எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.31-சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை ஒருநாள் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரு 20 ஓவர் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டியில்இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் முடிந்தது.
அடுத்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட முதலா வது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் போட்டி பாதிக்குமோ என ரசிகர்களிடம் அச்சம் ஏற்பட்டது. ஆனால் இரவில் மழை இல்லை.
நேற்று காலையில் வெயில் அடித்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். மழை காரணமாக ஆடுகளம் மூடிவைக்கப்பட்டு இருந்ததால் சேதம் அடையாமலும் மழை நீnullர் புகாமலும் இருந்தது. ஆனால் ஆடுகளத்தின் வெளிப்பகுதி ஈரமாக இருந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் ஓவர் குறைக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாஉல்ஹக் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
மைதானம் ஈரமாக இருப்பதால் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் . பேட்ஸ்மேன்களுக்கு முதல் 20 ஓவர் கடினமாக இருக்கும் என்று கருதி இந்த முடிவை எடுத்தார். அறிவித்தபடி 10 மணிக்கு போட்டி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், காம்பீர் களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் கேப்டன் கணிப்புபடி மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜுனைத்கான், முகமது இர்பான் அசுரவேகத்தில் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். 3 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 17 ரன்களே எடுத்து இருந்தது. 4வது ஓவரில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. ஜுனைத்கான் பந்தில் ஷேவாக் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து கோலி வந்து காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். ஆடுகளம் மோசமான நிலையில் இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. காம்பீர் 8 ரன்னில் இர்பான் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். தொடர்ந்து கோலி ரன் எடுக்காமலும், யுவராஜ்சிங் 2 ரன்னுடனும் அடுத்தடுத்து கிளீன் போல்டு ஆனார்கள்.
அடுத்து சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். 5.6 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டபோது இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களுடன் பரிதாபமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஜுனைத்கான் அபாரமாக பந்துவீசி ஷேவாக், கோலி, யுவராஜ்சிங் ஆகிய 3 விக்கெட்டுகளையும், முகமது இர்பான், காம்பீர் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றினார்கள். 4 விக்கெட்டுகளுமே கிளீன் போல்டு ஆனது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ரெய்னாவும், ரோகித்சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அப்போது ரோகித் சர்மா 4 ரன்னில் ஜுனைத்கான் பந்தில் அவுட் ஆனார். 5 விக்கெட்டுகளை பறி கொடுத்ததால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் டோனி களம் இறங்கினார். அவர் ரெய்னாவுடன் நிலைத்து நின்று ஆடி அணியை மோசமான சரிவில் இருந்து மீட்டார்.
5 விக்கெட்டுகள் விழுந்தபோது இந்தியா 9.4 ஓவரில் 29 ரன் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு டோனி ரெய்னா ஜோடி ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தி 31வது ஓவரில் 100 ரன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ஸ்கோர் 102 ரன் ஆக இருந்தபோது சுரேஷ் ரெய்னா முகமது ஹபிஸ் பந்தில் போல்டு ஆனார். ரெய்னா 88 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்தார்.
ரெய்னா அவுட் ஆனதும் தமிழக வீரர் அஸ்வின் வந்தார். ஆட்டத்தில் 39வது ஓவரில் டோனி பிரிஹிட் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து அரை சதத்தை தொட்டார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் டோனி பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 113 ரன்களுடனும், அஸ்வின் 31 ரன்களுடனும், களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள்.பாக் வீரர் முகமது ஹபீஸ் ரன் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தார்.பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடினார்கள். 48.1 ஓவரில் பாக் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது., நஷீர் ஜாம்ஷெத் 101 ரன்களும்,யுனுஸ்கான் 58 ரன்களும் எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி
18 Jul 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.