எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.28 - முதல்வரின் நல்ல திட்டங்கள் தொகுதி மக்களை சேர வேண்டும் என்பதற்காக முதல்வரை சந்தித்தோம். முதல்வரை சந்திக்க யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்று தே.மு.தி.க.- எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.
தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களான பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்பாண்டியன் மற்றும் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நேற்று (27.10.2012) தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு, தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி விபரம் வருமாறு:-
செய்தியாளர்கள்: முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதன் நோக்கமென்ன?
அருண்பாண்டியன்: எங்களை தேர்ந்தெடுத்து 1 1ஞூ2 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. பேராவூரணி மக்கள் எங்களுக்கு, எனக்கு இவ்வளவு நல்ல வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு கண்டிப்பாக துரோகம் செய்யக்கூடாது. நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் இந்த நடவடிக்கை. முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக பார்த்து எங்களுடைய தொகுதி பிரச்சினையை சொன்னோம். ஒவ்வொரு பிரச்சினையையும் சொன்னோம். எங்க தொகுதியிலே ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. அந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது. தொகுதி கிட்டத்தட்ட 2 லட்சத்து 52 ஆயிரம் பேர். அவங்களுடைய பிரச்சினை எனக்கு நல்லாவே தெரியும். ஏனென்றால் அந்த ஊருக்கு அதிகமாக போகல. ஆனா மொத்த தொகுதியையும் டிஜிட்டலைசேஷன் பண்ணிட்டு என்னுடைய கையில் இருக்கு. ஒரு பின்-னிலிருந்து, ஒரு ஊசி நூலிலிருந்து மலை வரைக்கும் எப்படியிருக்குமுனு எனக்கு தெரியும். பிரச்சினைகள் நிறைய இருக்கு. முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்கள் வைத்துள்ளார். அந்தத் திட்டங்கள் எல்லாம் நேரடியாக எங்கள் தொகுதி மக்களுக்கு போகணும். பேராவூரணி தொகுதியை தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை. அதற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதாவை வந்து பார்த்தோம். அவங்க வைத்துள்ள திட்டங்கள் நல்ல நல்ல திட்டங்கள் இவையெல்லாம் மக்களுக்கு வந்து சேரணும். இந்த ஒரே காரணத்திற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக வந்து பார்த்து எங்களுடைய மனுவை கொடுத்திருக்கிறோம்.
மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி மக்களுக்கு நிறைய கோரிக்கைகள் இருக்கின்றது. ஏற்கனவே சட்டமன்றத்திலே இதுபற்றி நிறைய நான் கோரிக்கைகள் வைத்திருந்தேன். அவையெல்லாம் நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக நிறைய திட்டங்கள் அறிவித்து நல்லமுறையில் செயல்படுத்தி வருகின்றார். அதனாலே என்னுடைய தொகுதிக்கும் இது மாதிரி மக்களுக்கு தேவைப்படுகின்ற இந்த திட்டங்களையெல்லாம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்திருக்கிறேன். அதைப் பார்த்து கனிவோடு நிறைவேற்றித் தருவேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார். கண்டிப்பாக அவர் எனது தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளையெல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார் என்று நான் நம்புகிறேன்.
செய்தியாளர்கள்: கடந்த 1 1ஞூ2 ஆண்டுகளாக உங்களது கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா? அதனால்தான் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தீர்களா?
மைக்கேல் ராயப்பன்: அந்த மாதிரியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா ஒன்றும் சொல்லவில்லை. கண்டிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்றைக்குத்தான் கோரிக்கைகள் போய் சேர்ந்துள்ளது. கரெக்டா, முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார். அதிகாரிகள் கூட எங்கள் கோரிக்கைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதிகாரிகள் மட்டத்திலிருந்து வராமலும் இருந்திருக்கலாம்.
செய்தியாளர்கள்: முதலமைச்சரை சந்திப்பதற்கு உங்கள் கட்சித் தலைவரிடம் அனுமதி பெற்று வந்தீர்களா?
மைக்கேல் ராயப்பன்: மக்கள் கோரிக்கையை வைப்பதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்று நினைத்து முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன்.
செய்தியாளர்கள்: சட்டமன்றத்திலே உங்களுடைய செயல்பாடு எப்படியிருக்கும்?
மைக்கேல் ராயப்பன்: கண்டிப்பாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை சட்டமன்றத்திலே வைத்து, அவற்றை நிறைவேற்றித்தர வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்துவோம்.
செய்தியாளர்கள்: உங்களுடைய கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று முதலமைச்சரை சந்தித்தார்கள். இன்று நீங்கள் இருவரும் சந்தித்துள்ளீர்கள். உங்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா?
மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி கோரிக்கைகளைத்தான் நான் இன்றைக்கு கொண்டு வந்துள்ளேன். நேற்று நடந்த விஷயத்திற்கு எதற்கு, ஏன் என்று நான் பதில் சொல்ல முடியாது. மக்கள் கோரிக்கைக்காக வேண்டி, மக்கள் எதற்காக நம்மை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை அறிந்து அவங்களுக்கு நல்லது பண்ண வேண்டி நான் வந்திருக்கிறேன். அதனால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
செய்தியாளர்கள்: கடந்த 1 1ஞூ2 வருடமாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையா? தொகுதியில் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா?
மைக்கேல் ராயப்பன்: தொகுதி மக்களின் கோரிக்கையை இப்போதுதான் நேரடியாக வைத்துள்ளேன். கடந்த வருடங்களில் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருந்தோம். தொகுதி மக்களுக்காக முதலமைச்சரை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று வாய்ப்பு கேட்டோம். முதலமைச்சர் நேரம் ஒதுக்கி கொடுத்தார். இப்போது அவரை நேரடியாக பார்த்து மக்கள் கோரிக்கைகளை கொடுத்திருக்கிறோம்.
செய்தியாளர்கள்: சட்டமன்றத்தில் யாருடைய தலைமையின் கீழ் இனி செயல்படுவீர்கள்?
மைக்கேல் ராயப்பன்: இப்போது தொகுதி மக்களின் கோரிக்கைகளை வைத்துள்ளோம். மற்றவைகளை பிறகு பேசிக் கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் பேட்டியின்போது கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


