எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்பின் முகுருசா, எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கையா கனேபியை எதிர்கொண்டார்.
முதல் சுற்றை முகுருசா 6-2 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட கனேபி இரண்டாவது சுற்றை 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் சிறப்பாக ஆடிய கனேபி 6-4 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் கனேபி 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி
கடந்த 5 போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி அணி 4 முறை சாம்பியன் லீக் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். நடப்பு சீசனுக்கான ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தன.
இதில் மான்செஸ்டர் சிட்டி, ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. தொடக்கம் முதல் ஆஸ்டன் அணி சிறப்பாக விளையாடியது. ஒரு கட்டத்தில் 2-0 என ஆஸ்டன் வில்லை முன்னிலை பெற்றிருந்தது. இறுதியில், மான்செஸ்டர் சிட்டி அணி அதிரடியாக ஆடியது. இதனால் கடைசி கட்டத்தில் 3 கோல்களை அடித்து அசத்தலாக வெற்றி பெற்றது. அத்துடன், சாம்பியன் லீக் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. மான்செஸ்டர் சிட்டி அணி 38 போட்டிகளில் 29 வெற்றி, 6 டிரா, 3 தோல்விகள் என மொத்தம் 93 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
டெஸ்ட் அணியில் இடம்பெற உம்ரானுக்கு தகுதி - அசாருதீன்
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளராக அசத்தியவர் உம்ரான் மாலிக். பிரமிக்க வைக்கும் வேகத்தில் பந்துவீசும் இவர் இந்த ஐபிஎல் சீசனில் அதிரடி பேட்டிங் ஜாம்பவான்களுக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தலாக விளங்கினார். தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் அதிகபட்சமாக இந்த தொடரில் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார். இவரை இந்திய அணியில் தேர்வு செய்ய கூறி பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க 20 ஓவர் தொடருக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது, தவறினால் அவர் காயங்களுக்கு ஆளாக நேரிடும். ஒரு எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்படும் ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என நம்புவதாக" அவர் தெரிவித்துள்ளார்.
காலணி விருதை வென்ற முதல் ஆசிய வீரர்
நடப்பு ப்ரீமியர் லீக் தொடரில் முகமது சாலா மற்றும் தென் கொரிய வீரர் Son Heung-min ஆகியோர் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்களாக தொடரை நிறைவு செய்துள்ளனர். அதனால் இருவரும் தங்கக் காலணி விருதை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் 29 வயதான Son Heung-min, Tottenham Hotspur கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் கடந்த 2015 முதல் அந்த அணியில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 231 போட்டிகளில் விளையாடி, 93 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார்.
இதில் நடப்பு ப்ரீமியர் லீக் தொடரில் மட்டுமே அவர் 23 கோல்களை பதிவு செய்துள்ளார். மறுபக்கம் எகிப்து வீரர் முகமது சாலாவும் நடப்பு சீசனில் 23 கோல்களை பதிவு செய்துள்ளார். அதனால் இருவருக்கும் தங்கக் காலணி விருது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் ப்ரீமியர் லீக் தொடரில் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறை. தென் கொரிய அணிகக்க 98 போட்டிகளில் விளையாடி, 31 கோல்களை பதிவு செய்துள்ளார் Son Heung-min. இவர் தென் கொரிய அணியின் கேப்டனும் கூட. முன்கள வீரரான அவர் ஆசிய கண்டத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார்.
பிஃபா கால்பந்து உலகக் கோப்பை: களம் இறங்கும் மகளிர் நடுவர்கள்..!
வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பையை நடத்த உள்ளது. மொத்தம் 32 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த தொடரில் முதல் முறையாக மகளிரை நடுவர்களாக நியமித்துள்ளது பிஃபா. இது உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொடரில் மூன்று மகளிர் நடுவார்களாகவும், மூன்று மகளிர் துணை நடுவர்களாகவும் பணியாற்ற உள்ளனர். பிரான்ஸ், ருவாண்டா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் நடுவர்கள் மூவர் இந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை நடுவர்களாக பிரேசில், மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் போட்டி: 2-வது சுற்றில் கார்லோஸ்
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கியது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னணி வீரரான டோமினிக் திம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் அதிர்ஷ்டசாலி ஜுவான் இக்னாசியோ லண்டெரோவை வீழ்த்தி பிரெஞ்சு ஓபனின் 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நாளை மறுதினம் நடைபெறும் 2-வது சுற்றில் இவர் சக நாட்டு வீரரான ராமோஸ் வினோலாஸ்-சை எதிர் கொள்கிறார்.
________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 அரிய வகை விலங்குகள் மீட்பு..!
15 Sep 2025மும்பை, தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 வகை அரிய விலங்குகளை விமான நிலைய அதிகாரிகள் மீட்டனர்.
-
முதல்முறையாக ராமதாஸ் மகள் பா.ம.க. கூட்டத்தில் பேச்சு
15 Sep 2025கிருஷ்ணகிரி : முதல்முறையாக டாக்டர் ராமதாசின் மகள் பா.ம.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
-
நடிகர் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது
15 Sep 2025அமெரிக்கா : நடிகர் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது வழங்கப்பட்டது.
-
சென்னையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக்கோரி காவல்துறையிடம் மனு
15 Sep 2025சென்னை, சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
-
ஆசிய கோப்பை 6-வது லீக்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை 6-வது லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
காவல்துறை நிபந்தனைகளை மீறல்: திருச்சி த.வெ.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
15 Sep 2025திருச்சி : திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நிபந்தனைகளை மீறியதாக திருச்சி த.வெ.க.
-
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
15 Sep 2025பியாங்காங் : அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.