எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தூர் : நியூசிலாந்துக்கு எதிராக இன்று இந்தூரில் இன்று நடைபெறும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றிப்பெற்று ஒருநாள் அணிக்கான தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்திற்கு மீண்டும் முன்னேறுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
கடைசி ஒருநாள்...
சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம், இந்தூரில் இன்று நடைபெறவுள்ளது.
3-வது இடத்தில்...
டி20 தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திலும் இந்திய அணி உள்ளது. ஒருநாள் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. எனினும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். அது நடந்துவிட்டால் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் 2 இடங்களில் உள்ள ஒரே அணி என்கிற பெருமையை இந்திய அணி அடையும்.
இங்கி., முன்னேற்றம்...
2-வது ஒருநாள் ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. இங்கிலாந்துக்கு முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் முதல் 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.
வலுவான நிலை...
முதல் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் அசத்திய நிலையில், 2வது போட்டியில் பவுலர்கள் மிரட்டினர். சுப்மன்கில் சூப்பர் பார்மில் உள்ளார். ரோகித்சர்மா, கோலி, சூர்யா, பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் சிராஜ் மிரட்டி வருகிறார். தொடரை கைப்பற்றிவிட்டதால் இன்று சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
ம்ரான் மாலிகிற்கு...
சிராஜ், அல்லது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஷாபாஸ் அகமது, சாஹல் காத்திருக்கின்றனர். இன்றும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா களம் இறங்கும். மறுபுறம் நியூசிலாந்து முதல் போட்டியில் கடைசி வரை போராடிய நிலையில், 2வது போட்டியில் பேட்டிங்கில் நிலைகுலைந்தது. இன்று ஆறுதல் வெற்றிக்காக போராடும். அந்த அணியில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. காயத்தில் இருந்து மீண்டால், இஷ் சோதி ஆட வாய்ப்பு இருக்கிறது.
116-வது முறை...
இரு அணிகளும் இன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 116வது முறை சந்திக்க உள்ளன. இதற்கு முன் மோதிய 115 போட்டிகளில் இந்தியா 57, நியூசிலாந்து 50 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 7 போட்டி ரத்தாகி உள்ளது.
ராசியான மைதானம்...
இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவுக்கு ராசியான மைதானமாகும். இங்கு இதுவரை இந்தியா (இங்கிலாந்துக்கு எதிராக 2, ஆஸி, தெ.ஆ, வெ.இண்டீசுக்கு எதிராக தலா 1) 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்து 3, சேசிங்கில் இரண்டில் வென்றுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்சில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா 2011ல் 418/5 ரன் குவித்தது தான் அதிகபட்சம். அந்த போட்டியில் சேவாக் இரட்டைசதம் (219ரன்) விளாசினார்.
புதிய சாதனைக்கு வாய்ப்பு..?
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் தற்போது இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இந்தியா இதே புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இன்று இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறும்.
டி.20 தரவரிசையிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இன்று வென்றால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் இரண்டிலும் முதல் இடம் பிடித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தும். பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
17 Jul 2025கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய அணிக்கு கோலி மீண்டும் திரும்ப வேண்டும்: முன்னாள் வீரர் வேண்டுகோள்
17 Jul 2025மும்பை: இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் ஓய்விலிருந்து திரும்ப வேண்டும் என்று விராட் கோலிக்கு முன்னாள் வீரரான மதன் லால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
4-வது டெஸ்டில் பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும்: இர்பான்
17 Jul 2025மான்செஸ்டர்: 4-வது போட்டியில் பும்ரா களம் இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விருந்தோம்பல் சேவையை சிறப்பாக நடத்த வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
17 Jul 2025சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
-
கம்யூனிஸ்டுகளை இ.பி.எஸ். அழைப்பது நகைச்சுவையாக உள்ளது: முத்தரசன்
17 Jul 2025சென்னை: கம்யூனிஸ்டு கட்சிகளை இ.பி.எஸ். அழைப்பது நகைச்சுவையாக உள்ளது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிகளில் விழிப்புணர்வுக்காக ஆயில் போர்டுகள் வைக்க அறிவுறுத்தல்
17 Jul 2025புதுடெல்லி: மாணவர்களின் விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் 'ஆயில்' போர்டுகள் வைக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.
-
மகளிர் முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
17 Jul 2025சவுத்தம்டான்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
சுற்றுப்பயணம்...
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி