எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.14 - தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்படுகிறது, ஆகையினால் உணவு பாதுகாப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
உணவு பாதுகாப்பு மசோதா குறித்த மாநில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நேற்று (13.2.13) நடைபெற்றது. மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் என்.பி.நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் பேசியதாவது:-
தமிழ்நாடு பொது விநியோக திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உணவு பாதுகாப்பை எந்த விதிவிலக்கு இல்லாமல் உறுதிப்படுத்த முடிகிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோக திட்டம் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படுவதால், தமிழக முதல்வர் இதை அமல்படுத்த உறுதியாக உள்ளார். தமிழ்நாட்டில் அரிசி மட்டுமின்றி கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோக திட்டமாக பருப்பு, பாமாயில் போன்றவையும் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மற்றொரு தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால், மாநிலத்திலுள்ள நியாய விலை கடைகள் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கு கழத்தாலும், கூட்டுறவு சங்கங்களாலும் நடத்தப்படுகின்றது. ஒரு சில நியாயவிலை கடைகள் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் நடத்த அனுமதிக்கப்படுகின்றது. இத்தகைய கடைகளை தனியார் துறை நடத்த அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் ஆண்டு உணவு மானியம் ரூ.4,900 கோடியாகும். வலுவான நிர்வாக பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் குறைத்தீர்க்கும் திட்டம் ஆகியவை பொது விநியோக கூட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் பல தலைமுறைகளாக அமல்படுத்தி வரும் பொது விநியோக திட்டத்தை ஒப்பிட்டு காட்டி, தற்போது மத்திய அரசு அமல்படுத்தி வரும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள எதார்த்தமான குறைபாடுகளை தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வரின் கருத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நம்முடைய ``சமஷ்டி அமைப்பில் மாநிலங்கள் நேரடியாக மக்களோடு நெருக்கமான உறவு வைத்துள்ளதால், பிரபலமான நலத்திட்டங்களை தேர்வு செய்திவதிலும், அமல்படுத்திலும் மாநிலங்களுக்கு உரிமைகள் இருக்க வேண்டும்'' இவ்வாறு தமிழக முதல்வர் கூறிய கருத்து நிலைக்குழுவால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 2012 பிப்.8, 9 தேதிகளில் மாநிலங்களின் உணவு மற்றும் விவசாய அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வரின் கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இறுதி செய்யும் முன்பு, சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதுபோல், உணவு பாதுகாப்பு மசோதா குழப்பம் மற்றும் அரைகுறை தன்மையால் குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக உத்தேசிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குழுக்கள் பற்றி வகைபாடு இதை அமல்படுத்துவதில் விளக்கமாக இல்லை. நிலைக்குழுவால் கூறப்பட்டுள்ளதுபோல், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களின் சமூக பொருளாதார சாதிவாரியான கணக்கெடுப்பு நிறைவு பெறவில்லை. குறிப்பிட்ட செயற் திட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் முடிவு எடுக்கவில்லை என்று நாங்கள் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்வதற்கு முன்பு அமல்படுத்தும் காலக்கெடுவை நிர்ணயிக்கக்கூடாது. இந்த வகைப்பாட்டு பிரிவுகள் அறிவியல் ரீதியானதோ, ஒப்புகொள்ளகூடியதோ இல்லை. மத்திய அரசின் இந்த மசோதாவின் பயன்பெறும் மக்கள் தொகையின் சதவிதம் கிராமப்புறத்தில் 75 சதவீதமாகவும், நகர்புறத்தில் 50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. நகர்புறங்களின் 50 சதவிதம் என்பதை தமிழ்நாட்டை மிகவும் பாதிக்கும். ஏன்என்றால் இங்கு பெரும் பகுதி, நகர்புறமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய திட்டக்குழு உத்தேசித்துள்ள வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பிரிவுகளும் இந்த மசோதாவின் கூறப்பட்டுள்ள வகைபாடுகளும் நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பு வழங்குவதை கேலிகூத்து ஆகவிடும். நகர்புறங்களின் 50 சதவிதம் என்பதை கிராமப்புறங்களை போலவே 75 சதவிதமாக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன்.
