எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர் சுமார் 7 லட்சம் பேர் மீண்டும் சென்னை திரும்புவதற்கு இன்று முதல் 19-ம் தேதி வரை 3,797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி கடந்த 11, 12, 13-ம் தேதிகளில் 3 நாட்களுக்கு சுமார் 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
சென்னையில் இருந்து 11, 12, 13-ம் தேதிகளில் 3 நாட்களுக்கு மொத்தம் 8126 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 3½ லட்சம் பேர் பொங்கல் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இது தவிர ரெயில்கள் மற்றும் கார்கள் மூலமாகவும் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 7 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. இதே போன்று பல்வேறு ஊர்களில் இருந்து பிற ஊர்களுக்கு 4,739 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களின் மூலம் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்தனர். ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கும் வசதியை செய்துள்ளது. இன்று முதல் 19-ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு செய்தவர்கள் எளிதாக சிரமமின்றி திரும்பி வர இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சென்றுள்ள சுமார் 7 லட்சம் பேர் திரும்பி வருவதற்காக இன்று முதல் 19-ம் தேதி வரை 3,797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த பஸ்களில் முன்பதிவு செய்யலாம் என்று தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை தவிர மற்ற ஊர்களுக்கு திரும்புவதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு 6,612 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் மூலம் சுமார் 4 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (திங்கட்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 5,655 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நாளை 18-ம் தேதி தினசரி பஸ்களான 2,100 பஸ்களுடன் கூடுதலாக 3,214 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 19-ம் தேதி 2,100 தினசரி பஸ்களுடன் சிறப்பு பஸ்களாக 1,540 பஸ்கள் இயக்கப்படும். மொத்தத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 16,709 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கொரோனா கட்டுப்பாடு காரணமாகவும், 18-ம் தேதி தைப்பூசம் காரணமாகவும், 19-ந் தேதிக்கு பிறகு திரும்பி வர பலர் திட்டமிட்டு உள்ளனர். எனவே 19, 20-ந் தேதிகளில் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அப்படி பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கேற்ப கூடுதல் பஸ்கள் விடப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் மாவட்டங்களில் இருந்து பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று இரவு முதல் சென்னைக்கு மக்கள் திரும்புவார்கள். இது போன்ற பண்டிகை காலங்களின்போது பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது. இந்த நிலையில் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சாலை பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் 4 ஆம்னி பஸ்கள் செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பெருங்களத்தூர் பகுதியில் பாலம் வேலை நடைபெறுவதால் அங்கு மட்டும் சாலை குறுகலாக இருப்பதால் அந்த இடத்தில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இன்று அதிகாலையில் 50 காவலர்கள் அங்கு நிறுத்தப்பட உள்ளனர். அவர்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். அதிகளவில் நெரிசல் ஏற்பட்டால் கனரக வாகனங்கள் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து படப்பை, வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்படும். பெருங்களத்தூரில் இறங்கி பெரும்பாலான வர்கள் தாம்பரம், கிண்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வார்கள்.
இதுபோன்று மக்களின் வசதிக்காக சிறப்பு மாநகர பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுஇருக்கிறது. இந்த பஸ்களில் பொதுமக்கள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் பயணம் செய்யலாம். இதன் மூலம் அங்கிருந்து ரெயில், பஸ் உள்ளிட்ட மற்ற வாகனங்களில் தங்களது இருப்பிடங்களுக்கு பொதுமக்கள் எளிதாக செல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.