோவிற்கும் அதிகமான நகைகளை அடகு வைத்து 82லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.
நாகப்பட்டினம்
நாகையைச் சேர்ந்தவரின் குடும்ப அட்டையை வைத்து மதுரை உசிலம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ஒரு கிலோ நகைகளை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நகை அடகுகடைக்காரர் ஒருவர் கூட்டுறவு வங்கியில் 25 நகைக்கடன் பெற்றதும், மேலும் பல இடங்களில் குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்கி வெளியில் அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இப்படி வழங்கப்பட்ட பெரும்பாலான நகைக்கடன்கள் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி சலுகையை முறைகேடாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பெறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட ஈயம் பித்தளை நகைகளுக்கு எல்லாம் நகை கடன் வழங்கிய கூட்டுறவு வங்கி அதிகாரிகள், நல்ல வேளையாக பழைய இரும்புக்கு நகை கடன் வழங்கவில்லை என்பது தான் ஆறுதலான விஷயம்.
இந்த மோசடிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
நகர்புறங்களில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்: 3.6 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர் * நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பங்கேற்பு
24 Aug 2025சென்னை : வருகிற 26-ம் தேதி (நாளை) சென்னை மயிலாப்பூர் மண்டலம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகர்ப்புற பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை பஞ்சாப் மாநில முதலமைச்சருமான
-
தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ். அறிவுரை
24 Aug 2025திருச்சி : தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்.
-
அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் அதிரடியாக நீக்கம்
24 Aug 2025அமெரிக்கா : அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஜார்கண்ட்டில் 51 ஆயுள் கைதிகள் விடுவிப்பு
24 Aug 2025ராஞ்சி : ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மாநில தண்டனை மறுஆய்வு வாரிய கூட்டம் நடைபெற்றது.
-
விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டர்
24 Aug 2025மதுரை : மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.
-
உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் முதலமைச்சர் ஆவார் : அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
24 Aug 2025புதுக்கோட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சராக இன்றைய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக வருவார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கல்வியில் நாட்டிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது : தமிழக அரசு பெருமிதம்
24 Aug 2025சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 -ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்ப றைகள், காலை உணவுத் திட்டம
-
தமிழ் மொழி சரித்திர புகழ் வாய்ந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி புகழாரம்
24 Aug 2025திருச்சி : திருச்சி வக்கீல் சங்கம் சார்பில் தனியார் ஓட்டலில் மின்னணு நூலக மையம் தொடக்க விழா நடந்தது. சங்க தலைவர் எஸ். பி.கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
-
பீகார் மாநில சிறப்பு திருத்தம்: 98 சதவீதம் வாக்காளர்கள் ஆவணங்கள் சமர்ப்பிப்பு : தேர்தல் ஆணையம் தகவல்
24 Aug 2025புதுடெல்லி : பீகார் மாநிலத்தில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை முன்னிட்டு வெளியிடப்பட்ட பீ
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் வெளியீடு : கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது
24 Aug 2025சென்னை : தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விடுமுறை தினம் எதிரொலி: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
24 Aug 2025தருமபுரி : தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட
-
முதல்வர் ஸ்டாலினை விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது : அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
24 Aug 2025சென்னை : 50 ஆண்டு பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான முதல்வரை விஜய் விமர்சித்ததை ஏற்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: 215 பள்ளி நிர்வாகத்தை முடக்கியது காஷ்மீர் அரசு
24 Aug 2025ஸ்ரீநகர் : ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 215 பள்ளி நிர்வாகத்தை காஷ்மீர் அரசு முடக்கியுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி
24 Aug 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
-
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார் : பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
24 Aug 2025புதுடெல்லி : ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது.
-
ரூ.2.53 கோடி செலவில் பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற முடிவு
24 Aug 2025ராமேஸ்சுவரம் : ரூ. 2.53 கோடியில் பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற ஆர்விஎன்என் நிறுவனம் ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-08-2025.
25 Aug 2025 -
பல சவால்களை எதிர்கொள்ளும் நமது அரசியலமைப்பு சட்டம் : சுதர்சன் ரெட்டி கருத்து
24 Aug 2025புதுடெல்லி : நமது அரசியலமைப்பு சட்டம் பல சவால்களை எதிர்கொள்வதா துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுளஅள இன்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கர
-
பாராளுமன்றம் அருகே சுற்றித்திரிந்த நபர் கைது
24 Aug 2025புதுடெல்லி : கடந்த 2023-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் மஞ்சள் நிற புகையை எழுப்பி, எம்.பி.க்கள் இடையே பீதியை ஏற்படுத்தினர்.
-
ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி : ராஜ்நாத் சிங் பாராட்டு
24 Aug 2025புதுடெல்லி : ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் விமான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது
-
2 நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி குஜராத் பயணம் : ரூ.5,477 கோடியில் திட்டங்களுக்கு அடிக்கல்
24 Aug 2025குஜராத் : ரூ.5,477 கோடி திட்டப் பணிகளை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி.
-
ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா
25 Aug 2025தி.கிட்டு இயக்கத்தில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஆட்டி’.
-
இந்திரா திரைவிமர்சனம்
25 Aug 2025போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார்.
-
சிறந்த சண்டை இயக்குநர் விருது வென்ற ஸ்டண்ட் சில்வா
25 Aug 2025தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநரான சில்வா இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
-
கேப்டன் பிரபாகரன் திரைவிமர்சனம்
25 Aug 2025விஜயகாந்தின் 100 வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 34 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.