எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
3-வது கண்காட்சி...
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை(டிச.27) தொடங்கி வைத்து பேசினார். விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில், நம்முடைய திராவிட மாடல் அரசு முன்னோடியாக இருக்கிறது. இந்த வேளாண் கண்காட்சி, இந்த ஒரு ஆண்டில் மட்டும் எத்தனையாவது கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? மூன்றாவது கண்காட்சி.
விவசாயிகள் அலைய...
இன்றைக்கு, தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பல மணி நேர வேலைகளை, சில மணித்துளிகளில், பல நூறு நபர்கள் செய்கின்ற வேலைகளை, சில இயந்திரங்கள் செய்கின்ற அளவுக்கு, அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது! இந்த வளர்ச்சி, விவசாயிகளான உங்கள் கைகளில் வந்து சேர்ந்தால்தான், அது உண்மையான வளர்ச்சியாக மாறும். அப்படி இருக்கும்போது, இந்த தொழில்நுட்பங்களை தேடி, விவசாயிகளான நீங்கள் அலையக் கூடாது என்று தான், உங்களைத் தேடி வந்து இந்த வேளாண் கண்காட்சிகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கலந்துரையாடல்...
சரி, கண்காட்சி வைத்துவிட்டால் மட்டும் போதுமா. இதையெல்லாம் எளிமையாக புரிவது போன்று விளக்கி சொல்லி, இதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டாமா? அதற்காகத்தான், 13 தலைப்புகளில், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுக்கான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த கருத்தரங்குகள் மூலமாக, புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அரசியல் செய்வார்கள்...
எதற்காக இத்தனையும் நாம் செய்கிறோம்? விவசாயத்தை நிலைபெற செய்யவேண்டும் என்பதற்காக செய்கிறோம். வேளாண் துறையும், உழவர்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளை களைந்து, விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். நாம் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடனே, வேளாண்மைத்துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம். சிலர், பெயரை எல்லாம் இஷ்டத்துக்கு மாற்றுவார்கள்… ஆனால், விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராடவிடுவார்கள்… இன்னும் சிலர், விவசாயி வேடமிட்டு, அரசியல் செய்வார்கள்
குறுவை சிறப்பு தொகுப்பு...
கடந்த 5 ஆண்டுகளாக, மேட்டூர் அணையை, சரியான நேரத்தில் திறக்கிறோம். அதனுடைய 20 லட்சம் விவசாயிகள் பயனடைகின்ற வகையில், ரூ.481 கோடி செலவில், ‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்’ கொண்டு வந்திருக்கிறோம்! இந்த ஆண்டு, முதன்முறையாக, டெல்டா அல்லாத மாவட்டங்களில், கார் - குறுவை - சொர்ணவாரிப் பருவங்களில் நெல் சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை ரூ.132 கோடியில் செயல்படுத்தியிருக்கிறோம்.
வேளாண் வளர்ச்சி திட்டம்...
கிராமங்களில், உழவுத் தொழிலை வலுப்படுத்த வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து, ஐந்தாண்டு பெருந்திட்டமாக கொண்டு வந்ததுதான், “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!” 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகின்ற இந்த திட்டத்தால், 54 ஆயிரத்து 701 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வந்திருக்கின்றோம்.
இலவச மின்சார இணைப்பு...
வேளாண் - உழவர் நலத்துறை சார்பில், செய்யப்பட்டிருக்கின்ற திட்டங்கள் பற்றியும், முன்னெடுப்புகள் பற்றியும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, அவர் ஒரு பெரிய பட்டியலையே விளக்கமாக வழங்கிவிட்டார்… அதிலிருந்து சிறியதாக தான் நான் இப்போது சொல்லியிருக்கிறேன்! அதில், முத்தாய்பான ஒரு விஷயம், இந்த 5 ஆண்டுகளில் புதிதாக, 1 லட்சத்து 82 ஆயிரம் புதிய இலவச மின்சார இணைப்புகளை வழங்கி, கூடுதலாக, 3.6 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.
32.81 லட்சம் ஏக்கரில்...
உங்கள் விளைச்சலில் மட்டுமல்ல, உங்கள் துன்பத்திலும் துணையாக கூட நிற்பவர்கள் தான் நாங்கள். அதனால்தான், ஐந்தாண்டுகளில், இதுவரைக்கும் 32.81 லட்சம் ஏக்கரில் ஏற்பட்ட, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் சேதத்திற்கு, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆயிரத்து ரூ.31 கோடியே 76 லட்சம் நிவாரணமாக வழங்கியிருக்கிறோம். முக்கியமாக, 2024-2025-ஆம் ஆண்டில், வடகிழக்குப் பருவ மழை மற்றும் ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கருக்கு நிவாரணத் தொகையாக, ரூ.289 கோடியே 63 லட்சத்தை, 3 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று 23-ம் தேதி நான் உத்தரவிட்டு தான், இந்த மாவட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அத்துடன், இந்த ஆண்டு கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர்சேதங்களுக்கு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகளுக்கு துணையாக...
இப்படி, உழவர் பெருமக்களின் நலனை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் என்றைக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, உங்களுக்குத் துணையாக இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, இந்த மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வழங்காமல் நான் போகமுடியுமா? முடியாது. நீங்களே நினைப்பீர்கள், அரசு விழாவில் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அரசு விழாவில் அறிவிப்பு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், விவசாயிகளின் கண்காட்சியை, இங்கே மாநாடு போல, மாபெரும் விழாவாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
27 Dec 2025சென்னை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
எனக்கு வழிகாட்டியவர் விஜய்: செங்கோட்டையன் உருக்கம்
27 Dec 2025திருப்பூர், எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று செங்கோட்டையன் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
கர்நாடகா, கார்வார் துறைமுகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம்
27 Dec 2025புதுடெல்லி, கர்நாடக மாநிலத்தில் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கிறார்.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.


