எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் நவ. 30 - சேலம் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் பொதுமக்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி விட்டது. 3 மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நேற்று அதிகாலை 350 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது வேகமான சத்தத்துடன் சூறாவளி காற்று வீசியது. ஆடுகள், மாடுகள் பெருத்த ஓசையுடன் கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓடியதால் பயந்துபோன பொதுமக்கள் குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர். கிருஷ்ணகிரி பகுதியில் நிலநடுக்கம் 3.3 என பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட குள்ளாத்திராம் பட்டி, குருக்கலையனூர், மஞ்சார அள்ளி, ஈச்சூர், நாகமறை, ராமகுண்ட அள்ளி, மத்தாளபள்ளம், ஏரியூர், நெருப்ர், பெரும்பாலை, ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வெடி வெடிப்பது போன்ற சத்தம் போல் கேட்டது.
மேலும் இந்தபகுதியில் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனால் ஆண்களும், பெண்களும் அலறி அடித்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்தனர். சிலர் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடி வந்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளி சாலையில் நின்றனர். சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
கிராமங்களில் வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த ஆடு, மாடுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடின. அவை சத்தம் போட்டுக் கொண்டு ஓடியதால் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் வெளியே ஓடி வந்து பார்த்த போது தான் சிலருக்கு நில நடுக்கம் ஏற்பட்ட தகவல் தெரிந்தது. சில கிராமங்களில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு நாய்கள் ஊளையிட்டுக்கொண்டு ஓடி உள்ளன.
இந்த சத்தத்தை கேட்டு சிலர் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அப்போது சூறாவளி காற்று அடித்ததால் எப்படி சத்தம் வருமோ அது போல நிலநடுக்க சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்
ஈச்சூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவரது ஓட்டு வீட்டில் 4 இடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி பேருராட்சிக்குட்பட்ட சாம்ராஜ்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், மற்றும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளான கூனாண்டியூர், கீரைக்காரனூர், மற்றும் பொட்டனேரி, அரங்கனூர், வெள்ளார் பேரூ ராட்சிக்குட்பட்ட எருமப்பட்டி, நங்கவள்ளி, வனவாசி,ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நில நடுக்கம் 5 முதல் 8நொடிகள் வரை இருந்தது. . நில நடுக்கம் ஏற்பட்ட போது கட்டில் குலுங்கியது. பாத்திரங்கள் உருண்டன. தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கொட்டும் பனியிலும் வீட்டுக்கு வெளியே ரோடுகளில் நின்றனர். நிலநடுக்கத்தினால் நங்கவள்ளி அருகே தாச காப்பட்டியில் முனியப்பன் என்பவரது வீட்டில் விரிசல் ஏற்பட்டது.
மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் அருகே கூத்தனூரில் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் நிலநடுக்கத்தால் உராய்ந்து இடி சத்தம் போல கேட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், கோவிந்தப்பாடி, குருமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. அதிகாலை 4 மணிக்கு முன்பு நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் காலை 8 மணி வரை பெண்களும், ஆண்களும் நிலநடுக்க அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பீதியில் அவர்கள் தெருவில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்ல பயந்தனர். மீண்டும் நில நடுக்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். தாரமங்கலத்தில் அதிகாலை நேரத்தில் ரெயில் போவது போல் திடீரென சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருட்கள் குலுங்கியது.
இதனால் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். ஆனால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கஞ்ச நாயக்கன்பட்டி, சின்ன திருப்பதி, ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 6 days ago |
-
தி.மு.க. நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேசுங்கள்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
03 May 2025சென்னை, சமூக வலைத்தளங்களில் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரம்
03 May 2025சென்னை, தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
-
பிரதமர் மோடியுடன் ஒமர் அப்துல்லா சந்திப்பு
03 May 2025புதுடில்லி, டில்லியில் பிரதமர் மோடியை ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை சந்தித்தார்.
-
திருப்பதி கோவிலில் 7 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
03 May 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
-
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
03 May 2025புதுச்சேரி : பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
-
சச்சின் சாதனை முறியடிப்பு: சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்
03 May 2025அகமதாபாத் : ஐ.பி.எல். தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
-
சிந்து நதியில் அணை காட்டினால் இடிப்போம்: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்
03 May 2025இஸ்லாமாபாத், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத
-
காய்கறி கண்காட்சியுடன் நீலகிரியில் கோடை விழா தொடக்கம்
03 May 2025கோத்திகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது
-
2024 நீட் தேர்வில் முறைகேடு: 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து 26 பேர் சஸ்பெண்ட்
03 May 2025புதுடெல்லி, நீட் தேர்வில் முறைகேடு தொடர்பாக 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு 26 பேரை சஸ்பெண்ட் செய்து தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது
-
குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஐதராபாத்
03 May 2025அகமதாபாத் : ஐ.பி.எல். போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
-
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: 14 தமிழக மீனவர்கள் காயம்
03 May 2025வேதாரண்யம், : தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் சொத்து வரி உயர்வு? தமிழக அரசு மறுப்பு
03 May 2025சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு இன்று 'நீட்' நுழைவு தேர்வு
03 May 2025புதுடெல்லி, நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான 'நீட்' நுழைவு தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
சொத்து வரி மீண்டும் உயர்வா? வெளியான செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
03 May 2025சென்னை, உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை மீண்டும் 6 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியானது.;
-
ஆஸி., தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி: அல்பனீஸ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து
03 May 2025மெல்போர்ன் : ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அந்தோணி அல்பனீஸ் மீண்டும் பிரதமர் ஆகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது
03 May 2025சென்னை, அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதையடுத்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
-
கவுருக்கு லைக்? கோலி விளக்கம்
03 May 2025இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) நடிகையின் புகைப்படத்துக்கு லைக் செய்திருந்தார்.
-
உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட்: பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்: நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ் எச்சரிக்கை
03 May 2025சென்னை, அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். பணம் பெற்றுக்கொண்டு சீட் வழங்குவதில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
மிரட்டல், அச்சுறுத்தல்களை நாம் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
03 May 2025சென்னை, அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பர்.
-
நாகபட்டினம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மே 6-ல் மழைக்கு வாய்ப்பு
03 May 2025சென்னை, தமிழகத்தில் இன்று (மே 4) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வ
-
இந்தளவுக்கு வளரும் என்று நினைக்கவில்லை: ஐ.பி.எல். குறித்து கோலி ஆச்சர்யம்
03 May 2025பெங்களூரு : ஐ.பி.எல். தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.
18-வது சீசன்...
-
குமரியில் அலைமோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
03 May 2025குமரி : கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஆசிய கோப்பை ரத்தாக வாய்ப்பு..?
03 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - வங்காளதேசம் தொடர், ஆசிய கோப்பை தொடர் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் 'பயங்கரவாதம்' பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
03 May 2025புதுடில்லி, பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.
-
நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்
03 May 2025அகமதாபாத் : சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நடுவருடன் ஷுப்மன் கில் வாக்குவாதம் செய்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.