இயற்கை பேரிடர்களான வறட்சி, வெள்ளம், நெருக்கடி போன்ற காலங்களில் நலிந்த பிரிவை சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை வறுமை கோட்டுக்கு கீழே அதிகரித்து விடுகிறது. பயனாளிகளின் அடையாளம் காண்பது, சலுகை பெற்ற வீடுகள், பொதுவாக உள்ள வீடுகள், பட்டினியால் வாடும் நபர்கள், சிறப்பு குழுக்கள், கைவிடப்பட்ட நபர்கள், வீடற்றவர்கள் ஆகியவர்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை. இதனால் பல தவறுகள் ஏற்படும், இவற்றை நடைமுறை பிரச்சனைகளை கொண்டு தீர்க்க வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகளை ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவுகளாக பிரிக்கலாம் என்று ஏற்கனவே பொதுவிநியோக திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களை ஏ பிரிவில் சேர்க்கலாம் என்றும் நிலைக்குழு கூறியுள்ளது. பொது விநியோக திட்டத்தில் 50 சதவிதத்தை மத்திய அரசு ஏற்கலாம் என்பது எங்களுடைய கருத்து. சலுகை பிரிவினர் பொது குழுவினர் அனைவருக்கும் மாதம் 5 கிலோ எல்லோருக்கும் வழங்கிடலாம் என்பது நிலைக்குழுவின் கருத்து. தமிழ்நாட்டின் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 12 கிலோ தேவைப்படுகிறது. ஆனால் இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தின் 5 கிலோ மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்திலுள்ள எண்ணிக்கை அடிப்படையில் ஒரு நபருக்கு மாதத்திற்கு 10 கிலோ வழங்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம்.
இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதுபோல், உணவு பாதுகாப்பு திட்டத்தில் நேரடி பணபட்டுவாடாவை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைக்காது, குழந்தைகள் பட்டினி கிடக்க நேரிடும். மேலும், உணவு கூப்பன் முறை எங்கள் மாநிலத்திற்கு ஏற்றது அல்ல. எனவே இந்த யோசனைகளை இந்த மாநிலங்களுக்கு வற்புறுத்தகூடாது. தற்போதுள்ள மாநிலங்களுக்கான உணவு தானிய ஒதுக்கீட்டை உணவு பாதுகாப்பு மசோதா பிரச்சனை ஏற்படுத்தும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் 2.96 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதால் நிலைமாறி மாதந்தோறும் 2.24 லட்சம் மெட்ரிக் டன்தான் ஒதுக்க நேரிடும். தற்போதுள்ள ஒதுக்கீட்டை பாதுகாக்காவிட்டால் தமிழ்நாட்டின் பொது விநியோக திட்டம் பாதுகாப்புக்குள்ளாகும். எனவே தற்போதுள்ள உணவு தானிய திட்டத்தை பாதுகாக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை திருத்தவேண்டும். நிலைக்குழுவின் சிபாரிசுப்படி மத்திய தொகுப்பில், ஒதுக்கீட்டில் குறைவு ஏற்பட்டால் அதற்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்கொள்ளவதாக இல்லை. இது மேலும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏன்என்றால், இதை விலைக்கி பொது சந்தையில் வாங்க முடியாது. எனவே உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், இறக்குமதி மூலம் அதை சரிசெய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமையாகும்.
ஆகையினால் உணவு பாதுகாப்பு அமைப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டுகிறேன். தற்போது தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோக திட்டமுறையை மேலும் சிறப்பாக அமல்படுத்த உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
27 Dec 2025சென்னை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
எனக்கு வழிகாட்டியவர் விஜய்: செங்கோட்டையன் உருக்கம்
27 Dec 2025திருப்பூர், எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று செங்கோட்டையன் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா, கார்வார் துறைமுகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம்
27 Dec 2025புதுடெல்லி, கர்நாடக மாநிலத்தில் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கிறார்.
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாட்டில் 12.34 லட்சம் பேர் பயன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
27 Dec 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை 12.34 லட்சம் பேர் பயன்பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
27 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
-
வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை: ஒரேநாளில் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு
27 Dec 2025சென்னை, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,74,000-க்கு விற்பனையானது.
-
தமிழக அரசின் 4 திட்டங்கள் மூலம் மக்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் மிச்சம்: தி.மலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Dec 2025திருவண்ணாமலை, தமிழக அரசின் 4 திட்டங்கள் மூலம் மக்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் மிச்சமாகிறது என்று திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல
-
ராமநாதபுரத்தில் வரும் 30-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ராமநாதபுரத்தில் வருகிற 30-ம் தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
நமக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே கவர்னர் உள்ளார்: தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு தரவில்லை: தி.மலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Dec 2025திருவண்ணாமலை, மத்திய பா.ஜ.க. அரசு நமக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக போராட்டம் - வன்முறை போலீஸார் காயம்; வாகனங்கள் எரிப்பு
28 Dec 2025ராய்கர், சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தின் தாம்னார் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் வன்முறையாக மாறியது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி
28 Dec 2025பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
-
பெருவில் நிலநடுக்கம்
28 Dec 2025லிமா, பெரு நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.



